Home அந்தரங்கம் மனைவியின் காமத் தூண்டல்கள் எப்படி இருக்க வேண்டும்?

மனைவியின் காமத் தூண்டல்கள் எப்படி இருக்க வேண்டும்?

95

hot-saree-aunty-photos17ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது… பல ஆண்களையும் போட்டு உடைக்கும் கேள்வி இது. என்னதான் செய்தாலும் என் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லையே என்பது பல ஆண்களின் ரகசியப் புலம்பலாகவும் உள்ளது. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.. சற்றும் அலுத்துக் கொள்ளத் தேவையில்லை… நீங்கள் அணுக வேண்டிய முறையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்.. உங்களவர் உங்களது வழிக்கு வந்து விடுவார்.

ஆண்களைப் பொறுத்தவரை மின்னல் வேகத்தில் மூடுக்கு வந்து அதே வேகத்தி்ல் உணர்வுகளையும் கொட்டி விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை… பூ மாதிரி மென்மையாக ஆரம்பித்து புழுதியைக் கிளப்பும் புயலைப் போல வீறு கொண்டெழுந்து, சுழற்றியடிக்கும் சுனாமி போல மாறி பின்னர்தான் ஓய்வார்கள். இதை சந்திக்க, திறமையாக எதிர்கொள்ள ஆண்களுக்குத்தான் மிகவும் பொறுமை அவசியம்.

உங்களது பெண் துணைக்கு சீக்கிரம் மூடு வரவில்லையா.. உங்களுக்கு நல்ல மூடு இருக்கிறதா, கொஞ்சமும் யோசிக்காமல் ‘கீழே’ போய் விடுங்கள். உங்களது ‘வாய் ஜாலத்திற்கு’ நிச்சயம் அவர் வழி விடுவார், வாசலையும் திறந்து வைப்பார்!.
முன் விளையாட்டுக்களுக்கு அதிக நேரம் கொடுங்கள். அவர் விளையாடுவதை விட நீங்கள் நிறைய விளையாடுங்கள். கை, விரல், வாய் என எதையும் விடாதீர்கள். எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள். உங்களது கைகளில் அவரை ஒரு பூப் போல தூக்கி வைத்துக் கொண்டு சீராட்டி தாலாட்டி கவி பாடி உடலெங்கும் கிளர்ச்சி மழையை பொத்துக் கொண்டு பெய்ய வையுங்கள். பிறகு பாருங்கள் வேடிக்கையை…!

தொட்டால் பூ கண்டிப்பாக மலரும்… உங்களது துணையின் உடலிலும் எங்கு தொட்டால் மின்னல் வெட்டும், எங்கு கை வைத்தால் மழை பெய்யும், எதைத் தொட்டால் இடி இடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு குறி பார்த்து அணுகுங்கள். – உடலெங்கும் முத்த மழை பெய்யுங்கள். சின்னதாக கொஞ்சம், பெரிதாக நிறைய, ஆழமாக அலைஅலையென.. இப்படி முத்தத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கிடைக்கும் இடமெல்லாம் முத்தம் வையுங்கள். உதடுகளையும், அந்தரங்கப் பகுதிகளையும் உங்களது சூடான முத்தங்களால் கொந்தளிக்க வையுங்கள்.

செக்ஸ் வைக்கும் நாளன்று நல்ல எனர்ஜியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். அன்று காலை முதலே உங்களது துணையிடம் டீஸ் செய்தபடியே பேச்சுக்களை வைத்துக் கொள்ளுங்கள். செக்ஸியாக, நகைச்சுவையாக, ஜாலியாக, கவிதைகள் சொல்லி அவரை அப்படியே ஜில்லென்று வைத்திருங்கள்.. அவரது உடலில் அப்படியே ஜிவுஜிவுப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உடலெங்கும் உங்களது நினைவுதான் முழுவீச்சில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

உறவின்போது படுக்கையில் உங்களது தேவைகளை அவர் பூர்த்தி செய்யும்போது அதே மாதிரி அவரது தேவைகளையும் நீங்களே அறிந்து அதைத் திருப்திகரமாக செய்து முடியுங்கள். பெண்கள் பெரும்பாலும் வாய் விட்டு சொல்ல மாட்டார்கள்… நாமாகப் போய்த்தான் நயமாக எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும்… நீங்கள் ஆசை ஆசையாக செய்யும்போது நிச்சயம் அவரது மனசெல்லாம் துடிதுடிக்கும், உடெலங்கும் படபடக்கும்.. உறவும் சிலுசிலுக்கும். – ஒரே மாதிரியான உறவில் தொடர்ந்து ஈடுபடாதீர்கள். இன்று நின்றபடி, நாளை உட்கார்ந்தபடி, அடுத்து படுத்தபடி.. என்று ஒவ்வொரு முறையும் ஒரு தினுசாக, புது வெரைட்டியாக கலந்து கட்டி கலக்குங்கள்…

அதுதான் பெண்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். – உங்களது துணையிடம் போவதற்கு முன்பு, செக்ஸைத் தொடங்குவதற்கு முன்பு அவருடன் நெருக்கமாக அமர்ந்தோ அல்லது மடியில் போட்டபடியோ, அல்லது படுத்தபடியோ நிறைய காதல் மொழி பேசுங்கள் அவரை வர்ணியுங்கள்.. செல்லமே உன் உதடு கோவைப் பழம் போல இருக்கு.. உன் கிளி மூக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் சங்குக் கழுத்துக்கு என்ன கிப்ட் தரலாம்… என்று காதல் மொழி பேசுங்கள்.

உங்களது காதல் மொழி, காமத் தூண்டல்கள், இன்பத்தை கொடுத்தும் லாவகம் என ஒவ்வொன்றும் சீராக அமையும்போது அவரது பொன்மேனி நிச்சயம் உருகும்.. உள்ளுக்குள் ஆசை பெருகும்.. ஏதேதோ உணர்வுகள் தோன்றி அவருக்குள் உங்களை மூழ்கடித்து விடுவார். இப்படி நிறைய… செக்ஸ் உறவு என்பது ஏதோ ஆணும், பெண்ணும் சேர்ந்து படுக்கையில் கொஞ்ச நேரம் அப்படி இப்படி செய்து விட்டு பிறகு வேகம் வேகமாக உறுப்புகளை சேர்த்துக் கொண்டு எல்லாம் முடிந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பிப் படுத்து தூங்கிப் போவது அல்ல… இது இரு உயிரின் சங்கம்…

வெறும் உடல்கள் மட்டும் இணைவது இங்கு வேலைக்கு ஆகாது… உயிரோடு உயிராக இருவரும் கலக்க வேண்டும், உணர்வுகளின் ஒவ்வொரு அணுவிலும் உயிர் கலக்க வேண்டும்… எனக்குள் நீ வா, உனக்குள் நான் மூழ்குகிறேன்… காலம் வரை இருவரும் கலந்திருப்போம்… உயிரோடு, உடலோடு, உணர்வோடு ..!. இப்படித்தான் இருக்க வேண்டும் செக்ஸ்!… எனவே அந்த உணர்வோடு அடுத்த முறை சங்கமத்தை சந்தியுங்கள், சங்கடங்களை தவிருங்கள்.!