Home கருத்தடை கருத்தடை முறைகள் பற்றிய முழுமையான அலசல்…!!

கருத்தடை முறைகள் பற்றிய முழுமையான அலசல்…!!

72

கருத்தரிக்காமல் இருக்கச் செய்ய வேண்டுவது என்ன?

 

பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது மட்டுந்தானா? கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தலாமே!

 

பாலியல் உறவு முதன்முறைதான் என்பதற்காக அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று மனப்பால் குடிக்காமல் இருங்கள். காதலனோ காதலியோ இருப்பின் சிலவேளைகளில் பாலியல் உறவு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். ஆகவே பாதுகாப்பு நிமித்தம் கருத்தடைச் சாதனம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் உறவு கொள்ளத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.

 

ஆண்டு தோறும் ஐந்திற்கு நான்கு பெண்கள் கருத்தடைச் சாதனமின்றி பாலியல் உறவுகொள்வதால் கருத்தரித்து விடுகிறார்கள்.

 

எது பாதுகாப்பான கருத்தடைச் சாதனம்?

 

ஆண் கருத்தடை உறை

 

ஆண் கருத்தடை உறை என்பது ஆண்குறியை இறுக்கமாகப் பற்றி மூடிக் கொள்ளும் இரப்பராலான உறை. பாலியல் உறவு கொள்ளுமுன் இதனை ஆண்குறியின் மீது போர்த்திக் கொள்ளவேண்டும். பாலியல் உறவுக்கு முன் என்று கூறுவது உறுப்பு புடைத்து நிற்குமுன். புடைத்தெழும் போது உறுப்பின் மீது போடுவது சிரமம்.

 

வேறெந்த கருத்தடை சாதனமும் HIV யிலிருந்து உங்களைப் பாதுகாக்காது. கருத்தடை உறை விந்துகளையும் HIV யையும் பெண் யோனிக்குள் புகவிடாது. யோனிக்குள் புகாதபடியால் உடல் திரவங்கள் ஆணோடு கலப்பதும் தவிர்க்கப்படுகிறது. ஆணுறையில் தடவப்பட்ட உராய்வு நீக்கி விந்துகளையும், HIV யையும் கொன்றுவிடும். ஆணுறையை மேற்பகுதியிலிருந்து அகற்றிவிட வேண்டும்.

 

ஆணுறையால் பக்க விளைவுகள் எதுவுமில்லை.

 

ஆணுறையை எந்த மருந்து விற்பனை நிலையத்திலும் வைத்தியரின் சான்று இன்றியே விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

 

ஆணுறை தான் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே கருத்தடைச் சாதனம். பெற்றோலிய உபபொருளான வாசிலினை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வாசிலின் ஆணுறை செய்யப்பட்ட றப்பர் பொருளைக் கரைக்கக்கூடியது. ஆண்குறியை வெளியே எடுக்கும் போது ஆணுறையும் உடன் வெளிவர வேண்டும். இல்லாது போனால் ஆணுறை உள்ளேயே நின்றுவிடும்.

 

மற்றைய கருத்தடை சாதனங்கள் HIV க்குத் தடை ஏற்படுத்தாதா?

 

இல்லை.

 

இவற்றைப் பயன்படுத்தத் தகுந்த இருவரும் HIV அற்றவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டவர்களும் முறையான தம்பதிகளுமே ஆவர்.

 

HIV பரிசோதனைகூட இரண்டு வாரங்களுக்கு முன் உங்கள் உடலில் இந்த வைரஸ் இருந்ததா என்பதை எடுத்துக்காட்டும்.

 

இருவரில் ஒருவருக்குக் கூட HIV அற்றவர் என்று குறிப்பிடுவது அந்தத் தம்பதியர் இருவரும் தம்மட்டிலே பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். உங்கள் இருவருக்கும் அப்பால் வேறொருவருடன் உறவு கொள்ளும் போது ஆணுறைகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.

 

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க முடியுமா?

 

ஆம். ஆனால் இது அசாதாரணமானதே.

 

இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் ஆண் தனது ஆண்குறியை பெண்ணினது பிறப்புறுப்பின் மீது உராய்வான். ஆனால் உட்புகுத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளுடைய சூலகத்து முட்டையை நோக்கி கருப்பையை அடையும். அவை மூன்று தினங்கள் வரை யோனிப்பகுதியில் உயிர் வாழும். அதுபோலவே AIDS நோய் தரும் HIV வைரசும், பாலியல் உறவைத் தவிர்க்கும் நோக்கத்தோடு இருந்த போதிலும் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும்.

 

ஆணின் உறுப்பு புடைத்தெழாவிட்டாலும் கூட விந்தில் ஆண் அணுக்கள் காணப்படும். ஆணுறுப்பு புடைத்தெழும் போது வெளிப்படும். இதோடு சேர்ந்து HIV யும் பரவும் அபாயம் உண்டு.

 

திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு தடை செய்யப்பட்ட கர்பிணிகள் கன்னிப் பெண்களாகக் காணப்படுவதாக வைத்தியர்கள் அறிவிக்கிறார்கள். இப்பெண்கள் பாலியல் உறவு கொள்ளாதவர்களே. அதோடு யோனி முகிழ் அருகிலுள்ள மென்சவ்வு (human) எவ்வித பாதிப்புக்குள்ளும் ஆகாத நிலையில் காணப்படுகிறது.

 

கருத்தடையை ஏற்படுத்த ஓமோன்களைப் Hormones பயன்படுத்தலாமா?

 

ஆம். இருவித ஓமோன் கருத்தடைச் சாதனங்களுண்டு. ஒன்று மாத்திரை வடிவிலும் மற்றது ஊசி மருந்து வடிவிலும் இருக்கும். ஆனால் ஓமோன் பாவனையின் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். புற்றுநோய், குருதி உறைதல் கோளாறுகள், உயர்குருதி அமுக்கம், ஈரல் கோளாறுகள், மைகிறெயின் தலைவலி ஆகியவை இருக்கும் போது மாத்திரையை உபயோகித்தால் பிரச்சினை பெரிதுபடும். அதோடு வலிப்பு ஏற்படுகையில் வைத்திய சிகிச்சையை மேற்கொள்ளும் போது மாத்திரை பேராபத்தை ஏற்படுத்தும். புகை ஊதினால் பெரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

 

மாத்திரை எப்படி வேலை செய்கிறது?

 

மாதவிடாய் வந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நாளுக்கு ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குத் தொடர்ந்து பாவிக்கப்படுகிறது. பிறகு 5 நாட்களுக்கு மாத்திரை ஒன்றையும் பயன்படுத்தாமல் இருந்து மாதவிடாயைச் சந்திக்கிறோம்.

 

மாத்திரை பயன்படுத்தும் போது முட்டை உற்பத்தி ஆவதில்லை. அதனால் விந்து முட்டையுடன் கருக்கட்டுவதில்லை. இதிலுள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சில சமயங்களில் மாத்திரையை உட்கொள்ள மறந்துவிட்டால் கருத்தரிப்பதிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் நிலையை அடைவதில்லை. அதனால் மாதவிடாய் வருவதற்கு முன் மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. உங்களுடைய நிறையும் சுமார் 5 கிலோகிராம் அதிகரிக்கிறது. மார்பகப் புற்றுநோயும் நாளங்களில் குருதி உறைவும் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்நிலை நீண்ட நாட்களுக்கு மாத்திரையைப் பயன்படுத்துவதாலும் சிகறட் புகைப்பதாலும் வரக்கூடும்.

 

ஊசிமூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து என்பதென்ன?

 

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் இந்தக் கருத்தடை மருந்து செலுத்தப்படுகிறது.

 

இந்த முறையிலுள்ள தீங்கு என்னவென்றால் இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்ட போதிலும் உங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்ட போதிலும் இம்மூன்று மாதகாலங்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள இயலாது.

 

இந்தக் கருத்தடை முறையை அரசாங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டென்று அநேகர் கருதுகிறார்கள்.

 

நீங்கள் மறந்துவிட முடியாத வேறேதும் கருத்தடை சாதனம் உண்டா?

 

ஆம். வளையம். யோனித் துவாரத்திற்குள் பொருத்தப்படும் வளையம் ஐருனு (ஐவெசய ருவநசiநெ னுநஎiஉந) இது கருப்பைக்குள்ளேயே இருக்கும். வைத்தியரின் உதவியுடனேயே இது உட்செலுத்தப்பட வேண்டும். ஒரு மெல்லிய நூலிழை வெளிப்புறமாகத் தொங்குகிறது. நீங்கள் விரும்பாதபோது இந்தச் சாதனத்தை இந்த நூல் இழையை இழுப்பதன் மூலம் அப்புறப்படுத்தலாம்.

 

முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட வளையம் அப்பிறிகொட் விதைகள். இவற்றை ஒட்டகத்தின் கருப்பைக்குள் வைப்பதனால் அவை கருத்தரிப்பது தடுக்கப்படுகிறதாம். இதைச் செய்வது ஏனெனில் கருத்தரித்திருந்தால் ஒட்டகங்களால் சுமையைத் தூக்க இயலாது. பாலைவனங்களில் அவற்றைப் பயன்படுத்த இயலாது.www.illamai.blogspot.com தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வளையங்கள் அனைத்தும் செப்பு சேர்க்கப்பட்டவை. செப்பு வு வளையங்கள் ஆங்கில எழுத்து வு வடிவத்தில் இருக்கும். இது கருக்கட்டிய முட்டையை கருப்பையில் இடம்பெறவிடாது. கருக்கட்டி சிசு இருந்த போதிலும் மாதவிடாய் ஏற்படும்.

 

இதனைப் பற்றி பெண்கள் கூறும் குறைபாடு என்னவெனில் மாதவிடாயின் போது அதிக நோவினைத் தருகிறது.

 

இதிலுள்ள நன்மை யாதெனில் இது தொடர்ந்து உள்ளே இருக்கையில் கருத்தரிக்க 80% வாய்ப்பு இல்லை. இதனால் பூரண பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதபோதிலும் மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இடமில்லை. கருத்தடை உறையை விரும்பாதவர்கள் வளையங்களைப் பயன்படுத்தலாம்.

 

வேறேதும் கைப்பற்றி விடாத கருத்தடைச் சாதனம் உண்டா?

 

ஆம். கருப்பையின் கழுத்துப் புறத்தை மூடிவிடும் இறப்பர் அல்லது பிளாஸ்ரிகால் ஆன மென்சவ்வு உறை.

 

மென்சவ்வு உறை (Diaphragm) என்பது என்ன?

 

மென்சவ்வு உறை வட்டவடிவ வில்லை முடி இறப்பரால் ஆன மென்சவ்வு உறை. ஆகையால் அது ஆங்கில எழுத்து ‘O’ வடிவத்தில் அமைந்திருக்கும். இதனைப் பயன்படுத்துவோர் தாமாகவே யோனித்துவாரத்திற்குள் வைத்து வட்டவடிவ வில்பகுதியை யோனி வாயிலில் நங்கூரமிட வேண்டும். பூப்பு என்புக்குச் சற்று மேலாகவும் கருப்பையின் நுழைவாயிலான கழுத்துப் பகுதியிலிருந்து எட்டவும் அமையும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். மென்சவ்வு முழுவதின் மீதும் விந்து கொல்லி ஜெல்லியைப் பூசிவிட வேண்டும். ஏனெனில் www.illamai.blogspot.comகருப்பைக்குப் போகும் பாதையை தடைசெய்வது போதாது. விந்தின் ஆண் அணுக்கள் மூன்று நாட்கள் வரை உயிரோடு இருக்கும். சில இடைவெளிகள் ஊடாக உள்ளே புகுந்துவிடுவது சாத்தியமாகும். விந்து கொல்லியைத் தடவியிருந்தால் ஆபத்து ஒன்றுமின்றி எட்டுமணி நேரங்களுக்குப் பிறகு மென்சவ்வை எடுத்துவிடலாம்.

 

எல்லாப் பெண்களுக்கும் யோனி வௌ;வேறு அளவினதாக இருப்பதனால் பொருத்தமான அளவுடைய மென்சவ்வை வைத்தியர் ஒருவரின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அவருடைய ஆலோசனைபெற்று பொருத்திக் கொள்வதும் உசிதமானது. அவர் தகுந்த பிரயோக முறைகளையும் வழங்குவார். மருந்துச்சாலையில் தகுந்த அளவினதை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று சுமார் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

 

உளவியல் hPதியில் பாலியல் உறவுக்கு இத்தகைய மென்சவ்வு பயன்படுத்துவது குறையை விளைவிக்குமோ என்று நினைக்கத் தூண்டும். இத்தகைய சிந்தனையே இன்றிச் சில பெண்கள் இதனை ஒவ்வொரு இரவும் பூண்டு கொள்வார்கள். பாலியல் உறவுக்குச் சற்று முன்புதான் தேவை என்றே கருதுவதில்லை.

 

இதனால் பக்கவிளைவுகள் ஒன்றுமேயில்லை. ஏனென்றால் எவ்விதமான மருந்தையோ அல்லது இரசாயனப் பொருளையோ உட்கொள்வதில்லை. விந்துகொல்லிகளைப் பயன்படுத்தினால் கருப்பம் தரிக்காது என்று முழுமையாக நம்பலாம்.

 

கருப்பப்பைக் கழுத்து உறை (Cervical Cap) என்றால் என்ன?

 

கருப்பப்பைக் கழுத்து உறை என்பது மிகவும் சாதுவானதும் பாதுகாப்பானதுமான கருத்தடைச் சாதனமாகும். இது மிகவும் மலிவானதுமாகும். இதனால் இதனை யாரும் உற்பத்தி செய்வதில்லை. இதனைத் தயாரித்து விற்பதனால் அதிக லாபமும் கிட்டாது. ஒரு மூடி பலவாண்டுகளுக்கு மட்டுமல்ல.www.illamai.blogspot.com ஆயுள் காலம் முழுவதற்கும் நின்று நிலைக்கக் கூடியது. ஆணுறையை இதோடு ஒப்பிடும் போது ஆணுறையோ ஒவ்வொரு முறை பாலுறவு கொள்ளும் போதும் மாற்ற வேண்டும். ஆனால் இது அப்படியல்லவே.

 

கருப்பை கழுத்துறை கழுத்து வாயிலை சரியாக மூடியிருப்பதனால் கருப்பைக்குள் விந்தை உட்புக விடாது. இது சரியாகவே வாயிலை மூடிவிடுவதனால் மூடிமீது விந்து கொல்லியைப் பூசவேண்டிய அவசியம் இல்லை. அநேக பெண்கள் இதனை அந்த இடத்திலேயே பலநாட்களுக்கும் இருக்க விட்டு விடுவார்கள்.

 

மென்சவ்வினைக் காட்டிலும் இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இடத்தை விட்டு அகலாதிருக்க அடிக்கடி நகர்த்தியபடி இருக்க வேண்டியிராது.

 

கருப்பைக் கழுத்தை இறுகப் பிடித்தபடியே இருக்கும். இதனால் ஆண்களுக்கு எவ்வித தொல்லையும் ஏற்படாது. வளைய மென்சவ்வின் ஓரங்களில் படும்போது ஆண் குறியின் முனை காயப்பட இடம் உண்டு. ஏனெனில் உலோக வில்லின் மீது இறப்பர் பூசப்பட்ட பொருளே மென்சவ்வு. கருப்பைக்கழுத்து மூடியால் இப்படியான பிரச்சினை ஒன்றுமே ஏற்படாது.

 

இவை மட்டுந்தானா கருத்தடைச் சாதனங்கள்?

 

இல்லை. இன்னமும் அநேகம் உள்ளன. சுலபமாகக் காரியம் ஆற்றக் கூடியவற்றை மட்டுமே பயன்படுத்துவோம்.

 

இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதனைப் பயன்படுத்தினார்கள்?

 

குடும்பத்தைக் கட:டுப்படுத்த அநேக முறைகளை மக்கள் அந்நாளில் கையாண்டார்கள். அவை எல்லாம் பூரணவெற்றியளிப்பவை அல்ல. முழுச் சமூகத்தையும் நோக்கினால் திட்டமிடப்படாமல் ஏற்பட்ட மக்கட் பேறுகள் மிகக் குறைவே.

 

சில ஆதிக்குடிகள் தற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த மூலிகைகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம். இதனால் நீண்ட காலப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதோ தெரியாது. அநேகமாகப் பலரும் கையாண்ட முறைகள் சுருதிமுறையும் உச்சக்கட்டம் அடைந்ததும் அகற்றிவிடுவதும் ஆகும்.

 

சுருதி முறை (Rhythm method) என்பதென்ன?

 

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் நின்று முதல் பத்து நாட்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளிவருகிறது. அப்பொழுதுதான் கருக்கட்டுகிறது. முட்டை வெளிப்படும் காலம் சுமார் பத்து நாட்களுக்கு நீடிக்கும்.

 

பெண்ணிற்குக் கருமுட்டைகள் உருவாகும் போது உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலிருந்து ஓரிரு பாகை கூடுதலாக இருக்கும். யோனியில் ஏற்படும் திரவக் கசிவுகள் சாதாரணமாய் வழுக்கிப் போவதைக் காட்டிலும் தடித்துக் காணப்படும்.www.illamai.blogspot.com ஒரு துளியை எடுத்து பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து அமுக்கினால் நாலைந்து அங்குலம் நீளும்.

 

சாதாரணமாகத் தம்பதிகள் செய்வது இதுதான். இப்படி முட்டை உற்பத்தி ஆகும் நாட்களைக் கண்டறிந்து அந்த நாட்களில் பாலுறவைத் தவிர்த்துக்கொள்வர்.

 

பெண்கள் கைகொள்ளும் விரத நாட்களும் இதோடு தொடர்புடையதே. விரத நாட்களில் பாலியல் உறவு கொள்வதில்லை.

 

விந்து வெளிவருமுன் ஆண்குறியை எடுத்து விடுவது என்றால் என்ன?

 

இது என்னவென்றால் ஆண்குறி புடைத்து விந்து வெளிவர இருக்கும் தருணத்தில் ஆண்குறியை பெண்ணின் யோனியிலிருந்து எடுத்து விடுவதாகும். புடைத்து விந்து முறையாக வெளிவருமுன்பே பல ஆண் அணுக்களைக் கொண்ட விந்துத்துளியொன்று யோனிக்குள் புகுந்துவிடக்கூடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடும்பங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இம்முறை முற்றுமுழுதாகத் தோல்வியானது என்று கூற முடியாது. சில பெண்கள் கருத்தரித்தபோதிலும் மக்கள் தொகை பாரிய பெருக்கம் ஏற்படவிலலை என்பதைக் காணலாம்.

 

கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் கருத்தரித்துவிட்டால் அதன் பிறகு செய்யக் கூடியது என்ன?

 

ஆம். இதனால் பிறக்கின்ற பெண் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும். அந்த மருந்திற்குப் பெயர் “மாத்திரைப் பின் விடிவு” – “Morning after pills”

 

மாத்திரைக்குப் பின் விடிவு கருமுட்டை கருக்கட்டிய போதிலும் மாத விடாய் வெளிப்படுத்தக்கூடிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஓமோனைக் கொண்டது. இதனால் கருப்பம் தரித்துவிட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை. ஆனால் இதன் பிறகு பலமாதங்களுக்கு மாதவிடாயில் அநேக குழப்பங்கள் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்கு இடைவெளியில் வர நீண்ட நாட்கள் எடுக்கும். அதோடு அதன் பிறகு பிறக்கின்ற பெண் குழந்தைக்கு கருப்பப் பைப் பற்றுநோய் வரக்கூடும். பெரியதொரு விலையை அல்லவோ கொடுக்க வேண்டியுள்ளது.

 

‘மாத்திரைக்குப் பின் விடிவு’ வேறொரு பிச்சினைக்கும் வழிவகுக்கிறது. சிறிய அளவு ஓமோனைப் பயன்படுத்துவதால் கருப்பம் தரிப்பது தடுக்கப்படுவதில்லை. ஆனால் குழந்தையைச் சீர்குலைக்கும்.

 

நீங்கள் கருப்பம் தரித்தால்?

 

இரு வழிகள் உண்டு. ஒன்று குழந்தையைப் பெற்றெடுப்பது. மற்றது கருப்பத்தைச் சிதைப்பது. கருப்பச் சிதைவு என்பது குழந்தை வளருவதற்கு முன்பே கருப்பத்தைச் சிதைத்துவிடுவது. இரண்டு வித முடிவுகளுமே உளாPதியான வேதனையையே தருகிறது. கருப்பைச் சிதைவு அல்லது பிள்ளையைப் பெற்றெடுப்பது.

 

கர்ப்பச் சிதைவு செய்ய விரும்பினால்……

 

கருத்தரித்து மூன்று மாத காலத்திற்குள் கருச்சிதைவு செய்வது சுலபம். இதற்கென பயன்படுத்தும் முறையை ‘விரிவாக்கலும் தூய்மை செய்தலும்’ என அழைப்பர். இதை ஆங்கிலத்திலும் Dilation and Curettage -D&C  என்பர். www.illamai.blogspot.comகருப்பையின் கழுத்துப் பாகத்தை அகலமாக்கி உள்ளே உள்ளவற்றைச் சுரண்டி எடுப்பது. இப்படிச் சுரண்டும் போது கருப்பை வரிகள், கரு, தொப்புள் கொடி அனைத்துமே அப்புறப்படுத்தப்படுகின்றன. தொப்புள்க்கொடி மூலம் தான் ஊட்டச்சத்து தாயிடமிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது.

 

வேறொரு முறையும் உண்டு. இது துன்பமோ வலியோ குறைவாயுள்ள முறையாகும். கருச்சிதைவு உள்ளவற்றை உறிஞ்சி எடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது. இதனால் கருவில் உருவான சிசுவோடு தொப்புள் கொடி, கருப்பை வரி ஆகியவை உறிஞ்சி அகற்றப்படும். இம்முறையினால் மாதவிடாயையும் ஒரே தரத்தில் அகற்றிவிடுகிறது.

நாட்களைக் கடத்தினால் கருச்சிதைவு செய்துகொள்ள முடியாது. உங்களுக்குத் தேவையானது உவர்நீர்த் தூண்டுதலே. உவர்நீர் கருப்பையில் செயற்கையாகப் பிரசவவேதனையை உண்டுபண்ணிவிடும். குழந்தை பிறந்துவிடும் ஆனால் இறந்தே பிறக்கும். கருப்பைக்கு வெளியே உயிர் வாழாது.

 

கருச்சிதைவு செய்ய இருப்பின் தாயின், தந்தையின் குருதி வகையைத் தெரிந்திருத்தல் வேண்டும். பெண்ணின் குருதி வகை சுர் மறையாகவும் ஆணின் குருதி சுர் நேராகவும் இருப்பின் கருச்சிதைவு செய்த பிறகு பெண்ணின் உடலில் ஆணின் சுர் நேருக்கு எதிரான புறபொருள் எதிரி உருவாகிறது. ஆகவே இதன் பிறகு பிறக்கும் குழந்தைக்கு தந்தையாரின் சுர் நேர் பெறும். அக்குழந்தைக்கு சுர் நோய் ஏற்படும். இது சாதாரணமாக உயிருக்கே ஆபத்தானது. சுர் மறை குருதித் தொகுதியைக் கொண்ட தாய்மாருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை. ஏனெனில் அநேகரிடம் இருப்பது சுர் நேர்குருதித் தொகுதி. சுர் நோயைத் தருகின்ற புறபொருள் எதிரியைக் கட்டுப்படுத்துவது றோகம் (சுர்ழுபுயுஆ) என்னும் ஊசி மருந்தைச் செலுத்துவதால் ஆகும். இதனை கருச்சிதைவு ஏற்பட்டவுடன் செலுத்த வேண்டும். புறபொருள் எதிரி எதுவும் உருவாவதற்கு முன்பாகவும் வைத்திய சாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவும் இந்த ஊசி மருந்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.

 

கருச்சிதைவுக்குப் பிறகு ஓரிருநாட்களில் நடைபெறும். ஆனால் இது அநேக நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்தக் குருதி வெளியேற்றம் கருப்பையிலிருந்து யோனி வழியாக நடைபெறும்.

 

‘மாத்திரைக்குப் பின் விடிவு’க்குப் (Morning after pills) பதிலாக வேறுவிதமாக கருச்சிதைவு ஏற்படுத்தலாமா?

 

ஆம். ஆரம்பக்கட்டத்திலேயே அதாவது கணக்குப்படி அடுத்த மாத மாதவிடாய் வருமுன் செய்தல் முறையாகும். முன்கூட்டியே காலிசெய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். கர்ப்பிணி ஆகியுள்ளோம் என்று அறிந்து கொள்வதற்கு முன்பேயே அல்லது கருவில் சிசு உருவாவதற்கு முன்பேயே செய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். சிசு கருப்பைக்குள் அதன் வரிகளில் நாட்டப்பட்டு விடுமுன்னே நடைபெறுகிறது.

 

‘மாத்திரைக்குப் பின் விடிவு’ முறையைக் காட்டிலும் பாதுகாப்பும் பயனும் உள்ள முறை உறிஞ்சி எடுக்கும் முறை. மாத்திரைக்குப்பின் விடிவு முறையைக் கையாளுவதால் மாதவிடாயில் நீண்ட கால உழைச்சல் ஏற்படுவதோடு காலப் போக்கில் பிறக்கப்போகும் பெண்குழந்தைக்கு ஏற்படப் போகும் பாதிப்பும் இராது. www.illamai.blogspot.comகருத்தரித்து விட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த நிலையைக் காட்டிலும் இது தரும் உளாPதியான பாதிப்பு மிகவும் குறைவு. உங்களுக்கு சுர் மறை இனக் குருதியாய் இருந்தால் வைத்தியசாலையை விட்டு வெளியேறுமுன் சுர்ழுபுயுஆ மருந்து ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இது வருங்காலத்தில் பிறக்கப்போகும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுர் வியாதியிலிருந்து பாதுகாக்கும்.

 

முன்கூட்டியே காலி செய்யும் கருச்சிதைவு முறை இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டும். ஆற்றிய பாலுறவை மீண்டும் அடைவது சிரமம். பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணொருத்திக்கு காலி செய்யும் முறையைச் செய்யும் படி ஆலோசனை கூறலாம்.

 

குழந்தையொன்று வேண்டும் என்று கருதினால்…

 

குழந்தை அதிஷ்டசாலிதான். இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வெறும் பருவமானவர்கள் மட்டுமாயிருந்து கொண்டு ஓர் ஆணை மணப்பதோ அல்லது குடும்பம் நடத்துவதோ இயலாத காரியம். திருமணக் கட்டளைச் சட்டத்தின்படி பெண் 14 வயதையும் ஆண் 16 வயதையும் அடைந்திருந்தால் தான் திருமணம் செய்து கொள்ளலாம். அதோடு தந்தையாகப் போபவன் அந்தப் பொறுப்பை ஏற்க விரும்புவதில்லை. வெறுமனே பொழுதைப் போக்கித் தப்பித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். திருமணம் செய்து கொண்டுwww.illamai.blogspot.com விட்டாலோ பாடசாலை உயர்கல்வி கற்பதெல்லாம் மாற்றம் அடைந்துவிடும். பொறுப்புகள் நிரம்பிய திருமணம் செய்தவராகிவிடுகிறீர்கள். இருந்த போதிலும் சந்தோஷம் அடைந்து வாழ்வீர்கள்.

 

உங்கள் பெற்றோர் பாதுகாப்பும் உதவியும் தந்து கொண்டு இருப்பவர்களாயின் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையொன்றைப் பெற்றெடுக்கலாம். ஆனாலும் நீங்கள் எடுத்துள்ள முடிவு ஒரு பயங்கரமானது என்று நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத தாயாக இருப்பதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் சமூகத்தில் வித்தியாசமாக நடத்தப்படப் போகிறீர்கள்.

 

இலங்கை இதற்கெல்லாம் அனுசரணையான நாடல்ல என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நிலைகளைச் சந்திக்க மனவுறுதி வேண்டும். நன்றாக ஆழமாகச் சிந்தியுங்கள்.

 

வெறோரு வழியும் உண்டு. குழந்தை ஒன்றைத் தத்து எடுத்துக் கொள்வது. குழந்தை பெற்றெடுக்க முடியாத பல பெற்றோர் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். வாழ்க்கை வழமைபோலத் தொடர்ந்து நடக்கும்.www.illamai.blogspot.com பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுப்போருக்குக் கொடுக்கும் போது குழந்தையைக் காலப்போக்கில் வெறுக்கத் தலைப்படுவர். ஏனெனில் திருமணம் ஆகுமுன் பிறந்த குழந்தைக்கு சமூகம் மதிப்பு அளிப்பதில்லை.