Home ஜல்சா Kallakathal கணவனின் நண்பனுடன் கள்ள காதல்: காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க்கள்

Kallakathal கணவனின் நண்பனுடன் கள்ள காதல்: காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க்கள்

110

இது என்ன விசித்திரம். உருகி உருகி காதலித்தார்கள் ஆனந்தும் மைதிலியும். ஊரை விட்டு ஓடி சித்தூரில் உள்ள நண்பன் வீட்டில் போய் தஞ்சம் அடைந்தார்கள். ஆறுமாதம் நன்றாக வாழ்ந்தார்கள். நண்பன் சோமு தான் வேலை வாங்கிக் கொடுத்து, வீடும் கொடுத்து, கொடுத்து பராமரித்தான்.

அருகில் உள்ள கிராமத்தில் அரிசி மில் வேலை. ஆனந்த் வேலைக்குப் போவான். ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் பாதியில் வீடு திரும்பினான் ஆனந்த்.வீடு பூட்டி இருந்தது பின் வாசல் வழியாக உள்ளே போனான் ஆனந்த். அதிர்ந்தான் அவனது புது மனைவியும், நண்பன் சோமுவும் அலங்கோல நிலையில் உறவில் ஈடுபட்டிருந்தார்கள்.துடித்துப் போனான் ஆனந்த். நெல் மூட்டைகளை அறுக்கும் சப்பிக் கத்தியால் நண்பனை கொத்திக் கூறு போட்டான். மனைவி தப்பி ஓடினாள்.

ஊர்க் காரர்கள் காப்பாற்றினார்கள். போலீசில் அந்த இளம் மனைவி சொன்ன காரணம் தான் பகீர் என்றது.என் கணவன் குளிக்கவே மாட்டார். காதலிக்கும் போது இந்த விஷயம் தெரியாது. அருகில் படுத்தாலே குமட்டிக் கொண்டு வரும்.எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கவே இல்லை. ஆனால் அவரின் நண்பர் தினமும் குளித்து வாசனையாக வீட்டிற்கு வருவார்.அவர் அருகே செல்லவே அவ்வளவு ஆசையாக இருக்கும். விலை உயர்ந்த சென்ட், பாடி ஸ்ப்ரே யூஸ் பண்ணுவார். நன்றாக உடை அணிவார்.

ஒரு நாள் அவரின் அருகே நெருக்கமாக உட்காரும் வாய்ப்பு கிடைத்தது. என்னையும் அறியாமல் அவர் மீது சாய்ந்து விட்டேன். அவர் ஷாக் ஆனார்.ஆனால் நான்தான் அவரிடம் மயங்கி விட்டேன். கட்டாயப் படுத்தி உறவும் வைத்துக் கொண்டேன். அதிர்ந்தது போலீஸ். “குளிக்கவில்லை என்பதற்கு ஒரு கள்ளக் காதலா” என்று அதிர்ந்து போனது சித்தூர் காவல் நிலையம் .இதை என்னவென்று சொல்வது நண்பர்களே…! காதல் இவ்வளவு மலிவாகி விட்டதா..?