Home சமையல் குறிப்புகள் செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

24

தேவையான பொருட்கள் :

காளான் – 300 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) – 1 ஸ்பூன்
சீரகம் – 3/4 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
பட்டை- 2 இன்ச் துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய் – கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை

செய்முறை :

* ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

* சூப்பரான காளான் குழம்பு ரெடி.

* இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.