Home சமையல் குறிப்புகள் சேமியா இறால் பிரியாணி!

சேமியா இறால் பிரியாணி!

11

தேவையான பொருட்கள்
சேமியா – 2 கப்
இறால் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி-1
பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூலள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி புதினா தேவையான அளவு
பிரியாணி இலை, ஏலக்காய், கராம்பு பட்டை – 1
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
செய்முறை
இறாலை கரம் மசாலா பவுடர் ,உப்பு, மஞ்சள் தூல், மிளகாய் தூல், தயிர் சேர்த்து பிசைந்து வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை 75% அவிக்கவும்.
இன்னுமொரு பத்திரத்தில் எண்ணெயும் , நெய்யும் இட்டு சூடாக்கி அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கராம்பு பட்டை, வெங்காயம் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கிகொள்ளவும். அதனுடன் நறுக்கப்பட்ட தக்காளி, புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, அவியும் வரை வேக விடவும். பின் சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும். நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும். சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.

Previous articleஉடல் எடையை மெய்ண்டைன் பண்னுவதற்கான ரகசியம்!
Next articleபெண்களுக்கான கர்ப்பம் பற்றிய ஆலோசனைகள்