Home இரகசியகேள்வி-பதில் ஹெச்ஐவி பாதித்த கணவருடன் ஆணுறை அணிந்து உடலுறவு செய்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வருமா?.

ஹெச்ஐவி பாதித்த கணவருடன் ஆணுறை அணிந்து உடலுறவு செய்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வருமா?.

124

ஹெச்ஐவி பாதித்த கணவருடன் ஆணுறை அணிந்து உடலுறவு செய்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வருமா?…

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது. என் கணவர் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆணுறையைப் பயன்படுத்தித்தான் உறவுகொள்கிறோம். அப்படியிருந்தும் எனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக உறவு கொண்டும் நான் எப்படிப் பாதிக்கப்பட்டேன் என்பது புரியாமல் குழம்பித் தவிக்கிறேன். தெளிவுபடுத்த முடியுமா?

ஆணுறை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சொல்லும் அளவுக்கு இன்று பாலியல் நோய்களைத் தவிர்க்க ஆணுறை அவசியமாகிறது.
கணவன் மனைவியே ஆனாலும் ஆணுறை இன்றி கலவிகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் அளவுக்குக் கலவி வழித் தொற்றுநோய்கள் பல உள்ளன.

ஆனால் சில சமயங்களில் மட்டமான லேட்டெக்ஸால் ஆன ஆணுறையை உபயோகிக்கும் போது அதில் ஒரு பொத்தலோ, கிழிசலோ இருந்தால் திரவங்கள் கசிந்து, நோய்த் தொற்றை ஏற்படுத்திவிடுகின்றன.
இதைத் தவிர்க்க நம்பகமான தயாரிப்பாளர்களின் ஆணுறைகளைப் பயன்படுத்துவது முக்கியம்.

சில சமயங்களில் ஆணுறையை எப்படி அணிந்து கொள்வது என்று தெரியாமல் எசகு பிசகாக மாட்டிக் கொள்கிறார்கள் சிலர். இதைப் பற்றி எல்லாம் ஆலோசனை வழங்க எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த தன்னார்வ ஆற்றுப்படுத்தல் மற்றும் பரிசோதனை மையங்கள் உள்ளன. இது மாதிரியான சந்தேகங்ளுக்கு பதில் சொல்வது தான் அவர்கள் வேலையே. அதனால் தயங்காமல், கவலைப்படாமல் ஆலோசகரைத் சந்தியுங்கள்.

ஆணுறையைச் சரியாக அணியும் முறை உட்பட பல முக்கிய தகவல்களைத் தருவார்கள். அதன்படி நடந்தால் நோ பிராப்ளம்!

ஆனால், உங்களுக்கு இப்போது துரதிர்ஷ்டவசமாக ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குதல் ஏற்பட்டுவிட்டது என்றாலும், கவலை வேண்டாம். எதிர்ப்பு ரெட்ரோ வைரல் தெரபி என்கிற ஏ.ஆர்.டி. சிகிச்சை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த மருந்துகளை உட்கொண்டால் கிருமி பாதிப்பு நிலையை தவிர்த்து வரலாம். கூடவே கிருமி தாக்குதலுக்குள்ளான நபர்களை நல்வழிப்படுத்த தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றோடு இணைந்தால் வாழ்க்கை இலகுவாகும்.

———————
விந்து உடலில் தங்குவதால் பிரம்மச்சாரிகளுக்கு பாதிப்பு வருமா?

விந்து உடலில் தங்கினால் ஆபத்து என்று படித்தேன். அப்படியானால் பிரம்மச்சாரியாக சிலர் வாழ்வது எப்படி? அவர்களின் ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்குமா?

விந்து உடலில் தங்கினால் ஒரு ஆபத்துமில்லை. இது எல்லாம் அறியாமையினால், அந்த காலத்திலிருந்து நாம் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஜமக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் தனமான மூடநம்பிக்கை.

பிரம்மச்சாரிகளுக்கு உடலமைப்பும், விந்து வெளியேற்றும் பிறரைப் போல் தான் இருக்கும். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். தட்ஸ் ஆல்!

மனதைக் கட்டுப்படுத்துவதுதான் ஆண்மையின் உச்சக்கட்ட அறிகுறி. ஆண்மை ரசாயனமான டெஸ்டோஸ்ட்ரானை நேர்த்தியாக அடக்கி ஆண்டால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் பிரம்மச்சாரிகளின் ஆண்மை ரொம்பவே அதிகமாகுமே தவிர குறையாது.

இது தவிர சில ஆண்களுக்கு மரபணு, உறுப்பு, ஹார்மோன் கோளாறுகள் காரணமாக அவர்களுக்கு தாம்பத்தியம் பிடிப்பதில்லை. இதுவெல்லாமே விருப்பத்தைப் பொறுத்த விஷயங்கள்தான்.

—————————
இந்த மாதிரி உடலுறவு கொண்டால் ஆண்குழந்தை பிறக்குமா?

ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். மாத்திரைகளின் மூலமாகவோ அல்லது உறவுகொள்ளும் முறையில் ஏதாவது மாற்றங்கள் செய்தோ அதை சாத்தியமாக்க முடியுமா?

ஆண் பிள்ளை பிறக்க வேண்டுமானால் அந்த குழந்தையின் 46 குரோமோஸோம்களில் ஒன்று ஒய் ரகமாக இருந்தாக வேண்டும். ஒய் குரோமோஸோம்தான் ஆண்மைப்படுத்தும் “சக்தி“ பெற்ற ஒரே குரோமோஸோம்.

இந்த ஒய் குரோமோஸோம் ஆணின் உடலில் மட்டும்தான் உற்பத்தி ஆகிறது என்பதால் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிர்ணயிப்பது தந்தையின் விந்தணுக்கள்தானே தவிர தாயின் கருவணு அல்ல.

ஒய் குரோமோஸோம் கொண்ட விந்தணு போய் தாயின் கருமுட்டையோடு கலந்தால் ஆண் குழந்தை பிறந்துவிடும். ஆனால் ஆணின் உடலிலிருந்து வெளியேறும் விந்தணுக்களில் 50 சதவீதம் தான் ஒய் குரோமோஸோம் உள்ளவை. மிச்சமெல்லாம் எக்ஸ் குரோமோஸோம் உள்ளவை.

இந்த எக்ஸ், ஒய் ரக விந்து அணுக்களில் வெறும் ஒய் யை மட்டும் கருவோடு கலக்க வைத்தால் ஆண் பிள்ளைகள் பிறக்கலாம். ஆனால் இப்படி வெறும் ஒய் விந்தணுக்களைப் பிரித்தெடுத்து “ஆண்“ மட்டும் என்று பாராபட்சம் செய்ய முடியும் என்று பல போலி விளம்பரங்கள் இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியமே இல்லை.