Home இரகசியகேள்வி-பதில் வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம்

வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம்

155

என் பேரு அன்விதா, வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம். அவன் காண்டம் ஏதும் போடாம உள்ளேயே தண்ணியை விட்டுட்டான். என் பிரண்ட்ஸ் எல்லாம், இது பர்ஸ்ட் டைம் என்கிறதால நான் கர்ப்பம் ஆக மாட்டேன்னு சொல்றாங்க. நான் கர்ப்பம் ஆகிடுவேனா? ஆகிட்டா எங்க வீட்டுல என்னை கொன்னுடுவாங்க. ப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாம எப்படி தடுக்கிறது? அவசரம் டாக்டர், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!

விடை:கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகதிலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது.நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும்.
ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும்.இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம்.

இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும். அதே போல இந்த மாத்திரைகள் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்காது. பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட பல பெண்களும் கருவடையாமல் இருக்க இதனை உட்கொள்கிறார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்தில் நீங்கள் வாந்தி எடுத்தால், இன்னொரு மாத்திரையை கூட சாப்பிட வேண்டும்.

பக்க விளைவுகள்:
வயிற்று வலிமயக்கம்வாந்திமார்ப்பகம் மென்மையாதல்மாதவிலக்கு தற்காலிகமாக தடைப்படுதல்பார்வை மங்கலடைதல்கை கால் குடைச்சல்மேலே சொன்ன பக்க விளைவுகள் அதிகமாக இருந்தால், உடனே, மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதே போல காப்பர்-டி என்ற பொருளை உள்ளே பொருத்தினாலும் பயனளிக்கும். இதுவும் உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் வரை பயனளிக்கும்.
இன்னொரு விஷயம். நீங்கள் முதல் முறை உடலுறவு கொள்வதால் கர்ப்பம் ஆக மாட்டீர்கள் என்று உங்கள் தோழிகள் சொன்னதாக சொன்னீர்கள். இது தவறான கருத்து. முதல் முறை உடலுறவு கொண்டாலும் கருப்பிடிக்க வாய்ப்பு உண்டு.

பின் குறிப்புகள்:
இந்த மாத்திரைகள் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனளிக்கும். ஒரு வேளை, அடுத்த நான்கு வாரத்தில் மாத விலக்கு இல்லை என்றால், கர்ப்பத்துக்காக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதே போல் இந்த மாத்திரைகள் அவசரத்துக்காக மட்டும் உபயோகப் படுத்துங்கள். மற்றபடி பாதுகாப்பான உடலுறவுக்கு, ஆணுறை போன்ற மற்ற கருத்தடை சாதங்களை பயன்படுத்துங்கள்.
பாலியல் பரவசநிலை

இன்செஸ்ட் ( Insest ) என்றால் என்ன?
இன்செஸ்ட் என்பது முறை தகாப்புணர்ச்சி என்பதாகும். சகோதரன் – சகோதரி, தந்தை – மகள் ஆகியோரிடையே ஏற்படும் பாலியல் உறவை முறை தகாப்புணர்ச்சி என்கிறோம்.

ஈடிபஸ் சிக்கல் என்றால் என்ன?
தாயை பாலியல் நோக்கில் அணுகுவது ஈடிபஸ் சிக்கல் (காம்ப்ளக்ஸ்) எனப்படும். (முற்காலத்தில் ஈடிபஸ் என்ற மன்னன், தன் தந்தையைக் கொன்று, தாயைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தான். எனவேதான் ஈடிபஸ் என்று அது குறிக்கப்படுகிறது.)

. இம்பொட்டன்ட் ( Impotent )பிரிஜிட்டி ( Frigidity) என்றால் என்ன?
ஆண், பெண்ணை முழு திருப்திப்படுத்த முடியாத நிலையை இம்பொட்டண்ட் என்கிறோம். இது உடலியலாமை என்ற போதிலும், மனமே அடிப்படைக் காரணமாகிறது. உடலுறவில் பெண்ணுக்கு நாட்டமில்லாமல் போவதற்கு பிரிஜிட்டி என்று பெயர். இதற்கும் மனமே அடிப்படை காரணமாகும்.

ஆர்கசம் ( Orgasm ) பேரின்பம் என்றால் என்ன?
ஆர்கசம் என்ற வார்த்தைக்கு மேலோட்டமான பொருளும் உண்டு. ஆழமான பொருளும் உண்டு. பொதுவாக இது பாலியல் அனுபவத்தில் பேரின்பம் அல்லது உச்சக்கட்டம் என்று சொல்லப்படுவது சரியே. இந்த உணர்வு நிலையில் இடுப்பில் உள்ள தசைகளில் இறுக்கம்(Contraction)இருபாலருக்கும் ஏற்படும்.
பெண்ணைப் பொறுத்த மட்டில் உடல் முழுவதும் ஒரு வித உணர்வு வெளிப்படுவதாகும். உடல் உறவில் ஈடுபடும் ஆண்-பெண் அனைவரும் பேரின்பம் (ஆர்கசம்) அடைகிறார்கள் என்று கூறமுடியாது. மேலை நாடுகளில் நடத்தப்பட்ட கின்ஸியின் (முiளேநல) ஆய்வறிக்கையின்படி, பாலியல் பேரின்பம், 10-ல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலை நாடுகளில் பாலியல் உறவிற்கான தனிமை (ஞசiஎயஉல) குடும்பம் மற்றும் சமூக சூழல்களினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை ஆகும். பாலியல் தொடர்பான தயக்கங்கள் ( Inhibitions) அங்கு குறைவு. நம் நாட்டில் பாலியலுக்கான தனிமை அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் அதைப்பற்றிய தயக்கங்களும் அதிகம். எனவே நம் நாட்டில் பாலியல் பற்றிய தொடக்க அறிவு துளியும் கிடையாது. அடுத்து, அதில் பாலியல் பேரின்பம் என்பது என்ன? என்பது குறித்து தெரிந்து இருக்கவும் வாய்ப்பு இல்லை. எனவே உடல் உறவு கொள்பவர்களில் இருவரும் (ஆண்-பெண்) பாலியல் பேரின்பத்தை அடைபவர்கள் இங்கு குறைவே ஆகும்.

. அடிக்கடி உடலுறவு கொள்வதினால் விரைவிலேயே முதுமையும், உடல் தளர்ச்சியும் ஏற்படுமா?
கவலையற்ற, இயல்பான உடலுறவு உண்மையில் மனிதனை உற்சாகப்படுத்துவதோடு, ஆரோக்கியமாக, பல்லாண்டுகள் வாழ வைக்கிறது என்பது அறிஞர்களின் கருத்து. தனது மனம், உடல் மற்றும் தன்னுடன் உடலுறவு கொள்ளும் நபரின் மனம், உடல் இவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொருவரும் அவருக்கு வேண்டிய அளவில் உடலுறவில் ஈடுபடுவதால் எந்த துன்பமும் வராது.

. விளம்பரங்களில் தாது விருத்தி லேகியம், மதன குளிகை வீரிய சொர்ணம் என்று குறிப்பிடப்படுகிறது. இவை போன்றவைகள் வீரியத்தைக் கொடுக்குமா?
உடலுறவில் வீரியமூட்டும் மருந்துகள் எனச் சொல்லப் பட்டு இன்று வரை விற்கப்படும் மருந்துகள் யாவுமே வீரியம் அளிப்பதாக தெரிவதில்லை. உண்மையில் அவை யாவும் மோசடி யானவையே ஆகும். இவ்வாறு விற்கப்படும் மருந்துகளை வாங்கிச் சென்றவர்களின் எண்ணிக்கையும், இதில் குணம் பெற்றோர், பெறாதோர் பற்றிய கணக்கு யாரிடமும் இல்லையாதலால் அது வீரியத்தைக் கொடுக்குமா? கொடுக்காதா? என்று யாருக்கும் தெரிவதில்லை. வாங்கிச் சென்றவர்களும் சரி விற்பவர்களும் சரி, மீண்டும் தொடர்பு கொண்டு அது பற்றி பேசிக் கொள்கிறார் களா? என்றும் தெரியாது. சாலையோரங்களில் விற்கப்படும் இவைகள் நல்ல விற்பனையாகி வருகின்றன. இவைகள் சோதனை செய்யப்பட்டவைகள் அல்ல. ஆண் குறி நீண்ட நேரம் விரைப்புடன் இருக்க பயன்படுத்தப்பட்டு வரும் நவீன கிரிம் மற்றும் ஸ்பிரேயர்கள் நாளடைவில் ஆண் குறியின் விரைப்புத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

. முதல் இரவின்போது பால், பழம், இனிப்பு வைக்கிறார்களே அது எதற்கு?
1. இது ஒரு சமூகப்பழக்கமே ஆகும். இங்கு முன்பின் அறிமுகமில்லாத இருவருக்கு திருமணம் செய்வதால், முதல் இரவிற்கு முன்னதாக அந்த ஆணும், பெண்ணும் மனம் விட்டு பேச வாய்ப்பு ஏற்படுவதில்லை. அது போல் மனத்திருப்தியாக உணவு எடுத்துக் கொள்ளவும் முடிவதில்லை.
2. அப்படிப்பட்ட நிலையில் இருவர் முதல் இரவில் சேரும்போது “பால் சாப்பிடு”, ”பழம் சாப்பிடு” என்று பேச்சு ஒரு முனையில் இருந்து பேசத்தொடங்க அவை உதவுகின்றன. இதைத் தவிர வேறு முக்கியத்துவம் அவற்றிற்கு கிடையாது.

. ஆய்வுக்குழாய் குழந்தை என்றால் என்ன?
பெண்ணிடமிருந்து அண்டணுவும், ஆணிடமிருந்து விந்தும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இவை குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஆய்வுக்குழாயில் கருபிடிக்கச் செய்கிறார்கள். அவ்வாறு கருப்பிடித்த கருமுட்டையை ஊசிமூலமாக எடுத்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி விடுகிறார்கள். அதன்பின் அக்கரு முறையாக வளர்ச்சியடைந்து குழந்தையாகப் பிறக்கிறது. இவ்வாறு ஆய்வுக்குழாய்ச் சோதனை மூலம் குழந்தைகள் பிறக்கச் செய்கின்றனர்.

. மனித உரிமைக்கும் பாலியல் கல்விக்கும் சம்மந்தம் உண்டா?
உண்டு பாலியல் உடலுறவில் பேரின்ப (டீசபயளஅ) அனுபவத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை கீழ்வருபவைகளாகும்:
1. சம்பந்தப்பட்ட ஆணும்-பென்ணும் சமவுரிமை அடிப் படையில் ஒருவரை ஒருவர் மனிதர்களாக மதிக்க வேண்டும்.
2. ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளையும், தேவை களையும் புரிந்து மதித்து, தம்மால் இயன்ற அளவிற்கு அவற்றை நிறைவு செய்ய முயற்சித்தல் வேண்டும். இத்தகையோருக்கே மனிதவுரிமையின் முக்கியத்துவம் தெளிவாகும்.
3. உலகிலேயே பாலியல் மதிக்கப்பட்டு, சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நாடு சுவீடன் ஆகும். அங்கு ‘தந்தை பெயர் தெரியாத’ குழந்தைகள் கேவலமாக மதிக்கப்படுவது இல்லை. திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே நீண்ட காலமாக வாழும் கணவன் – மனைவிகளும் உண்டு. உலகிலேயே மனித உரிமைகளை வளர்த்துக் காப்பாற்றும் நாடு சுவீடன் ஆகும்.
எனவே பாலியல் பற்றியும், மனித உரிமை பற்றியும் உள்ள தெளிவு, மிகவும் பின்னிப் பிணைந்தவை.