Home அந்தரங்கம் இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த பெண்கள்..!!

இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த பெண்கள்..!!

42

நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே, உருப்படியா ஒரு வேலையும் பார்க்கத் தெரியலே, புத்திசாலித்தனமா நடக்கத் தெரியுதா, விவரமா இருக்கத் தெரியுதா என்ற வசனங்களும், வசவுகளும், 80களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் சர்வ சாதாரணமாக ஒலித்த ஒன்று. ஆனால் இன்று அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

5 வயதுப் பையனிடம் போய் பேசி நல்லபடியாக மீண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பேசுகிறார்கள் இக்காலத்துப் பொடியர்களே. அப்படி இருக்கையில் இளைஞர் குலம் எப்படி தீயாக இருக்கும்.

இருக்கிறது. செக்ஸ் மட்டுமே இளைஞர் குலத்தின் ஒரே குறிக்கோள் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்டது.

ஒரு பெண் ஆணைக் கவர முன்பெல்லாம் அழகுதான் முக்கியமாக இருந்தது.

சேலையில் வரும் பெண்களை சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு மாடர்ன் டிரஸ் ஓ.கே.வாக இருக்கும். கவர்ச்சிகரமான உடைகளை விட சிம்பிளான உடையில்தான் நீ தேவதை போல இருக்கிறாய் என்று கூறுவோரும் உண்டு. இந்த எட்டு கெஜ புடவையைத் தூக்கிப் போட்டு விட்டு ஜில்லென்று ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று சிலாகிப்போரும் உண்டு.
சிலருக்கு பெண்களின் கண்கள் பிடிக்கும். கண்ணை வைத்து ஏகப்பட்ட கவிதைகளையும் வடித்துத் தள்ளுவார்கள். சிலருக்கு மூக்கு பிடிக்கும். சிலருக்கு உதடு பிடிக்கும். உன் காது இருக்கே, அதுலதான் கவர்ச்சியே இருக்கு என்று ‘கலாய்ப்போரும்’ உண்டு.

பெண்களின் இடுப்புக்கு எது எதையோ உதாரணம் காட்டி கவிதைகளையும், வசனங்களையும் வடித்து விட்டது இந்த ஆண்குலம். இடுப்பழகை வர்ணிக்க அவர்களுக்கு வார்த்தைகளும் போதாது. அந்தக் காலத்தில் மின்னல் இடை என்றார்கள், இந்தக் காலத்தில் இஞ்சி இடுப்பாக்கி விட்டார்கள்.

 

சிலருக்கு பெண்களின் கால்கள் பிடிக்கும். பெண்களின் வாளிப்பான கைகளை சிலர் ஆசையாக வர்ணிப்பார்கள். சிலருக்கு முன்னழகு பிடிக்கும், சிலருக்குப் பின்னழகு பிடிக்கும்.

இதெல்லாம் ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும்போது மன லேபில் ‘டிஸக்சன்’ செய்யும் பொதுவான விஷயங்கள். ஆனால் இக்காலத்து இளைஞர்களுக்கு பெண்களிடம் இன்னொரு விஷயம்தான் மிக மிகப் பிடித்திருக்கிறதாம். அது – பணம்.
செக்ஸியான + சவுகரியமான வேலையில் உள்ள பெண்ணைத்தான் இப்போதைய இளைஞர்களுக்குப் பிடிக்கிறதாம். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த டிரண்ட் வந்து ரொம்ப காலமாகி விட்டது.
உடல் ரீதியான கவர்ச்சிக்கு ஆண்கள் முக்கியத்துவம் தரும் அதே வேளையில், கை நிறைய சம்பாதிக்கும், நன்கு படித்த பெண்கள்தான் தங்களுக்கு ‘சேஃப்’ என்கிறார்கள்.

”செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே, எத்தனை நாளைக்குதான் செக்ஸிலேயே மூழ்கிக் கிடக்க முடியும். அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறைய உள்ளது. அதற்கு பணம் தேவை. அந்தப் பணம் இருவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை வண்டியை சிரமமின்றி ஓட்ட முடியும். அதற்காகத்தான் சம்பாதிக்கும் பெண்ணை விரும்புகிறேன்.

 

 

அவர் என்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் இன்னும் சந்தோஷம். அதேசமயம், வெறும் பணத்துக்காக மட்டும் நான் பெண்ணை விரும்புவதில்லை. கூடவே எனக்கேற்ற செக்ஸியான பெண்ணாகவும் அவர் இருக்க வேண்டும்” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
இதுகுறித்து மன நல மருத்துவர் ஒருவர் கூறுகையில், அக்கால இளைஞர்களைப் போல இப்போது யாரும் இல்லை. மிகப் பெரிய அளவிலான மன மாற்றம் இக்காலத்து இளைஞர்களிடையே வளர்ந்துள்ளது. இது ஆரோக்கியமானது.

வெறும் செக்ஸ் வேலைக்கு ஆகாது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். உடல் ரீதியான ஆர்வம், ஈடுபாடு, மோகம் ஒரு கட்டத்துக்கு மேல் நீர்த்துப் போய் விடுகிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். அதைத் தாண்டி பார்க்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கைக்கான தேவை புரிகிறது.
அவசரப்பட்டு விவாகரத்து செய்கிறார்கள், அவசர கோலத்தில் கல்யாணம் செய்கிறார்கள், வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்றெல்லாம் இக்காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட பெரும்பாலானோர் அப்படி இல்லை.
ஒரு பெண்ணைப் பார்த்து இவள்தான் எனது மனைவி அல்லது காதலி என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு அவளது உடல் அழகை மட்டுமல்லாமல், நமது பொருளாதார போராட்டங்களுக்கு இவள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருப்பாள் என்பதையும் பார்க்கின்றனர் இளைஞர்கள்.

பெண்கள் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள் ஆண்கள் என்று இதை கூறி விட முடியாது. மாறாக, பொறுப்புடன் யோசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணின் அழகும், கவர்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை ஆணும், இவனிடம் காணப்படும் வாட்டசாட்டம், வசீகரம் நிரந்தரமல்ல. வயதாகும்போது இவையும் சேர்ந்தே தளரும், தொய்வடையும் என்பதை ஆணும், பெண்ணும் புரிந்து வைத்துள்ளனர்.

ஆண்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் கூட ‘மோகம் முப்பது, ஆசை அறுபது’ என்பதை தூர வைத்து விட்டு அதற்குப் பிறகு வாழப் போகும் நீண்ட வருடங்களை வசந்தமாக வைத்துக் கொள்ள இவன் உதவுவானா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் தவறல்ல. இப்படி இருவருமே திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு வாழக்கையைத் தொடங்கும்போது இருவரும் இணைந்து வாழும் காலம் நிச்சயம் கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரந்தரமாகும் என்கிறார்.