Home உறவு-காதல் கணவன் மனைவி இந்த ஏழு விஷயங்களை புரிந்த்து கொண்டால் உங்க உறவில்..

கணவன் மனைவி இந்த ஏழு விஷயங்களை புரிந்த்து கொண்டால் உங்க உறவில்..

35

07-1389098927-2ஆண்கள் பற்றி பெண்கள் தவறாக எண்ணுவதும், பெண்கள் பற்றி ஆண்கள் தவறாக எண்ணுவதும் மனித குணாதிசயங்களுள் இயல்பானவையாக மாறிவிட்டன. ஆனால், சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் குற்றம் குறை கூறிக் கொண்டு திரிவது நல்லதல்ல.

அனுமானம்

பெரும்பாலும் ஆண்கள் யாராவது எதையாவது கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் என்ன முடிவாக கூற வருகிறார்கள் என்பதை அனுமானம் செய்துவிடுவார்கள். இது பெண்களுக்கு பிடிக்காது. ஏனெனில், பெண்கள் முழுவதுமாக கேட்டப் பிறகு தான் தங்கள் பதிலை அளிப்பார்கள்.

சிறிய பதில்கள்

ஆண்கள் மணிரத்னம் போல, பெண்கள் பழைய புராணத்தை போல. ஏன் தாமதம் என்ற கேள்விக்கு ஆண்கள் “டிராபிக்” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலை முடித்துவிடுவார்கள். ஆனால், பெண்கள், “நான் இன்னிக்கி காலையில எழுந்து..” என ஆரம்பித்து, தன்னுடன் பயணித்தவர்கள் வரை என விலாவாரியாக தான் பதிலளிபார்கள். பதிலை இப்படி தான் மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள்.

கேட்பது

ஆண்களால் வெறுமென காதுக் கொடுத்து கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. பெண்கள் பேசும் போது, டிவி பார்த்துக் கொண்டே கேட்பது, மொபைலை நோண்டிக் கொண்டே கேட்பது என இருப்பார்கள். இதை பெண்கள் வேண்டா வெறுப்பாக ஆண்கள் நடந்துக் கொள்வதாய் எண்ணுகின்றனர்.

அபூர்வம்

ஆண்கள், பெண்களிடம் கேள்வி கேட்பது என்பது மிகவும் அரிது. ஆனால்,. பெண்கள் அப்படி இல்லை. கேட்ட கேள்வியையே ஆயிரம் தடவை கேட்பார்கள்.

நேருக்கு நேர்

பெரும்பாலும் ஆண்களால் எதையும் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் சந்தேகம், பிரச்சனை என்றால் முகத்திற்கு நேராக கேட்டுவிடுவார்கள். இது, அநாகரிகமான செயல், பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என பெண்கள் சிலர் கருதுவதுண்டு.

ஒரே கேள்வி

ஒரே விஷயத்தை பற்றி பலநூறு தடவை யோசிப்பது பெண்களிடம் மட்டும் தான் சாத்தியம். நிகவுகளுக்கு செல்லும் பொது புடவை தேர்வில் இருந்து காலை உணவு சமைப்பது வரையில் பெண்கள் சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் பலமுறை யோசிப்பார்கள். இதே விஷயங்களை ஆண்கள் வேகமாக செய்தால், அவசர குணம் படைத்தவர்கள் என கூறுவார்கள்.

சோகம்

பெண்கள் சோகமாக இருக்கும் போது யாராவது அரவணைப்பாக பேச வேண்டும் என எதிர்பார்பார்கள். ஆனால், ஆண்கள் தனிமையான சூழலுக்கு சென்றுவிடுவார்கள். இதை பெரும்பாலும் பெண்கள் தவறாக எண்ணுதல் உண்டு.