Home சூடான செய்திகள் உடலுறவு முடிந்ததும் உறக்கமா!? (தம்பதியர்களுக்காக)

உடலுறவு முடிந்ததும் உறக்கமா!? (தம்பதியர்களுக்காக)

39

அருமையான உறவை முடித்த பின்னர் அழகான தூக்கம் கண்ணை க் கட்டும். ஒரு ‘தேங்க்ஸ்டா’ கூட சொல்லத் தோணாமல் நிறையப் பேர் கையைக் கா லை நீட்டி தூங்கப் போய் விடு வார்கள். இந்தப் பழக்கம் கிட் டத்தட்ட அத்தனை பேருக் கும் உண்டு. சரி, ஏன் உறவை முடித்த பின்னர் ஆழ்ந்த தூக்கம் வருகிறது தெரியுமா?
இந்த உறவுக்குப் பிந்தைய தூக்கம் உடலுக்கும், மனதுக்கும் உண் மையில் மிகவும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். உண்மையில், அருமையான உறவுக்குப் பின்னர் நல்ல தூக்கம் வரும், அது உட லையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு உறவுக்குப் பின்னர் உடல் இயற்கை யாகவே சோர்வடைகிறது. இதனால் தான் அந்தத் தூக் கம் வருகிறது.
அதேசமயம், தூக்கம் வருகிறதே என்ப தற்காக உடனடியாக தூங்கப் போய் விடாமல், நமது பார்ட்னருடன் சிறிது நேரம் பேசிக் கொண் டிருத்தல், ஆதர வாக தழுவிக் கொள்ளுதல், அந்த உற வின் அற்புத தருணங்களை பகிர்ந்து கொள்ளுதல் மிகவும் அவ சியம் என்பதும் டாக்டர்கள் தரும் யோசனை.
உறவுக்குப் பின்னர் வரும் தூக்கத்திற்கு சில காரணங்கள் உள்ளன. அதைப் பார்ப்போம்.
இரவு நேரத்தில்தான் நமது உடல் மிகவும் சோர்வடையும். அந்த சமயத்தில் நாம் உறவை யும் மேற்கொள்ளும் போது கூ டுதல் சோர்வை நாம் சந்திக்க நேரிடுகிறது. நமது உடலை தூக் கம் வேக மாக தழுவ ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்.
உறவின்போது உச்ச நிலையை அடையும் ஆண் விந்தனு வை வெளிப்படுத்திய அடுத்த நொடியே அவனது உடலை சோர்வு முழு மையாக ஆக்கிரமிக்கிறது. ஆணின் உடல் வெளிப்படுத்தும் ஹார்மோன் உடலை வேக மாக சோர் வடைய வைக்கிறது. தூக்க உணர் வு வேகமாக வந்து தழுவுகி றது. உடல் இயக் கத்தின் அதி வேக செயல்பாடுகளும் இந்த தூக்கத்திற்கு இன்னொரு காரணம்.
செக்ஸ் உறவின்போது இதயத் துடிப்பு அதி வேகமாக இருக் கும். அதேசமயம், உடல் அமைதி அடையும்போது அந்த வேகம் குறை ந்து படிப்படியாக நார்மல் ஆகிறது. உறவின் போது நமது மூச்சு ஆக்சிஜனுக்காக அதிக மாக துடிக்கும். உறவு முடியும்போது அதிக அள விலான ஆக்சிஜனை நம து உடல் சுவாசிக் கிறது. ஆக்சிஜன் திடீரென அதிக மாவதால் உடலின் அ னைத்துப் பாகங்களும் வேக மாக ரிலாக்ஸ் ஆகின் றன. இதுவும் தூக்கம் கண்ணைத் தழுவ ஒரு காரணம்.
யாருக்கு உறவுக்குப் பின்னர் வேகமாக தூக்கம் வருகிறதோ, அவர் கள் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம். காரணம் அவர்க ளது உறவு முழுமையாக இருந்திருக்கிறது என்று அர்த்தமா ம். அதே சமயம், சரியாக தூக்கம் வரா விட்டாலோ அல்லது அசவு கரியமாக உணர்ந் தாலோ உறவில் முழுமை இல்லை அல்லது உடல் ஆரோக்கியத் தில் குறை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்கி றார்கள் டாக்டர்கள்.
உறவுக்குப் பின்னர் நமது உடலை நல்ல இயல்புக்குக் கொண் டு வர குளிர்ச்சியான எலுமிச்சை சாறை அருந்தலாம் என்று டாக்டர்கள் அட்வைஸ் தருகிறார்கள். இது நம்மை மேலும் புத்துணர்ச்சியாக் கவும், நல்ல தூக்கத்தில் மூழகவும் உதவு மாம்.
இது ஆண்களின் கதை. பெண் களைப் பொறுத்தவரை உறவுக் குப் பின்னர் உடனே அவர்க ளுக்குத் தூக்கம் வராது. கார ணம், அவர் களின் உச்ச நிலை உடனடியாக அடங்கி விடாது என்பதால். உற வின் போது பெற்ற அனுபவத்தையும், பரி பூரணத்தையும் அவர்கள் மேலும் சில நிமிடங்களுக்கு நினைத்துப் பார்த்துக் கொண்டிருப் பார்கள். அந்த உணர்விலிருந்தும், நினைவி லிருந்தும் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியாது. இத னால்தான் உறவை முடித்த பின்னர் தூங்கப் போய் விடாமல், அனு சரணையாக, ஆதரவாக, காதலோடு அவர்களுடன் சில நிமிடங் களை ஆண்கள் பகிர்நது கொள்ள வேண்டும் என்கிறா ர்கள். அப்போ துதான் ஆணு க்கு மட்டுமல்லாமல், பெண் ணுக்கும் அன்றைய உறவு முழுமை அடையும் என்பது டாக்டர்கள் கூறும் கருத்து.
உடல் ரீதியான தேவைகளுக்காக மட்டும் ஒரு பெண்ணும் சரி, ஆணும் சரி உறவை நாடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உடலையும் தாண்டி மனதையும் இங்கு முக்கியமாக கருத வேண் டும். மனதின் உணர்வுகளும் முழுமையாக பூர்த்தியாகும் போது தான் எந்தவிதமான உறவாக இருந்தாலும் அது உண்மையிலேயே முழுமையடைய முடியும்.