Home பாலியல் Sex Tamil Inpam உடலுறவில் ஆர்வம் குறைந்துகொண்டே போக என்ன காரணம்?

Sex Tamil Inpam உடலுறவில் ஆர்வம் குறைந்துகொண்டே போக என்ன காரணம்?

25

உடலுறவில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பலர் புலம்பும் வேளையில், ஏன் சிலருக்கு மட்டும் உடலுறவின் மீது பெரிதாக ஆர்வம் இல்லாமல் போகிறது என்று தெரியுமா?… இதை வெறும் உடல்சார்ந்த குறைபாடு என்று கூறிவிட முடியாது.

இவ்வாறு ஆர்வமில்லாமல் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற சந்தேகங்கள் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

நீங்கள் உங்களது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கூட, மனைவி அழகாக இல்லை என்று மனதுக்குள் நினைத்தால் உங்களுக்கு நிச்சயம் இந்த பிரச்சனை ஏற்படும்.

சரியான நேரத்துக்கோ அல்லது போதிய தூக்கமோ இல்லாமல் பலர் தவிப்பதுண்டு. இது ஆரோக்கியத்தைக் மட்டும் கெடுக்கும் விஷயமல்ல. இந்த தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அது உடலுறவு விஷயத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. சரியாக செயல்பட முடியாமல் போகிறது. எனவே சரியான அளவு தூக்கம் உங்களுக்கு மிகவும் அவசியம்.

மனதில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவுகொள்வது அவ்வளவாக திருப்தி அளிப்பதில்லை.

குடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள், பணப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உடலுறவில் உள்ள நாட்டத்தை குறைக்கும்.

உங்களுக்கு உடல் ரீதியாக குறைப்பாடு இருப்பதாகவும், ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது அதனால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகமும் பலருக்கும் இருக்கிறது. இப்படி நினைத்துக் கவலைப்படுவது உடலுறவில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் திருப்தியையும் குறைத்துவிடும்.

மனதில் இருக்கும் நீண்ட நாள் கவலைகள், என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே உங்களது முகம் எப்போதும் சோகமாகவே காட்சியளிப்பது போன்றவற்றிற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் இதே மன குறையுடன் இருப்பீர்கள்.

சிறு வயது முதலாக காமம் தவறானது என்ற சிந்தனைகளும், உடலுறவு பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதும் உங்களது உடலுறவு இன்பத்தை பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணமாகும்.

உங்களது துணையை திருப்திப்படுத்த வேண்டும், அது முடியுமா? என்று நீங்கள் நினைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் இருவருக்குமே சுகம் கிடைக்காது. எனவே இந்த பயத்தை மனதில் இருந்து ஒதுக்க வேண்டியது அவசியம்.