Home ஆரோக்கியம் பெண்களுக்கான ஆரோக்கிய அறிவுரைகள்

பெண்களுக்கான ஆரோக்கிய அறிவுரைகள்

26

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பெண்களின் நலம், கல்வியறிவு, சமுதாயத்தில் பங்கு இவை அனைத்துமே இன்று முக்கியமான அம்சங்களாக இருக்கின்றது. எல்லா செல்வத்தையும் விட முக்கியமானது உடல் ஆரோக்கியம்தான். பெண் குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் கால கட்டத்தில் இருந்து வயது முதிர்ந்து, காலம் முடியும் வரை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த மாற்றங்களை சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் நலனை பாதுகாக்க இன்று மருத்துவ துறையில் பல்வேறு சிகிச்சைகளும், மருத்துவத்தில் பல்வேறு பரிசோதனைகளும் முன்னேற்றம் கண்டுள்ளது.

குழந்தைப் பருவத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளும் சரிவிகித உணவும் பழக்க வழக்கங்களும் மிக முக்கியமாக பங்கு வகிக்கின்றது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வியுடன் கூடிய விளையாட்டும் நோய் தடுப்பு மருந்துகளும்எல்லாவற்றிற்கும் மேலான (Personal Hygenic) என்று சொல்லப்படும் தன் சுத்தம் சுகாதார முறைகளும் முக்கியம் என்று கருதப்படுகிறது.

பூப்படையும் பெண்களுக்கு நிச்சயமாக உடல் ரீதியான மாற்றங்களையும் அதனடிப்படையில் உருவாகும் மன ரீதியான மாற்றங்களையும் சமாளிப்பதைப் பற்றி ஒவ்வொரு தாயும் ஆசிரியர்களும் முக்கியமான அறிவுரைகளை சொல்வது மட்டுமல்லாமல் அன்பு, அரவணைப்புடன் கூடிய சூழலை உருவாக்கித் தருவது மிக மிக முக்கியமானதாகும்.

பொதுவாக வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறு, உதிரப்போக்கு, மார்பகக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றில் பள்ளி சிறுமியர் மற்றும் கல்லூரி மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். அதனால் தேவையான அளவு தண்ணீர் காய்கறி பழங்களுடன் கூடிய புரதச்சத்துமிக்க உணவு முறைகள் மிகவும் நல்லது. வெளியே சாப்பிடுவதையும் (Junk food) என்று சொல்லக்கூடிய (Pizza, Burger, Sweets, Cake, Chocolatge, Chicken) போன்ற உணவுப் பொருட்களை தவிர்ப்பது மிக மிக நன்று.

15 முதல் 25 வயது வரையுள்ள பெண்களுக்கு ரூபெல்லா, கருப்பை புற்றுநோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தையின்மைக்கு இன்று நவீன சிகிச்சைகளும், அதிக வெற்றிவாய்ப்பைத் தரக்கூடிய மருத்துவ முறைகளும் உருவாகிக் கொண்டு இருக்கிறது. பெண்களின் உடலில் கருப்பை, கருமுட்டையை, சினைக்குழாய் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள (Scan) பரிசோதனை முறை முக்கிய அங்கமாக செயல்படுகிறது.

Laproscopy என்று சொல்லக்கூடிய சிறுதுளை (En-doscopy) சிகிச்சை முறை பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்குகிறது. இதன் மூலம் பெண்களுக்கு கருப்பை கட்டிகள், கருமுட்டை கட்டிகள், சாக்லேட் சிஸ்ட் போன்ற பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை முறை இல்லாமல் சிறுதுளை (Laproscopy) முறை மூலமாக சிகிச்சைப் பெற்று ஒரே நாளில் வீட்டிற்கு செல்வதும் இயற்கையாகவே கருத்தரிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. அடிக்கடி கருச்சிதைவு (Abortion) ஆகும் பெண்களுக்கு கருச்சிதைவை தடுக்கக்கூடிய சிகிச்சை முறைகளும் மற்றும் பரிசோதனை முறைகளையும் மேற்கொண்டு பெண்களுக்கு அதிக குழந்தைப் பேற்றையும் கொடுக்கிறது.

மகப்பேறு சிகிச்சையில் தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் இரத்த ஓட்டத்தை தெரிந்து கொள்ளவும், பிரசவ காலத்தில் நல்ல ஆரோக்கியமான தாய், சேயைப் பாதுகாக்கும் முறைகளும் இன்று முன்னேற்றம் கண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

பெண்கள் நலனும் குடும்ப நலனும், குழந்தைகள் நலனும் கருத்தில் கொண்டு கருத்தரித்தல் மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 30 வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணும் வருடம் தவறாமல் (Pap Smear) எனும் கருப்பை புற்றுநோய் முன்னறியும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது மட்டுமல்லாமல் ரத்த சோகை வராமல் தடுத்து ஆரோக்கியத்தைப் பேணிகாக்க வேண்டும்

மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்கள், உடல் பருமன், ரத்தத்தில் உயர் அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், இருதய கோளாறுகள் போன்றவற்றை தவிர்க்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.

அன்றாடம் நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும், காய்கறி பழங்கள் சேர்ந்த மிதமான உணவுப்பழக்கமும், கால்சியம் சத்து நிறைந்த (பால், கீரை, பயிறு, பருப்பு வகைகள்) மிகவும் நல்லது.