Home சூடான செய்திகள் விபசாரத்தில் சிக்கிய பிரபல நடிகை இடைத்தரகரான துணை இயக்குனரும் பிடிபட்டார்

விபசாரத்தில் சிக்கிய பிரபல நடிகை இடைத்தரகரான துணை இயக்குனரும் பிடிபட்டார்

33

ஐதராபாத்தில் தொழில் அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை போலீசிடம் சிக்கினார். இடைத்தரகராக செயல்பட்ட துணை இயக்குனரும் கைதானார்.

நடிகை சிக்கினார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரபல நடிகை விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் கமிஷனரின் அதிரடிப்படையினர் அந்த ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை போலீசிடம் சிக்கினார். நடிகைக்கு இடைத்தரகராக செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ.1 லட்சம் பேரம்
அந்த நடிகை பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பதாகவும், கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் நடிகையின் பெயரையோ, தொழில் அதிபரின் பெயரையோ வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

இடைத்தரகராக செயல்பட்ட பாலு சில தெலுங்கு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் இந்த ஒப்பந்தத்துக்காக நடிகை சார்பில் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார். அந்த தொகையில் அவருக்கு ரூ.15 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை அந்த நடிகை வைத்துக்கொண்டதாக போலீசாரிடம் பாலு தெரிவித்துள்ளார்.

பெரும் பரபரப்பு
நடிகையை மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பியதாகவும், பாலு விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அதிரடிப்படை போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் கோட்டி ரெட்டி கூறினார்.

ஆந்திர தெலுங்கு பட உலகான டோலிவுட்டில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.