Home குழந்தை நலம் விடுமுறை நாட்களில் குழந்தைகளை கவனியுங்கள்

விடுமுறை நாட்களில் குழந்தைகளை கவனியுங்கள்

31

captureவிடுமுறை நாட்களில் குழந்தைகள் வெயிலில் சென்று அதிக நேரம் விளையாடுவார்கள். இதனால் உடல்நலப்பிரச்சனைகள் வரும். இந்த பிரச்சனைகளில் இருந்த குழந்தைகளை காக்க என்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பார்க்கலாம்.

* சிறு குழந்தைகளுக்கு உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம். குழந்தைகள் நீர் குடிக்க மறந்து விடுவார்கள். ஆக குழந்தைகளுக்கு நீங்களே அவ்வப்போது சிறிது நீர் கொடுங்கள். குழந்தைகள் சோர்ந்து இருந்தாலோ, குறைவாக சிறுநீர் சென்றாலோ குழந்தைக்கு நீர்பற்ற வில்லை என்பதனை உணர்க்க.

* குழந்தைகளை 11-4 வரை வெளியில் விளையாட விடாதீர்கள். குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. வெய்யிலில் எரிந்து விடும். சன்-ஸ்கிரீன் லோடின் கண்டிப்பாய் பயன்படுத்துங்கள்.

* சன்ஸ்டிரோக் என்பது குழந்தைகளுக்கு மிகவும் அபாயமானது.

* சளி, இருமல் போன்ற அலர்ஜி பாதிப்புகள் ஏற்படலாம்.

* பூஞ்சை பாதிப்பு குழந்தைகளை எளிதில் தாக்கும்.

எனவே

* கை, கால்களை குழந்தைகளுக்கு சுத்தமாக கழுவுங்கள்.

* வேர்வை நனைந்த உடைகளை உடனுக்குடன் மாற்றி விடுங்கள்.

* மற்றவர்களின் ஆடை ஷீ இவற்றினை உங்கள் குழந்தைகள் அணியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* செல்லப் பிராணிகளுடன் உங்கள் பிள்ளைகள் விளையாடுவதை தவிருங்கள்.

* வேர்குரு சர்வ சாதாரணமாய் குழந்தைகளைத் தாக்கும். எனவே தரமான சோப் கொண்டு இரண்டு வேளை குளிக்க வைத்து பால்கம் பவுடரினை உபயோகியுங்கள்.

* கண்களில் எரிச்சல், கிருமி தாக்குதல் ஏற்படலாம். கறும்பு கண்ணாடி அணிவது, கிருமி தாக்குதலுக்கு முறையான சிகிச்சை அளிப்பதும் அவசியம்.

* குழந்தைகள் விடுமுறை என்றாலே நீச்சல் குளத்திற்கு சந்தோஷமாய் ஓடி விடுவார்கள். நல்லது தான். ஆனால் இதில் காதில் கிருமி தாக்குதலும் சர்வ சாதாரணமாய் வந்து விடும். சரியான சிகிச்சை தேவை.

* குழந்தைகளுக்கு வெயிலில் அலைந்தால் வயிற்றுப் போக்கு எளிதில் வந்து விடும். சுத்தமான நீர், சுத்தமான உணவு, சுத்தமான சுகாதாரமாக கைகளை வைப்பது இவையெல்லாம் மிக அவசியமாகும்.