Home அந்தரங்கம் ஆண்கள் வாய்வழி உறவை அதிகம் விரும்புவது ஏன்?…

ஆண்கள் வாய்வழி உறவை அதிகம் விரும்புவது ஏன்?…

81

உடலுறவு என்பது ஆண், பெண் இருவருக்குமே சுகம் தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உச்சத்தை அடைவதே இலக்கு.

ஆனால் உச்சத்தை அடைய இருவர் எடுக்கும் முயற்சிகளும் செயல்களையும் நன்கு கவனித்தால் இருவருக்குமான விருப்பம் வேறுவேறாக இருப்பது நமக்குப் புரிய வரும். உச்சம் தான் இலக்கு என்றாலும் இருவரும் அதை செயல்படுத்தும் முறைகள் வேறுவேறு.

குறிப்பாக, ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவதை விடவும் வாய்வழியாக உறவு கொள்வதில், அந்தரங்க உறுப்புகளில் நாவால் வருடுவதையுமே அதிகமாக விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் தான். அதை வெறுமனே உடல்ரீதியான காமமாக மட்டுமே கருத முடியாது. அதையும் தாண்டி, ஆண், பெண் உறவு மேம்படுவதற்கான சில விஷயங்களையும் அதில் உங்களால் பார்க்க முடியும்.

ஆண், பெண் இருவருக்குமான உறவுகளின் வலிமையைக் கூட்டுதற்கும் இந்த வாய்வழி உறவு துணைபுரிகிறது. அது மனம் மற்றும் உணர்வு ரீதியாக இணைப்பைத் தூண்டிவிடுகிறது.

உடலின் எந்தெந்த பாகங்கள் எப்படி உணர்ச்சிகளுக்கு ஆட்படுகின்றன என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வழியாக இதைப் பார்க்கிறார்கள். அதனாலேயே பெண்களின் உடல் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக ஆண்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.

வாய்வழியாக உறவு கொள்ளும் போது பெண்கள் தங்களுடைய கைகளைக் கொண்டு, ஆண்களின் தலையைக் கோதிவிடுவது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தோள் மற்றும் முதுகை சுகத்தால் கீறிவிடுவது போன்றவற்றை ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

உடலுறவில் ஒருவித உச்சத்தை மட்டுமே எட்ட முடியும். அதோடு வாய்வழியாக உறவு கொள்ளும்போது, பல நிலைகளில் பலமுறை உச்சகட்டத்தை எட்ட முடியும்.

வாய்வழி உறவில் பெண்ணின் உணர்ச்சிப் பிரதேசத்தைத் தீண்டுவதில் ஆண்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

ஆண்களுக்கும் உடல்ரீதியாக பெண்ணைத் திருப்திப்படுத்தினோமா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்து விடுபட முடியும். ஆண்களின் மனஅழுத்தமும் குறையும்.

தாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பது குறித்த சந்தேகம் குறையும். உடலுறவில் அதை ஆண்களால் முருதாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.