Home சமையல் குறிப்புகள் பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி

பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி

19

பீட்சா பேஸ் – ஒன்று
பன்னீர் – ஒரு பாக்கெட்
சீஸ் – 50 கிராம்
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
தக்காளி சாஸ் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 4

செய்முறை :

* வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.

* பன்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.

* பீட்சா பேஸில் முதலில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

* அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

* வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

* அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, கொரகொரப்பாக பொடித்த மிளகாயைத் தூவவும்.

* கடைசியாக அதன் மீது சீஸைத் தூவவும்.

* இப்போது இதை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..

* சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

* மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசை தவாவை அடுப்பில் மிதமான தீயில் வைத்து செய்யலாம்.