Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கர நோய்

கர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கர நோய்

46

உலகிலேயே அதிகளவான கர்ப்பிணி களின் மரணத்திற்கு காரணமாக இரு க்கும்

நோய் கர்ப்பகால உயர் குருதிய முக்க மாகும் (பிரஷர்). இது pregnancy induced hypertension எனப்படும் .

கர்ப்பகால பிரஷர் நோய் எனப்படுவது பிரஷர் நோய் இல்லாத

ஒரு பெண்ணிலே கர்ப்பம்

தரித்தபின் பிரஷர் நோய் ஏற்படுவ தாகும்.

இது பல பாரதூரமான விளைவுக ளை தாய்க்கும் ,குழந்தைக்கும் ஏற்ப டுத்தலாம்.

பொதுவாக இந்த நோய் கர்ப்பம் தரித் து 20 வாரங்களுக்குப் பிறகே ஏற்ப டும்.

இது தீவிரத்தன்மையைப் பொறுத்து பல கட்டங்களாகப் பிரிக்க ப்படும்.

1.பிரஷர் மட்டும் கூடிய நிலை

2.அதிகரித்த பிரஷரோடு சிறு நீரிலே அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறும் நிலை ( வெளியேறும் புரதத்தின் அள வைப் பொறு த்து இந்த நிலை இன்னும் பிரிக்கப்படும்)

 

3.மேற்சொன்ன இரண்டோடும் வலிப்பு ஏற்படும் நிலை (eclampsia)

 

இறுதி நிலையானது மிகவும் பயங்கரமானது.சிறிது நேரத்திலே யே தாயையும் பிள்ளையையும் கொன்று விடக்கூடியது.

பிரஷர் மட்டும் கூடியுள்ள ஆரம்ப நி லையிலே மருந்துகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

ஆனாலும் பிரஷரை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தமுடியாமல் போ கும் நிலையில் அல்லது புரத வெளி யேற்றம் அதிகரிக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு குழந்தையைப் பிறக் கச்செய்வதுதான்

வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக குழந்தையை பிறக்கச் வேண் டும்.

சில வேளைகளில் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தாயைக் காப் பாற்றும் பொருட்டு 7 மாதமளவிலே யே (சில வேளை அதற்கு முன்னும் ) குழந்தையை பிறக்கச் செய்ய வேண் டி வரலாம். அந்த நிலையில் குழந் தையை விட தாயின் உயிரே கவன த்தில் கொள்ளப்படும்.

குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் பிரஷர் தானாக சரியாகி விடும்.

ஆகவே பெண்களே!

1.நீங்கள் கர்ப்பம் தரித்த பின் மாதம் ஒருமுறையாவது உங்கள் பிரஷரை சோதித்துக்கொள்ள வேண்டும்.

 

2.உங்களுக்கு பிரஷர் நோய் ஏற்பட்டால் எந்த நிமிடமும் உங்க ளுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

3.பிரஷர் நோய் ஏற்பட்டவர்கள் மிகவும் கவ னமாக வைத்தியரின் ஆலோசனையைப் பின் பற்ற வேண்டும்.

4.சில வேலை நீண்ட நாட்களுக்கு வைத்திய சாலையில் தங்கியி ருக்கவும் வேண்டி வர லாம்.

5.சிலவேளைகளில் உங்கள் உயிரைக் காப் பாற்றும் பொருட்டு குழ ந்தையை தியாக செய் ய வேண்டியும் வரலாம்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரஷர்நோய்க்கு எந்தவிதமான உணவுக்கட்டுப்படும்தேவை இல்லை

மேலே சொன்ன பிரச்சினைகள் கர்ப்ப கா லத்தில் ஏற்படும் பிரஷர் நோயிலே ஏற்படு ம். மாறாக பிரஷர் நோய் ஏற்கனவே உள்ள ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் இந்தப் பிரச்சி னைகள் ஏற்படாது.