Home சமையல் குறிப்புகள் கொத்துக்கறி மட்டன் புலாவ்

கொத்துக்கறி மட்டன் புலாவ்

22

அசைவம் சாப்பிடும் பலருக்கும் பிடித்தமானதாக இருப்பது மட்டன் தான் எனலாம். மற்ற கறி வகைகளை விட மட்டன் சுவை பலரையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் அசைவத்தில் மட்டன் விரும்பி சாப்பிடுபவரா, அப்படியெனில் உங்களுக்கு மிகவும் பிடித்தான மட்டன் கொத்துக்கறி கொண்டு செய்யப்படும் புலாவ் எப்படி செய்வது என இங்கு பார்ப்போமா.??

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 2 கப்
மட்டன் கொத்துக்கறி – 400 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 5
மிளகு – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டன் கொத்துகறியை சுத்தம் செய்து வைக்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு கறியை வேக விடவும்.

* பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

* மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

* இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.