Home காமசூத்ரா “அந்த” நேரத்தில், எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகிறார்கள் தெரியுமா?

“அந்த” நேரத்தில், எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகிறார்கள் தெரியுமா?

37

ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக் களால் தீண்டுதல் என பலவித தீண்டல்க ள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரும்புகி ன்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிற து. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூ றியுள்ளதை படியுங்களேன்.
படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த் தோமா என்று இருப்பதை யாரும் விரும்பு வதில்லை. மெதுவாய் ஒருபார்வை. இன்றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின்மூலமே கேட்டு தெரிந்துகொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டால் போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறி விடும். மெது வாய் முன்னேறுங்கள்.

வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும். காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முதுகுப்பிரதேசம் முன்விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச் சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.

மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக்கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொருபகுதியாய் தொடத்தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.

திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியி லும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்