Home இரகசியகேள்வி-பதில் அந்தரங்கம் தொடர்பான கேள்விபதில்கள்

அந்தரங்கம் தொடர்பான கேள்விபதில்கள்

102

வணக்கம்
நானும் எனது காதலியும் பல முறை உடலுறவு கொண்டுள்ளோம். ஆனால் அவளுக்கு அவளது பெண்குறியை நான் நாவால் சுவைப்பது தான் பிடித்திருக்கின்றது. இருந்தும் அவள் வெளியூரில் படிக்கின்றாள். நான் வேறு ஊரில் வேலை செய்கின்றேன் மாதத்தில் ஒரு முறை சந்திப்பதுண்டு. சில சமயம் அவளுக்கு காம எண்ணம் ஏற்படும் போது வேறு ஆணை நாடாது இருக்க நான். அவளுக்கு விரலினால் சுயஇன்பம் காணும் முறையை சொல்லிக்கொடுத்தேன். தற்போது அவளுடைய பெண்குறியில் பருக்கள் தோன்றியுள்ளாதாக சொல்லுகின்றாள். நான் நாவால் வருடும் போதுகூட எரிச்சலும் வலியும் ஏற்படுவதாக சொல்லுகின்றாள். அது மட்டுமல்லாமல் நான் உறவு கொள்ளும் போது அவள் குறியில் இருந்து வெள்ளைத் திரவமாக ஒன்று வெளிப்படுகின்றது. அத்துடன் அவளது குறியில் சில சமயம் சிவப்பு நிற புள்ளிகளும் காணப்படுகின்றது. இது எதனால் ஏற்படுகிறது? எனக்கு பயமான உள்ளது. சுயஇன்பம் பழக்கத்ததால் இப்படி ஏற்படுமா? தயவுசெய்து பதில் தரவும்..

பதில் :
உங்கள் மடல் படித்தேன். முதலில் உங்கள் கொள்கை தவறு நண்பரே. உங்கள் காதலி இன்னொரு ஆணுடன் சென்றுவிடுவாள் என்று நினைப்பது. இப்படி ஒரு சந்தேக எண்ணம் தாங்கள் வாழ்கையை ஆரம்பிக்கு முன்பே ஏற்படுமாயின் அந்த வாழ்கை நீண்ட தூரம் பயணிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
முதலில் உங்கள் சந்தேக எண்ணத்திற்கு விடை கொடுங்கள். துணைவியின் அல்லது காதலியின் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.
அப்பொழுது தான் வாழ்க்கை சிறக்கும். வேறு ஆணுடன் நீ செல்லாமல் இருக்கத்தான் நான் உனக்கு சுயஇன்ப பழக்கத்தை கற்று தந்தேன் என்பதை உங்கள் காதலி அறிந்து கொண்டால்? உங்கள் வாழ்கை அல்லது காதல் கசந்து விடும். ஆகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின் கீழ் வாழ வேண்டும். சரி இனி உங்கள் கேள்விக்கு செல்வோம்
சுயஇன்பம் என்பது சாதாரணமான ஒன்றுதான். அதனால் தீங்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் விரலினால் அல்லது வேறு பொருட்களினால் சுயஇன்பம் காணும் போது காம வேட்கை அதிகரிக்கும் போது பெண்கள் ஆவேசமாக பெண் குறியை விரலினால் அல்லது வேறு பொருட்களினால் உராய்வதால். பெண்குறியில் காயம் ஏற்படுகின்றது. அந்த காயத்தில் சிறுநீர் படும் போது எரிச்சலை வலியை உண்டாக்கி கிருமித் தொற்றுக்கு வழி செய்கிறது. அது நாள்பட கிருமித் தொற்றுக்குள்ளாகி எரிச்சலையும் வலியையும் வெள்ளை போன்ற திரவத்தையும் ஏற்படுத்துகின்றது.
நீங்கள் வேறு பெண்களுடன் உறவில் ஈடுபடடுள்ளீர்களா என்று குறிப்பிடவில்லை. நீங்களும் ஒரு தடவை குருதிப்பரிசோதனை மேற்கொள்வது நல்லது
உங்கள் காதலியை தயங்காமல் வைத்திய ஆலோசனை பெறுமாறு கூறுங்கள். ஏன் எனில் சில சமயம் கிருமி தொற்று பாரதூரமாக அல்லது ஏதாவது பாலியல் நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எதுவும் உறுதியாக சொல்ல முடியாது தகுந்த பாலியல் சம்பந்தமாக பெண் வைத்தியரிடம் ஆலோசனை பெறவும்.

என்ன பிரச்சினை உங்களுக்குள்?

இல்லற வாழ்வை இனிமையாக்க உதவுவது அன்பு ஒன்று தான். தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பொழுக நடந்து கொள்ளும் போது தான் இல்லறம் மணக்கிறது. இனிக்கிறது.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்
பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரு வது கருத்து வேறுபாடுகளால் தான். இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதில்லை. முதலில் உங்கள் மனைவியை ஆழமாக நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவளது தேவை களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுங்கள். நீங்கள் உங்கள் மனைவியிடம் ஒரு மடங்கு அன்பை காட்டினால், அவள் பதிலுக்கு நூறு மடங்கு அன்பை திருப்பித் தருவாள். பெண்மைக்கு மட்டுமே உள்ளது இந்த தாராள குணம். இதைப் புரிந்து கொண்டால் உங்கள் மனைவி உங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விடுவாள். அவளுக்கு நீங்கள் சொல்வதே வேதம் என்றாகி விடும்.

சுதந்திரம்
அன்பை வெறும் வார்த்தைகளில் மட்டும் காட்டாதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும். புதுப்பெண்ணுக்கு அன்பு அதிகம் தேவைப்படுகிறது. தாலி கட்டினாலே அவள் நமக்கு அடிமை தான் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள். அதே போல், தாய் அல்லது சகோதரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடக்குமுறையைக் கையாளாதீர்கள். உங்கள் இருவருக்குள்ளும் உள்ள சுதந்திரத்தில் வேறு எவரும் தலையிட முடியாத அளவில் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து விடுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள்
நிறைய மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவரிடம் மற்றவர் நெருங்கி வரும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். திருமணமான புதிதில், பெண்களுக்கு பிறந்த வீட்டின் மீது அதிக நாட்டம் வருவது இயல்பு. அப்போது அவர்களை அடிக்கடி என்று இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது பிறந்த வீட்டிற்குச் சென்று வர அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு மனதில் உள்ள இறுக்கம் தளர்ந்து விடும். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், அவளுடைய உள்ளத்தில் நீங்கள் நீங்காஇடம் பிடித்து விடுகிறீர்கள். நாளடைவில் அந்த பழக்கமும் அவளுக்கு படிப்படியாக குறைந்து விடும். அங்கு போக வேண்டிய கட்டாயம் இருந்தால் கூட, அதிக நேரம் இருக்க மனமில்லாமல் உங்களைப் பார்க்கும் ஆசையில் ஓடோடி வந்து விடுவாள்.

அன்பின் பாலம்
இருவரது உறவுக்கும் இடையில் உள்ள அன்பிற்கு பாலமாக இருப்பது உடலுறவு தான். அதனால் அதற்கு நீங்கள் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உச்சகட்ட நிலையை எட்டினால் போதும் என்று நினைக்கிறார்கள். மனைவியை திருப்திபடுத்த `அது’ மட்டும் போதாது என்பது கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பான பேச்சு, இதமாக வருடுதல், பூப்போன்ற முத்தம், இதமான தழுவல், கை, கால் விரல்களுக்கு பதமாக சொடக்கு போடுதல் போன்ற முன்விளையாட்டுக்களை தொடரும்போது தான் மனைவியை தனக்கு நெருக்கமானவளாக மாற்றிக் கொள்ள முடியும். பூவை என்றாலே மெதுவாக மலரும் பெண்மை தான். அதைப் புரிந்து கொண்டால் போதும். கணவன் மார்களின் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவளாகி விடுகிறாள், பெண்.