Home அந்தரங்கம் பெண்களுக்கு இந்த நேரங்களில் தான் உணர்ச்சிப் பெருக்கெடுக்குமாம்..

பெண்களுக்கு இந்த நேரங்களில் தான் உணர்ச்சிப் பெருக்கெடுக்குமாம்..

50

உடலுறவு மற்றும் காம இச்சையைத் தூண்டுவது எது என்ற கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு நம்மால் பதில் சொல்லிவிட முடியும். அது ஆண் மற்றுமு் பெண்ணின் உடலில் உள்ள சில பாகங்களால் ஏற்படுகிற ஈர்ப்பு என்று. ஆனால் அதற்கும் மேல் ஒன்று இருக்கிறது. அது தான் நம்முடைய மூளை. மூளை கட்டளையிட்ட பின்பு தான் உடல் அதற்குத் தயாராகும்.

உடலுறவைத் தூண்டும் சக்தியை லிபிடோ சக்தி (libido power) என்று குறிப்பிடுவார்கள். இது ஆண், பெண் இருவருக்கும் வேறுபட்டு இருக்கும். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் உடலுறவு ஆசை உண்டாவது கிடையாது.

ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும் பெண்களுக்கு மாலை மங்கும் நேரங்களிலும் தான் உறவு கொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகமாக உண்டாகுமாம். ஒரு சில சூழல்களில் தான் இருவருக்குமே ஓரே நேரத்தில்,, ஒரே மாதிரியாக காம இச்சை தலைதூக்கிப் பார்க்கும்.

ஒருவர் உடலுறவில் விருப்பம் கொண்டிருந்து, மற்றொருவருக்கு விருப்பம் இல்லாதபோது, கிளுகிளுப்பாகப் பேசி, அவர்களுடைய உடலை மசாஜ் செய்து விடுவதன் மூலம் உணர்ச்சிகளை வேகமாகத் தூண்டிவிட முடியும்.

பெண்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். மற்ற நேரங்களை விட உறவு கொள்ளும் வேளையில் பெண்கள் தங்களுடைய அழகைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள்.

உடலுறவில் முழுமையாக ஈடுபாட்டு, உச்சத்தைக் கொடுப்பது ஆணுடைய வேலை என்று நினைப்பது முற்றிலும் தவறானது. இந்த தவறான எண்ணத்தினால் 30 சதவீதப் பெண்கள் உடலுறவில் உச்சத்தை எட்டுவதே இல்லையாம்.

உடலுறவைப் பொருத்தவரையில், ஆண்,பெண் இருவருடைய ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம்.

உடலுறவில் உச்சகட்டத்தை எட்டிய பெண்கள், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் கற்பனைத் திறனுடனும் தங்களுடை்ய வேலைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்ற பல ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

அதிலும் குறிப்பாக, முதல் நாள் இரவு உடலுறவில் உச்ச கட்டத்தை எட்டும் பெண் அடுத்த நாள் முழுக்க புன்னகையுடன் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மகிழ்ச்சியோடு பழகி, வேலையைப் பகிர்ந்து செய்வார்களாம்.