Home அந்தரங்கம் ஆண்களிடம் பெண்கள் கண்டிப்பாக சொல்லக்கூடாத ரகசியங்கள்!

ஆண்களிடம் பெண்கள் கண்டிப்பாக சொல்லக்கூடாத ரகசியங்கள்!

165

காதலன் அல்லது கணவன் என இந்த உறவுகளிடம் கண்டிப்பாக சொல்லக்கூடாத சில வேடிக்கையான விஷயங்களை இந்த பதிவில் காண்போம். இவற்றை பெண்கள் ரகசியமாகத்தான் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் எதிர்பார்க்காத பிரச்சனைகள் எழும் என்பதில் ஐயம் வேண்டாம்.

முதலில் ஆண்கள் பெண்ணிற்கு தன்னை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களிடம் தன்னிடம் உள்ள எல்லா நேரத்தினையும் செலவிட்டு பார்த்துக்கொள்வர்கள். ஒருநிமிடம் பெண் தன்னை மறந்து, தன் காதலையே அல்லது பிடித்திருக்கிறது என்ற தனது விருப்பத்தையோ கூறும் போது, அடுத்த சில நாட்களில் ஆண்களுக்கு அவளிடம் நேரம் செலவிட முடியாமல் போகும். அதான் லவ் ஓகே ஆயிடுச்சேன்னு ஒரு மெத்தனம் தான்.

காதலிக்கும் முன், காதலியிடம் இருந்து சின்ன மெசேஜ் வந்தாலே பெரிதாக கொண்டாடுவார்கள். காதல் ஓகே ஆகும் வரை, செல்லக்குட்டி, பட்டுக்குட்டி என முடிந்தவரை காதல் வார்த்தைகளை பேசி மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்து கொள்வார்கள். அந்த பெண் தனது காதலை சொல்லிய சில நாட்களிலே, பிசியாகி விடுவார்கள். அதற்கென்று அந்த பெண்ணையே பார்த்து கொண்டிருக்க முடியுமா? என்ற உங்களது மனக்குரல் கேட்கிறது.

ஆரம்பத்தில் எல்லையற்ற அன்பையும் காதலையும் கொடுக்கும்போது, அந்த பெண் இவனை காதலித்தால் மணவாழ்க்கை முழுவதும் எல்லையற்ற அன்பும் காதலும் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காதலை ஏற்றுக்கொள்வார். ஆனால் இனிவரும் காலத்தில் அப்படியே சூழல் தலைகீழாக மாறும்போது, அந்த பெண்ணால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் காதல் வாழ்க்கை சண்டையில் முடிகிறது. அப்படியென்றால் காதலை சொல்லாமல் ஆண்களை காக்க வைப்பது சரியா என்ற கேள்வியும் எழும். அப்படியென்றால் இதற்கு என்ன தான் தீர்வு? உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.