Home ஆண்கள் ஆண்மை பெருக உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்க..! ஜாதிக்காய் எனும் வயகரா..

உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்க..! ஜாதிக்காய் எனும் வயகரா..

52

மனித உடலின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது உயிரணுக்கள் ஆகும். இந்த அணுக்கள் நம்முடைய உடலில் தேவையான அளவு இருந்தால் தான், நாம் குடும்ப வாழ்விலும், இல்லற வாழ்விலும் உயிரோட்டமாக செயல்பட முடியும்.
இந்த உயிரணுக்கள் சிலருக்கு அதிகமாகவே இருக்கும், சில பேருக்கு குறைவாகத்தான் இருக்கும். அதைப் பெருக்குவதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன.
ஜாதிக்காய் எனும் நேச்சுரல் வயகராவைப்பற்றி நாம் தற்பொழுது தெரிந்து கொள்வோம். அதாவது, பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது.
இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுவதாகவும் கூறப்படுகின்றது. மேலும், ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்தும் சாப்பிடலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது.
ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும், இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளதாகவும் மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்