Home குழந்தை நலம் குழந்தைகளின் குறட்டை பழக்கத்திற்கு காரணம்

குழந்தைகளின் குறட்டை பழக்கத்திற்கு காரணம்

25

குழந்தைகளை எவ்வித குறையுமின்றி, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக அவர்களை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளை சில பழக்கங்கள் பெரிதும் பாதிக்கின்றன. அவற்றை நீங்கள் அறிந்திருந்தும், அதனை சிலர் கண்டுகொள்வதில்லை. அவற்றை சரிசெய்ய பெரிதாய் அக்கறை காட்டுவதில்லை.

அப்படிப்பட்ட குழந்தைகளின் மோசமான பழக்கங்கள் சில உள்ளன. குறிப்பாக குழந்தைகள் குறட்டை விடுவது. குறட்டை என்பது சுற்றி இருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்று மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குறட்டையால் உடலின் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகிறது என்பதை அறிவது கிடையாது. குழந்தைகள் குறட்டை விட்டால், முதலில் அவர்களின் கற்றல் திறன் பாதிப்படைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

11 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அக்குழந்தைகள் அதிக அளவில் குறட்டை விடுகின்றனர் என்றும், தொடர்ச்சியாக குறட்டைவிடும் குழந்தைகள் பகலில் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் இருப்பதாகவும், படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாகவும், கவனிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், மந்த வளர்ச்சி நிலை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய கால குழந்தைகள் சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையே உண்ணுகிறார்கள். இது பெற்றோர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தோன்றினாலும், குழந்தைகள் வளர வளர உப்பு அதிகமுள்ள உணவுக்கு அடிமையாகி, இது ஒருபெரும் பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது. அதிக உப்பு சேர்த்த உணவுகளை உண்பதால், குழந்தை பருவத்திலேயே உடல் பருமன், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள், இதய கோளாறுகள், வாதம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த நோய் பாதிப்புகளை தடுக்க, குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட, அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இளம்வயதிலேயே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுமுறை குறித்து கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். இன்றைய குழந்தைகள் தேவையை விட இருமடங்கு உப்பு உண்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த மோசமான உண்மையை உணர்ந்து பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை குழந்தைகளுக்கு பழக்க முயலவேண்டும்.