Home சூடான செய்திகள் உடல்ரீதியாய் பெண்ணை திருப்தி செய்ய முடியாதா?

உடல்ரீதியாய் பெண்ணை திருப்தி செய்ய முடியாதா?

33

நீ செக்ஸ் புக் படிப்பாயா என்று கேட்டிருந்தாய்? யே…… தூ…… என்று போலியாய் பொய் பேச எனக்கு விருப்பமில்லை. கல்லூரியில் படிக்கும்போது திருப்பூரைச் சேர்ந்த சுசித்ரா சில புத்தகங்கள் கொண்டு வருவதுண்டு. எங்கள் வகுப்பில் போட்டி போட்டுக்கொண்டு கும்பலாய் நின்று படித்துவிட்டு ஓ…… என்று வாய் விட்டு சிரிப்பார்கள். எனக்கு கும்பலாய் நின்று படிக்கவோ, வாய் விட்டு சிரிக்கவோ முடியாது. மாலையில் வாங்கி வந்து அணுவணுவாய் ரசித்துப் படிப்பேன்.

கல்லூரி விட்டு நின்ற பின் எவ்வளவு ஆசை இருந்தாலும் அந்த மாதிரி புக்ஸ் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணால் கடையில் சென்று வாங்கவும் முடியாது. டவுன் பக்கம் போகும்போது இன்று எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பேன். ஆனால் புத்தகக்கடை வாசலை மிதித்ததுமே குமுதமும் ஆனந்த விகடனும் வாங்கிக்கொண்டு திரும்பி விடுவேன்.

நான் படித்த புத்தகங்களில் பச்சையாக எதுவும் இருக்காது. சினிமா நடிகைகள் தாங்கள் வளர்க்கும் நாயை தவறாக பயன்படுத்துவதாக படித்தேன். மேலும் நான் படித்த பல புத்தகங்களிலும் உடலுறவின் பல்வேறு நிலைகள் பற்றியே அதிகம் இருக்கும். அதை மிகவும் ரசிப்பேன், இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமே, ஏன் இப்படியும் செய்யலாமே என்று நிறைய யோசிப்பேன். ஆடையில் வெரைட்டி, ஆபரணத்தில் வெரைட்டி, உணவில் வெரைட்டி என்று இருக்கும்போது மனமொத்த இருவர் திருமணம் செய்துகொண்டு இதிலும் வெரைட்டி தேடுவதில் தவறொன்றுமில்லையே!

இந்த விஷயத்தில் என் கல்லூரித்தோழி சுசித்ராவின் வாழ்க்கை மிக சந்தோஷமாய் இருக்கிறது. அவளது 19 வயதில் திருமணம். இரண்டு பெண் குழந்தைகள். இருவரையும் பாட்டி வீட்டில் படிக்க வைத்துக்கொண்டு இவள் பெங்களூரில் கணவருடன் இருக்கிறாள். வருடத்திற்கு ஒரு முறை போலதான் சந்திப்பேன். எங்கள் ஹாஸ்டலில் அவள் அடித்த லூட்டி சற்று அதிகம். திருமண வாழ்க்கையில் இவள் அதிகம் துன்பப்படுவாள் என்று நினைத்தேன். மாறாக இவள் தான் சந்தோஷமாய் இருக்கிறாள்.

ஒரு நாள் கூட ‘அது’ இல்லாமல் இருக்க மாட்டார்களாம் (மென்சஸ் டைமிலும் கூட). ஏதோ ஒரு வகையில் போதும் போதும் என்று கெஞ்ச வைத்துவடுகிறாராம். தனித்தனியாக துண்டுப் பேப்பரில் அவரவர் விருப்பத்தை எழுதி, சுருட்டிப்போட்டு குலுக்கி தினம் ஒரு பேப்பராக எடுத்து அதை பயன்படுத்துவார்களாம். அவர் அலுவலகம் போன பிறகு, எல்லா பேப்பரிலும் இவள் விருப்பங்களை எழுதி வைத்து விட்டு மற்றதை எடுத்து விடுவாளாம். அவருக்கு அது தெரிந்தாலும் தெரியாத்துபோல லேசாக சிரித்துக்கொண்டே அவளை சந்தோஷப்படுத்துவதைக் கேட்டு பிரமித்துப்போகிறேன்.