Home குழந்தை நலம் ஆண் குழந்தைகளை அச்சுறுத்தும் நோய்

ஆண் குழந்தைகளை அச்சுறுத்தும் நோய்

14

autism_002-300x227ஆட்டிசம் என்பது நோய் அல்ல. மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறே.
பொதுவாக பிறந்த குழந்தையின் 2வது வயதில் இருந்து இந்த குறைப்பாட்டை நாம் கண்டுகொள்ளலாம்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலகத்துடன் இணைந்து வாழ்வதில் அதிக நாட்டம் கொள்வதில்லை.

எப்போதும் தனிமையில் தங்கள் நேரத்தை செலவிடவே விரும்புவார்கள். கடந்த 2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகளவில் 1000 குழந்தைகளுக்கு ஒருவர் என்ற அளவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்

· இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சமூகத்துடன் இணைந்து வாழ்வது என்பதை அறியாமல் இருப்பார்கள்.

· தம் சம வயது உடையவர்களிடம் நட்பு ஏற்படுத்திகொள்ள விரும்பமாட்டார்கள். மேலும் இவர்கள் பேசும் திறமையற்றவர்களாக இருப்பார்கள்.

· மற்றவர்களிடம் உரையாடும்போது அவர்களது கண்களை பார்ப்பதை தவிர்ப்பார்கள். அவர்களின் பெயரை சொல்லி அழைத்தாலும் அதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்.

· மற்றவர்களின் மனது அறிந்து பேச தெரியாதவர்கள். அடுத்தவர்களுடம் சகஜமாக பேசுவதற்கு அஞ்சுவார்கள்.

· பரபரப்பான நேரங்களில் (நேர்முக தேர்வு, விளையாட்டு) மிகவும் பதட்டமாக இருப்பார்கள்.

· எப்போதும் எதைப்பற்றியாவது சிந்தனை செய்துகொண்டே இருப்பார்கள்.

ஆட்டிசத்துக்கான காரணங்கள்

ஆட்டிசத்துக்கான காரணத்தை இதுவரை விஞ்ஞானிகள் சரியாக கண்டுபிடிக்கவில்லை. எனினும் மரபு ரீதியான காரணங்களும் சுற்று சூழலும் ஆட்டிசம் பாதிப்புக்கு முக்கிய இடம் வகிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மூளையில் ஏற்படும் சில பாதிப்புகளும் ஆட்டிசம் ஏற்படுவதற்கு காரணமாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைகள்

ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து அவர்களை ஓரளவு குணப்படுத்தலாம்.

ஆட்டிசத்தின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.

அதன்படி அவர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகளில் சில

நடத்தை தொடர்பான சிகிச்சைகள்: பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை போன்றவற்றால் அளிக்கப்படும் சிகிச்சைகளை விட உளவியல் ரீதியாக வழங்கப்படும் சிகிச்சைகளே அதிகம்.

எனவே அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை மனதில் பதியவைக்கவேண்டும். மேலும் அவர்கள் வேலைகளை அவர்களே செய்ய பழக்க வேண்டும்.

சமூகபற்று ஆகியவற்றை வளர்க்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் நடத்தை மற்றும் வெளியுலக தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்திகொள்ள முடியும்.

மருந்துகள்

ஆட்டிசத்துக்கு நேரடி சிகிச்சைகள் இல்லையென்றாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளான கோபம், மன அழுத்தம் ,உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்கள் சில சிகிச்சைகளை அளிப்பார்கள்.

மேலும் அதனால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆண்டிசைகோடிக்(antipsychotic) மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மேலும் திடீரென ஏற்படும் உணர்ச்சி மற்றும் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி ஆகியவற்றை குறைக்கவும் மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

மேலும் அவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதில் பெற்றோர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு தொடர் சிகிச்சைகள் மூலமாக ஆட்டிசத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.