Home பாலியல் உறவுக்குமுன் ‘அந்த‘ இடத்தில் தடவ வேண்டிய எண்ணெய்கள்

உறவுக்குமுன் ‘அந்த‘ இடத்தில் தடவ வேண்டிய எண்ணெய்கள்

71

உறவில் கிளர்ச்சி, நாட்டமின்மை ஆகியவற்றால் உங்களுடைய திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம் அல்லது சரியாக சுகம் கிடைக்காமல் போகலாம். அதை எண்ணிக் கவலைப்படுபவர்கள் ஏராளம். இதற்காக உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என நேரத்தையும் பணத்தையும் செலவழித்து மன உளைச்சலுக்கும் ஆளாவதுண்டு. இதைத் தவிர்க்க எளிய சில வழிகள் உண்டு. சில வகை ஆயில்களே போதும், உங்களுடைய கிளர்ச்சியைத் தூண்ட…

உடலுறவு என்பது கணவன் மனைவிக்கு இடையேயான உறவை ஆரோக்கியமாகவும் அன்பாகவும் வைத்திருக்க உதவும். இதற்கு சில ஆயில்களை நீங்கள் முயற்சி செய்யலாம். அவை உங்களுடைய உடலுறவு நேரத்தையும் அதனால் உண்டாகும் சுகத்தையும் நீடிக்கச் செய்யும்.

பொதுவாக உடலுறவு விஷயத்தில் இரண்டு பிரச்னைகள் உண்டாகின்றன. ஆணுக்கு ஆண்மைக்குறைபாடு பிரச்னையும் பெண்ணுக்கு உறவில் நாட்டமும் இல்லாமல் போகிறது. பெண்ணுக்கு கிளர்ச்சி குறைவாக இருப்பதற்கு, மன அழுத்தம், ஸ்டிரஸ், மெனோபஸ் என பல காரணங்கள் உண்டு. இதுபோன்ற தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, கட்டிலில் கும்மாளம் போட வேண்டுமென நினைத்தால், கட்டிலுக்குப் போகும்முன் பிறப்புறுக்களில் சில எண்ணெய் வகைகளை ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும் தடவி விடலாம். அவை காம இச்சையைத் தூண்டி, இருவருக்குமான மூடை அதிகரிக்கச் செய்யும்.

ரோஸ் ஆயில்

ரோஸ் ஆயில் வெறுமனே வாசனைக்காக மட்டும் பயன்படுத்துவது என்று நினைக்காதீர்கள். அந்த நறுமணங்களால் நமக்கு பல பிரச்னைகள் தீரும். நல்ல நறுமணம் வீசும் இடத்தில் மனதுக்கு இதமும் ஒரு வித கிளர்ச்சியும் உண்டாகும். அப்படி மன மகிழ்ச்சியோடு இருக்கும்போது உங்கள் துணையுடன் இருந்தால், எவ்வளவு இனிமையாக இருக்கும். அதைவிட அந்த சுகமான நறுமணம் உங்களுடைய துணையின் பிறப்புறுப்பை நீங்கள் சுவைக்கும்போது இருந்தால், அப்போது கிடைக்கும் சுகத்துக்கு அளவிருக்காது அல்லவா?

ஜாஸ்மின் ஆயில்

மல்லிகைக்கு மயங்காத ஆண்களே கிடையாது என்பார்கள். அதிலும் அப்படியொரு வாசனை மிகுந்த ஆயிலை உங்கள் துணையின் கைகளால் உங்களுடைய அந்த இடத்தில் தடவிச் சொல்லுங்கள். இது சுவை நரம்புகளைத் தூண்டி, இருவரையும் ஒருவரையொருவர் காற்று புகாமல் இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளத் தூண்டும்.

ஆரஞ்சு எண்ணெய்

ஆரஞ்சு மரத்தின் இலை மற்றும் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் கொண்டு இருவரும் மாறி மாறி அந்த இடங்களை மசாஜ் செய்து விடுவதன் மூலம் அந்தரங்க உறுப்புகளில் உள்ள மெல்லிய நரம்புகள் கூட தூண்டப்படும். பிறகென்ன கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு கிளர்ச்சியுண்டாகும். உறவு கொள்ளும்போதே அவ்வப்போது இடையிடையே இப்படி மசாஜ் செய்து வந்தால், உறவில் உச்சம் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த ஆயில்களை உடலுறவு கொள்ளும் வேளையில் மட்டுமல்லாமல் வீட்டில் கணவன், மனைவி தனியாக இருக்கும் வேளைகளிலும் முயற்சித்துப் பாருங்கள். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி மசாஜ் செய்துவிடுங்கள். பிறகு பாருங்கள். இருவர் கால்களும் தானாய் படுக்கையயை நோக்கிச் செல்லும். செல்ல சிணுங்கல்களும் மோக முனகல்களும் மட்டுமே வெளியே கேட்கும்.