Home அந்தரங்கம் மனைவியை திருப்தி படுத்துவது எப்படி

மனைவியை திருப்தி படுத்துவது எப்படி

93

K.mp4_snapshot_08.53_2016.06.05_20.02.00 (1)மலரினும் மெல்லியது காமம்’ என்பார்கள். இத்தகைய மென்மையான காமத்தை அனுபவிக்கும் போது வன்முறையை சிலர் கையாளுவார்கள். இந்த முறை சில பெண்களுக்குப் பிடிப்பதில்லை. மென்மையான பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து இதமான அணுகுமுறைகளை விரும்புவார்கள்.

அவர்கள் விரும்பும் வகையில் அதற்கேற்ப இதமாக நடந்து கொண்டால் இன்பத்தை வாரி வழங்குவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். இதமாய், பதமாய் கையாளும் கணவர்களுக்குத்தான் கலவியின் போது அத்தனை சுகமும் தடங்களின்றி கிடைக்கும் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர் படியுங்களேன்.

மனதோடு இணையுங்கள்

தாம்பத்ய உறவு என்பது உடல் ரீதியான விசயம் மட்டுமல்ல. அது மனரீதியான உணர்வு. இதனை பெரும்பாலான ஆண்கள் உணரத் தவறிவிடுவதானால்தான் சிக்கலே உருவாகிறது. எனவே பெண்ணின் மனதை ஜெயிக்கும் ஆணுக்கு மட்டும் உடல் ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரும்பாலான பெண்கள் தங்களின் கணவன்மார்கள் முழுமையாக தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

வலி நிறைந்த உறவு

உறவின் போது கிள்ளுதல், கடித்தல் என வன்முறையை கையாளுவது சில ஆண்களுக்குப் பிடிக்கும். ஆனால் வலி நிறைந்த இத்தகைய உறவுகளை பெண்கள் விரும்புவதில்லை. அந்த நேரத்தில் மென்மையாக தங்களை கையாளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே பெண்ணின் மனதறிந்து உறவில் ஈடுபடும் ஆண்களே ஜெயிக்கின்றனர்.

மெதுவாய் முன்னேறுங்கள்

உறவின் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஈடுபடுபவதை பெண்கள் விரும்புவதில்லையாம். மென்மையான அணுகுமுறையை விரும்பும் அதே நேரத்தில் சீரான வேகத்தில் ஈடுபடவேண்டும் என்று விரும்புகின்றனராம். எனவே உறவின் போது அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

பொறுமையை கடைபிடியுங்கள்

உறவின் போது பொறுமை அவசியம். ஏனெனின் பெண்ணிற்கு மூடு வர சற்று நேரம் பிடிக்கும். அப்பொழுது முன் விளையாட்டுக்களின் மூலம் பெண்ணை தூண்டி விடலாம்.

அந்த நேரத்தில் முத்தமிடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆண்கள் பொறுமையாய் இவற்றை செய்தால் அப்புறம் வேண்டியதை பெண்ணிடம் கேட்டுப் பெறலாம்.

கிளர்ச்சியாக பேசுங்கள்

உறவின் போது கிளர்ச்சியான பேச்சுக்களை பெண்கள் விரும்புகின்றனராம்.

எனவே அந்த நேரத்தில் போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். நாம் பேசுவதைப் பொருத்து உணர்வின் வேகம் கூடும். படுக்கையறையில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள். படுக்கை அறையில் இதுபோன்ற சின்ன சின்ன விசயங்களை பெண்களிடம் கையாண்டால் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் கணவர் மீது மனைவிக்கு அளவில்லாத பிரியம் உண்டாகுமாம்.