Home பாலியல் ஆண்களின் சிறுநீருடன் விந்தணு வெளிவருவதற்கான காரணங்கள்!!!

ஆண்களின் சிறுநீருடன் விந்தணு வெளிவருவதற்கான காரணங்கள்!!!

44

lankabbc-3பொதுவாக ஆண்களுக்கு சிறுநீர் வழியாக விந்தணு வெளியேறுவது அரிதான ஒன்றே. ஆனால் இவை நடப்பதற்கு இரண்டு பொதுவான காரணங்கள் உள்ளன. ஒன்று சுக்கியன் அழற்சி என்ற மருத்துவ பிரச்சனையால் ஏற்படுவது. இது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால் இந்நிலை ஏற்படும். மற்றொன்று, பிற்போக்கு விந்துதள்ளல். அதாவது விந்துதள்ளல் ஏற்படும் போது விந்தணு ஓட்டம் பின்னோக்கி இருந்து, மாட்டிக் கொள்வதால் உண்டாவது. இது சிறுநீர்ப்பை பிரச்சனைகளால் ஏற்படுவது. இந்த இரண்டு நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம். இருப்பினும் அது வரைக்கும் அசௌகரியமும் வலியும் ஏற்படலாம்.

இப்பிரச்சனை மிக தீவிரமாக மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வேறு ஏதோ பெரிய பிரச்சனை என்பதற்கான அறிகுறி இது. தங்கள் சிறுநீரில் விந்தணுவும் சேர்ந்து வெளியேறுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் இந்த பிரச்சனையின் காரணத்தை கண்டுபிடிக்க உடனே ஒரு மருத்துவரின் உதவியை நாடிடுங்கள். பொதுவாக வெளியேறுவது விந்தணுவா என்பதை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறும் சளி அல்லது பஸ் ஆகியவற்றை பார்க்கும் போது, அதுவும் கூட விந்தணு போலவே தெரியும்.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம்.

சிறுநீர் வழியாக விந்தணு வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது, புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் அல்லது அழற்சி. இதனை மருத்துவ ரீதியாக “புரோஸ்டேடிடிஸ்” என கூறுவார்கள். விந்து உற்பத்தி மற்றும் வெளியேறுவதற்கு புரோஸ்டேட் சுரப்பி உதவிடும். சில மருத்துவ நிலைபாடுகளினால் இந்த சுரப்பியில் நீண்ட கால மற்றும் தீவிர வீக்கம் ஏற்படலாம். சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது சிறுநீர்ப்பை இடிக்க கூடும். இதனால் சிறுநீர் கழிக்கும் அதே நேரத்தில் சிறிதளவு விந்தணுவும் வெளியேறும். சிறுநீரில் போதிய அளவில் விந்தணு இருந்தால், சிறுநீர் வெளியேறும் போது அவை மேகமூட்டம் போல் காட்சி தரும். ஏதோ ஒரு பிரச்சனை என்பதற்கான முதல் அறிகுறியே இது.

பொதுவாக ஆண்கள் போதிய அளவில் விந்துதள்ளலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது வளர்ச்சியடைய சில காலம் ஆனாலும் கூட, காம உணர்வு ஏற்படும் போது, உடலுறவில் ஈடுபடாமல் போனாலோ அல்லது சுயஇன்பம் காணாமல் போனாலோ, உங்கள் புரோஸ்டேட் சுரப்பியில் அளவுக்கு அதிகமான விந்தணு சேர்ந்துவிடும். இது ஒன்றும் ஆபத்தான விஷயம் இல்லை தான். இப்படி தேங்குவதால் புரோஸ்டேட் சுரப்பி வெடித்து விடும் என்றெல்லாம் கிடையாது. இதற்கு சரியான தீர்வு, விந்துதள்ளல் தான். அப்படி நடக்கும் போது வீக்கமும் மெதுவாக குறையத் தொடங்கும்.

பிற்போக்கு விந்துதள்ளல்.

சிறுநீரில் விந்தணு வெளியேறுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக கருதப்படுவது பிற்போக்கு விந்துதள்ளல். வடிகுழாய் வழியாக உடலை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக சிறுநீர்ப்பைக்குள் விந்தணு பின்னோக்கி செல்லும் நிலையே இது. விந்துதள்ளலின் போது சிறுநீரையும் விந்தணுவையும் பிரிக்க நடைபெறும் சிறுநீர்ப்பை சுருக்கம் நடைபெறாததால் ஏற்படுவதே இந்த நிலை. இந்த நிலையால் அவதிப்படும் ஆண்கள் உடலுறவை கொண்ட உடனேயே சிறுநீர் கழிக்கும் போது அதனை மேகமூட்டம் போல் காணலாம். ஆனால் மற்ற நேரங்களில் அப்படி பார்க்க முடிவதில்லை.

மருத்துவரை சந்திக்கவும்.

இந்த இரண்டு நிலைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் முதலில் தேவைப்படுவது முறையான கண்டறிதல். இவைகளை கண்டறிவதற்கு ஒரு மருத்துவரை நீங்கள் அணுகினால், அவர் சில பல சோதனைகளை மேற்கொள்வார். பல நேரங்களில், சோதனைக்காக சிறுநீர் மாதிரியை ஆண்கள் கொடுக்க வேண்டியிருக்கும். இது ஒரு இரண்டு அடக்கு இலக்காகும்; முதலில் விந்து இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு. மற்றொன்று, எவ்வளவு விந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு. இதனால் சிறுநீரில் எப்படி விந்தணு வந்தது என்பதை மருத்துவர் தீர்மானிக்கலாம்.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கான சிகிச்சையும் தடுப்பும்.

நோயாளியின் புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பையும் கூட சோதனை செய்யப்படும். இதனால் மேலும் என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம். புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு பல வகையான சிகிச்சைகள் உள்ளது. உதாரணத்திற்கு, எந்த முறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது பிரச்சனையின் தீவிரம் மற்றும் காரணத்தை பொறுத்து அமையும். புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற மிக முக்கியமான பிரச்சனை இதில் அடங்காது. வீக்கத்தை குறைக்க மருந்துகள் கொடுக்கப்படும். வேறு ஏதேனும் பாலுணர்வு ரீதியான அறிகுறிகள் தென்பட்டால், அவ்வகையான அறிகுறிகளை மேலும் சோதிக்க வேண்டும்

விந்துதள்ளல் பிரச்சனைக்கான சிகிச்சையும் தடுப்பும்.

பிற்போக்கு விந்துதள்ளல் பிரச்சனைக்கும் கூட சில பொதுவான சிகிச்சைகள் உள்ளது. சில மருந்துகளை உண்ணுவதால், விந்துதள்ளலின் போது விந்தணுவும் சிறுநீரும் கலக்காமல் பார்த்துக் கொள்ளும் சிறுநீர்ப்பை. இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சையின் போது துளை போட வேண்டியிருக்கும். இருப்பினும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் மீட்பு காலமும் உங்களை போராட வைத்துவிடும். அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம். அதேப்போல் அறுவை சிகிச்சை என்பது எப்போதுமே சரியாக அமையாது. அது பல எச்சரிக்கைகளை ஏற்படுத்தும். நிறைந்த சிறுநீர்ப்பையுடன் உடலுறவில் ஈடுபடுவதும் கூட ஒரு தீர்வாக அமையும். ஆனால் இப்படி செய்யும் போது உடலுறவை அனுபவிக்க முடியாது.

அதே போன்ற பிற பிரச்சனைகள்.

தங்கள் சிறுநீர் மேகமூட்டத்துடன் காணப்படும் போது அதில் விந்தணு கலந்திருக்கிறது என ஆண்கள் எண்ணுவார்கள். ஆனால் இது ஒன்றும் சிறந்த அறிகுறி இல்லை. தொற்று அல்லது உட்புற அல்லது வெளிப்புற புண் ஏற்பட்டால், சிறுநீரில் பஸ் அல்லது சளி வரலாம். அதுவும் கூட சிறுநீரை மேகமூட்டம் போலவே காட்டும். இவையனைத்தும் ஏதேனும் வைரஸ் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய் மூலம் ஏற்படலாம். இவை இரண்டுமே பரவக்கூடிய ஒன்றே. அதேப்போல் அவை தானாகவே ஆறி விடாது. அதேப்போல் மேகமூட்டத்துடன் சிறுநீர் கழிக்கும் போது, போதிய மருத்துவ உதவியை நாடுவது தான் சிறந்த முறையாகும்.

பெண்களுக்கான பரிசீலனைகள்.

உடலுறவை முடித்த உடனேயே தங்களின் சிறுநீரில் பெண்களுக்கு விந்தணு இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் விந்து, வடிகுழாய்க்குள் நுழைவதில்லை. பெண்கள் தங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்யும் போது, போகும் வழியில் அது கலக்கவே செய்யும். இது பொதுவாக ஒன்றும் பிரச்சனை கிடையாது. கருவுறும் தன்மையை இது பாதிக்காது. அதேப்போல் கர்ப்பமாகும் வாய்ப்பையும் அது பாதிக்காது. உடலுறவுக்கு பிறகு விந்து கசிவது இயல்பு தான். கருவுறும் பாதையை தவிர பிற பாதைக்குள் விந்தணு செல்வதை அல்லது நீண்ட நேரம் வைத்திருப்பதை பெண்களின் உடல் அனுமதிப்பதில்லை