Home ஜல்சா கசந்தது கள்ளக்காதல்! கள்ளக்காதலன் செய்த விபரீதம்!

கசந்தது கள்ளக்காதல்! கள்ளக்காதலன் செய்த விபரீதம்!

34

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் ராஜா. மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (47).

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே லட்சுமியுடனான நெருக்கத்தை கார்த்திகேயன் குறைத்திருக்கிறார். மேலும் லட்சுமி அடிக்கடி கார்த்திகேயனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

கார்த்திகேயன் அவரது நண்பர்களுடன் இருக்கும் போது அங்கே சென்று உல்லாசத்திற்கு அழைப்பதும், பணம் கேட்டு டார்ச்சர் செய்தும் என தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது கணவரின் பி.எப். பணத்தை எடுக்க சேலம் செல்ல வேண்டும் என கார்த்திகேயனை அழைத்திருக்கிறார். கார்த்திகேயனும் தனது காரில் லட்சுமியை அழைத்து சென்றிருக்கிறார்.

சேலம் போகும் போது அரூர் அருகே காட்டுப்பகுதிக்கு வந்த போது லட்சுமி, கார்த்திகேயனை உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கார்த்திகேயன் இரும்பு கம்பியால் லட்சுமி தலையில் அடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மயங்கி விழுந்த லட்சுமியை புடவையால் கழுத்தை இறுக்கியிருக்கிறார். லட்சுமி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

லட்சுமியின் உடலை காட்டுப்பகுதியில் இருந்த தரைப்பாலத்தின் கீழே வீசிவிட்டு தப்பியோடி விட்டார்.

இதையடுத்து போலீஸார் கார்த்திகேயனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.