Home இரகசியகேள்வி-பதில் திருமணத்திற்கு முன்பு உடலுறவை பற்றி கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய கேள்விகள்

திருமணத்திற்கு முன்பு உடலுறவை பற்றி கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய கேள்விகள்

61

உடலுறவு என்பது தாம்பத்தியத்தின் முக்கிய பங்கு. திருமணம் என்பதன் மூலக் கரு என்பது இனப்பருக்கம் தான். ஆனால், எந்த வகையிலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், உணர்வு மற்றும் உடல் ரீதியாக பக்கபலமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது தான் திருமணம் எனும் இயற்கையின் நியதி. நம் ஊருகளில் உடலுறவை பற்றி பேசுவது தீண்டாமையை விட கொடியது. இதை மாற்றியமைத்தாலே கற்பழிப்பு நிகழ்வுகள் குறைய வாய்ப்புகள் உண்டு. குறைந்தபட்சம் திருமணம் செய்துக்கொள்ள போகும் நபர்களாவது உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

பதில்: செவிவழி செய்திகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் ஓர் இரவிலேயே மூன்று நான்கு முறை உடலுறவில் ஈடுபடலாம் என்று நினைப்பது உண்டு. ஆனால், அவ்வாறு செயல்படுவது பெண்களை உடலளவில் மிகவும் வலுவிழக்க செய்யும். சிலரால் ஒத்துழைக்க முடியும் எனினும், பலரால் முடியாது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பதில்: குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் எந்த நாட்களில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். மாதவிடாய் முடிந்த ஐந்து நாட்களில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்கள் கருத்தரிக்க சிறந்த நாட்கள். இந்நாட்களில் கரு வலிமையுடன் இருக்கும்

பதில்: சிலர் படங்களில், ஆபாசப் படங்களில் காண்பிப்பது போல, ஹால், நீச்சல் குளம், குளியலறை என பல இடங்களில் உடலுறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், நமது நாட்டில் பெண்கள் இதை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். இது உங்களது குணாதிசயத்தின் மீதும் தவறான எண்ணத்தை உண்டாகும்.

பதில்: நிபுணர்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம் என்று கூறினும், அது மிகவும் வலிமிகுந்ததாக இருக்கும் என்பதால் தவிர்க்க கூறுகிறார்கள்.

பதில்: பாலியல் உணர்வு என்பது ஆண்களுக்கு எப்படியோ, அப்படி தான் பெண்களுக்கும். அவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுவது இயல்பு. திருமணத்திற்கு பிறகு இது குறையலாம். நீங்கள் பிரிந்திருக்கும் போது அவர்கள் தொடரவும் செய்யலாம்.

பதில்: இந்நாட்களில் இதை தவிர்ப்பது மிகவும் கடினம். முகப்புத்தகத்தில் கூட ப்ளாக் செய்ய வாய்ப்புள்ளது. அனால், வாட்ஸ்அப்பில் அந்த வாய்ப்பே இல்லை. நண்பர்கள் அனுப்பினால் பார்க்க தான் போகிறார்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும். ஆபாசப் படங்களை கண்டு அதில் ஈடுபடுவது போல உடலுறவில் ஈடுபட விரும்புவோரும் இருக்கிறார்கள்.

டீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா?

பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.