Home அந்தரங்கம் பெண்களுக்கு மிகப் பிடித்த நாள் சனிக்கிழமை ராத்திரி தானாம்…

பெண்களுக்கு மிகப் பிடித்த நாள் சனிக்கிழமை ராத்திரி தானாம்…

41

captureஉறவு என்பது ஆணையும் பெண்ணையும் வேறு உலகத்தில் மிதந்திடச் செய்யும் ஒரு சுக உணர்வு. இதில் காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில், அதுக்கெல்லாம் ஏதுப்பா நேரம் என்று தான் சொல்வார்கள். ஆனால் அதற்கும் அறிவியல் காரணங்கள் உண்டு.

பொதுவாக ஆண்களுக்கு அதிகாலைப் பொழுதிலும் பெண்களுக்கு நள்ளிரவிலும் மூடு வருவது நமக்குத் தெரிந்ததே. அதேபோல, வாரத்தின் சில நாட்களில் மட்டும் பெண்களுக்கு மூடு அதிகமாகுமாம். அது எந்தெந்த நாட்களில் என்பது தான் இங்கு முக்கியம்.

இதைப்பற்றி அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதில் குறிப்பாக பெண்களிடம் அவர்களுடைய உடலுறவு பற்றியும் அவர்களுக்குக் காம இச்சை தோன்றும் நேரங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் கிடைத்த தகவல்கள், அந்த விஷயத்தில் பெண்களுக்கு எப்போது இச்சை தோன்றுகிறது? எப்போது உச்சமடைகிறார்கள் என்பது பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

சனிக்கிழமை இரவில் தான் பெண்களுக்கு மிக அதிகமாக மூடு வருமாம். மற்ற வார நாட்களில், பெண்களுக்கோ அவர்களுடைய கணவருக்கோ வேலைப்பளு அதிகமாக இருந்தால், அதனால் உண்டான மன உளைச்சலில் இருந்து மீளுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். மனதுக்குத் தேவையான ஓய்வு மிக அவசியம்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள், வேலைப்பளு அதிகமில்லாத நாள் என்பதால், அந்த மகிழ்ச்சியிலேயே மனம் சுழலும்.

மனமும் உடலும் அமைதியாய் இயங்கத் தொடங்குமாதலால், சனிக்கிழமை இரவு உடலுறவு கொள்ளும் போது மற்ற நாட்களை விட அதிக அளவிலான உச்சத்தைப் பெற முடிவதோடு, மிக வேகமாக பெண்களும் அடுத்தடுத்து, மல்டிபிள் ஆர்கசத்தை அனுபவிக்கவும் முடியும்