Home சமையல் குறிப்புகள் எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

26

தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1 கப்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1 மூடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை :

* இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.

* சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்துடன், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.

* பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும்.

* மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து கிளறவும்.

* இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.

* இத்துடன் கழுவி வைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

* மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

* பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார்.

* இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.