Home பாலியல் உடலுறவில் துணையை அலுப்படைய செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்!

உடலுறவில் துணையை அலுப்படைய செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்!

34

தாம்பத்தியம் என்பது இருவரும் விரும்பி இணைய வேண்டிய பந்தம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது என்பார்கள். அதே போல தான், இருவரில் ஒருவர் மட்டும் விரும்பி செயல்பட்டால் அந்த உறவில் இன்பம் இருக்காது.

எனவே, தாம்பத்திய உறவில் கணவனாக இருந்தாலும், சரி, மனைவியாக இருந்தாலும் சரி தொடர்ந்து ஒருவரை வற்புறுத்தி உறவில் ஈடுபடுவது தவறான அணுகுமுறை தான்.
பொதுவாக உறவில் ஈடுபடும் போது பெண்கள் சரியாக நாட்டம் இல்லாமல் இருந்தால், நம் நாட்டு பெண்களுக்கு கூச்சம் அதிகம் என சிலர் எண்ணலாம்.

ஆனால், உறவில் ஈடுபடும் போது பெண்களிடம் வெளிப்படும் சில சுபாவங்கள், அவருக்கு உங்களோடு உறவில் ஈடுபடுவதில் நாட்டம் இல்லை, அல்லது உங்கள் செய்கை / நடவடிக்கைகளால் அவர் சலிப்படைந்து உள்ளார், என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

அறிகுறி # 1
தினமும் நீங்கள் உறங்கும் நேரத்திற்கு உறங்க செல்லாமல், நீங்கள் உறங்கிய பிறகு அல்லது முன்னேற என வெவ்வேறு நேரங்களில் உறங்க செல்வது.

அறிகுறி # 2
உறவில் ஈடுபடும் போது, சரியாக ஒத்துழைப்பு தராமல் இருப்பது. இல்லையேல், நாட்டம் இல்லாமல் காணப்படுவது.

அறிகுறி # 3
நீங்களாக உறவில் ஈடுபட அழைத்தாலும், ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, தொடர்ந்து தட்டிக் கழித்துக் கொண்டே இருப்பது.

அறிகுறி # 4
ஒரேவேளை நீங்கள் அழைத்து உறவில் ஈடுபட சம்மதித்தாலும், எப்போது முடியும் என்பது போன்ற உணர்வில் காணப்படுவது.

அறிகுறி # 5
உறவில் ஈடுபடும் போது நீங்கள் விரும்பி கேட்கும் முத்தமிடுதலோ, தீண்டுதலோ போன்ற விஷயங்களுக்கு முழுமையாக மறுப்பு தெரிவிப்பது.