Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க

53

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுக்க வே ண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்துகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகுகெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒரு புறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே ஸ என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய் கிறார்கள்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னா ளில் தாய்க்கு மார்பகப்புற்றுநோ ய் வரும் வாய்ப்பு இதனால் பெரி தும் குறைகிறது. சிலர் பிரசவத் துக்குப் பிறகு சரசரவென எடை போட்டு விடுவார்கள். மீண்டும் பழைய உடல் வாகைப் பெற தாய் ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணு க்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்க ளிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும். தாய்ப்பால் அளிப்பதால் அம் மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்ல ப்போனால், குழந்தை தாய்ப்பாலுக் காக மார்பகங் களை அடிக்கடி உறிஞ் சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவ ளது வயிற் றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக் கிரமே பெறுகிறது. மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந் தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடு த்த மாதங்களில் 500 லிருந்து 600 மில்லி லிட் டர் பால் சுரக்கும்.குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தே வைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள் ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத் து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி யை உண்டாக்கக் கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல் கிறோம்.

தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்கு கிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தே வைக் கதிகமான பருமனோடு இரு ப்ப தில்லை.

எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும் போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொ றுத்ததுதானே அது அருந்தும் அளவு ? எனவே ஐந்து நிமிடம் பால் கொ டுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்த பிற கு கொடுக்கலாம்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்ட ர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அள வில் பசும் பால் குடியுங்கள் என்பது தான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.

தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமு ம் இரவில் பாலில் பூண்டு போட்டு காய் ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவது டன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவு ம் வராது என்பது அனுபவ உண் மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண் டு.

அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீர கம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட் டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தி யக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்க ளும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கி ன்றன. சில ஊர்க ளில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின் றனர்.

பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோ டு மேலும் பல நன்மைகளையும் நம க்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத் தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டி னால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்ற லும் பூண்டுக்கு உண் டு

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ குறி ப்புக்கள் சில..

உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாத தாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத் துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.

தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய் ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானி யங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறாமீன், மீன் முட்டை கரு (சிணை) முதலியவற்றை கண்டிப் பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுக ளை உட்கொண்டு விட்டு பால்கொடுக் க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண் ணீர் மட்டுமாவது அருந்திவிட்டு தான் பால் கொடுக்க வேண்டு ம்.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங் கண்ணி கீரை யில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார் மோன்கள் உற்பத்தியை இது அதிகரி க்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்க ளும் சாப்பிடலாம்.

சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொ ள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.

காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடி க்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லதுஸ அப்படி முடிய வில்லை யானாலும் பிரச வித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமி ன்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறி கள், கீரை வகைகள் முதலியவற்றை தின மும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண் டும்.

உளுந்தை பொடிசெய்து வைத்துக்கொண் டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக் கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.

ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.

ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமி யை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1 கிளா ஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித் ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத் து குடிக்கவும்.

பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோ துமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க் கரை கலந்து 2 முறை பாலுடன் குடி த்து வந்தால் தாய்பால் பெருகும்.

அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப் பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5 கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந் து குடித்து வர தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண் டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப் பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கி யத்திற்கும் நல் லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளி யேற்றவும் வெள் ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரு ம்புச்சத்து தாய்ப் பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும்பா லில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுர க்கும்.