Home ஜல்சா இளம்பெண் கற்பழிப்பு: காணொளியை பேஸ்புக்கில் வெளியிட்ட கும்பல்

இளம்பெண் கற்பழிப்பு: காணொளியை பேஸ்புக்கில் வெளியிட்ட கும்பல்

35

உத்திரபிரதேசத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர், அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

முஸாபர் நகரில் நடந்துள்ள இந்த, கற்பழிப்பை காணொளி எடுத்து, எடுத்து குற்றவாளிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண், பொலிஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அதில் 5 பேர் என்னை கற்பழித்தனர், மற்றவர்கள் காணொளி எடுத்தனர் என்று கூறியுள்ளார்.

பாஸ்தாடா கிராமத்தில் இருந்து இளம்பெண்ணை கடத்திவந்து கற்பழித்த அந்த கும்பல், இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளது.பயத்தினால் பாதிக்கப்பட்ட பெண் அப்போது பொலிசில் புகார் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் குற்றவாளிகள் இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பெண்ணை கற்பழித்த வாலிபர்கள், ராஷித், வாஷிக், அப்துல் ரகுமான், சோகான், அபுல், மொனு, ராகுல், சாலு ஆகியவர்களுக்கு எதிராக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.