Home சமையல் குறிப்புகள் காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி

23

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
இறால் – 250 கிராம்
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/2 கப்

ஊற வைப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 7 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதில் உள்ள எண்ணெயில் பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நன்றாக கொதித்து கிரேவி திக்கானதும் இறுதியில் இறால் சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், காரசாரமான இறால் மசாலா ரெடி!!!

* இதை சப்பாதி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.