Home காமசூத்ரா முதலிரவு என்பது உடல்களின் சங்கமத் தொடக்கம்

முதலிரவு என்பது உடல்களின் சங்கமத் தொடக்கம்

36

முதலிரவு என்பது உடல்களின் சங்கமத் தொடக்கம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பரஸ்பரம் இருவரும் மனம் விட்டுப் பேசிப் புரிந்து கொள்வதற்கான இரவு என்றுதான் சொல்ல வேண்டும். திருமணமாகி மூன்று நாட்கள் கழித்து செக்ஸில் ஈடு படுவதே ஆரோக்கியமானது என்கிறார் காம சூத்ராவில் வாஸ்த்யாயனார்.

திருமணத்தன்று மணமகளும் சரி, மணமகனும் சரி அதிகக் களைப்பில் இருப்பார்கள். திருமணப் படபடப்பு அவர்களுக்குள் நீங்கியிருக் காது. எனவே உறவிற்கு அன்றிரவைத் தவிர்த்து விடுதல் நல்லது. அது மட்டுமின்றி தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக் கொள்ளவும், இருவரது விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்து கொள்ளவும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது அவசியம். எனவே உங்களவரிடமும் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி அதை இரண்டு நாட்களுக்குத் தள்ளிப் போடச் சொல்லுங்கள்.

முதல் நாள் இரவே மனம் திறக்கிறேன் பேர்வழி என்று உங்கள் கடந்த காலக் காதல்கள், விரும்பத் தகாத ஆண் நட்புகள் போன்றவற்றைப் பற்றிப் பேச வேண்டாம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். அன்று நீங்கள் பேசுகிற பேச்சு காலத்திற்கும் உங்களவரின் மனத்தில் மறையாமல் இருக்கும். பிற்காலத்தில் அவையே உங்களுக்கு சத்ருவாகவும் அமையலாம்.

அந்த இரவைப் பற்றி நீங்கள் எத்தனையோ பேர் மூலமாக, எத்தனையோ விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த அனுபவங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடக் கூடும். எனவே மற்றவர்களது அனுபவங்களை நினைத்துத் திகிலடையவோ, அதை உங்களுடைய அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ செய்யாதீர்கள்.

திருமணத்திற்காகப் பார்த்துப் பார்த்து நகைகளையும், புடவைகளையும் வாங்கும் நீங்கள் எப்போதாவது உங்கள் உள்ளாடைகளை வாங்குவதில் கவனம் செலுத்தியதுண்டா? திருமண இரவன்று உடுத்திக் கொள்ளவென பிரத்யேக உள்ளாடைகள், நைட்டிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? அவை உங்கள் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டுவதோடு, உங்கள் இருவரது மூடையும் கூட மாற்றும்.

நாள், நட்சத்திரம் என ஏதேதோ காரணங்களுக்காக சிலரது முதலிரவுகள் திருமண மண்டபத்திலேயே வைக்கப்படுவதுண்டு. ஆனால் புதுமண தம்பதியருக்கு இது பெரும்பாலும் தர்மசங்கட உணர்வையே ஏற்படுத்தும். அத்தனை பேர் சூழ்ந்திருக்க அவர்களால் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஒருவித பயமும், டென்ஷனுமே மிஞ்சும். எனவே புது மண தம்பதியரின் பெற்றோர், ஏதேனும் ஹோட்டல்களில் அதற்கு ஏற்பாடு செய்யலாம். தம்பதியருக்கும் புது அனுபவமாக அமையும்.

முதல் முறை உறவு கொள்ளும்போது இருவருக்குமே மனத்தளவில் நிறைய கேள்விகள் இருக்கும். அதனால் உறவு முழுமையடையாமல் போகலாம். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் அது தானாக சரியாகி விடும்.

உங்கள் உடலமைப்பைப் பற்றி உங்களுக்குள் ஒரு கணிப்பு இருக்கும். வயிறு கொஞ்சம் பெரிசா இருக்கே, கை, காலெல்லாம் முடி அதிகமா இருக்கே, மார்பகம் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உறவில் ஈடுபடாதீர்கள். உங்களவர் அவற்றைப் பார்த்து என்ன நினைப்பாரோ என்ற டென்ஷன் வேண்டாம். வீணாக அவற்றைப் பற்றி நினைப்பதால் உங்களால் சகஜமாக இருக்க முடியாமல் போகக்கூடும்.

குழந்தை பற்றிய விஷயத்தை இருவருமே முதலிலேயே பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. உடனடியாகக் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்களா, சில நாட் களுக்குத் தள்ளிப்போடப் போகிறீர்களா என்று கணவருடன் பேசி முடிவெடுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும்போது மாதவிலக்காகி எத்தனையாவது நாள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உடனடியாகக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுப்பவர்கள் பாதுகாப்பான நாட்களில் உறவு கொள்ளலாம் அல்லது முதல் நாள் தொடங்கியே கருத்தடை முறைகள் எதையாவது பின்பற்றலாம். திருமணத்திற்கு முன்பே இதுபற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்ப சூழலோ, பழக்க வழக்கங்களோ செக்ஸ் விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை உங்களுக்குக் கொடுக்காமல் போயிருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் யாரிடமும் வீணான ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்காமல், நல்ல செக்ஸ் புத்தகத்தைப் படித்து உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். தப்பில்லை.