Home உறவு-காதல் மண வாழ்க்கையை துறப்பது எந்த வைகயில் நியாயம்????

மண வாழ்க்கையை துறப்பது எந்த வைகயில் நியாயம்????

20

கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு முன்னு தார ணமாகத் திகழ்ந்த இந்தியாவில் இந்தப் பெருமை மெள்ள மெள்ள சிதை கிறது. மணமான மறுவாரமே கூட தனி க்குடித்தனத்துக்கு தயாராகும் மனோ பாவமும் ஆர்வமும் அதிகரித்து வருகி றது.
இது ஒரு பக்கம் வேதனை என்றாலும் இன்னொரு பக்கம் திருமணத் தையே அடியோடு வெறுக்கும் போக்கும் மிகுதியாகிறது. குடும்ப பிரச்சனைகளை எதிர் கொள்ள தயங்கு வது- பொருளாதார நெருக்கடிகள்- வாழ் வாதார சிரமங்கள்.. இவற்றை யெல் லாம் மனதில் கொள்வதால் மண வாழ் க்கைகை ஏற்க தயங்குகிறார்கள்.
அதிலும், குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் இருப்பவர்கள் கல்யா ணம் என்றாலே பத்தடி தள்ளி நிற்கிற அளவுக்கு இருக்கிறார்கள். பல விஷயங்களில் நாம் மேலைநாடுகளை பின்பற்றி நமது பண்பாட்டை இழந்து வருகிறோம்.
அதில் மிக முக்கியமானது கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இன்றைய சூழலி ல் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அதில் இருக்கிற சுமைகளே நமக்கு சுகம் என்பதை மறந்துவிடுகிறோம் .

இப்போது உறவுகள் கூட உள்ளத்தளவில் இல் லாமல் உதட்டளவுக்கு மாறிவிடடது. உணவு, உடை என எத்தனையோ விஷயங்களில் நாம் மாறிவிட்டோம். எது மட்டுமின்றி இந்த கூட்டு க்குடும்ப வாழ்க்கையைத் துறப்பதும்.. மறப்ப தும் நமக்கு மட்டுமல்ல….
நாட்டுக்கும் நல்லதல்ல. சாதாரண சிரமங்களை நினைத்து, சாதிக்க வேண்டிய மண வாழ்க்கை யை துறப்பது படைப்பின் பரிணாமத்துக்கே அர்த்தமற்றது ஆகிவிடும். முடிந்தவரை கூடிவாழ்வோம்.கோடி நன்மைகள் பெறுவோம்.