Home சமையல் குறிப்புகள் சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா

சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா

17

தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழிக்கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு

வறுத்து அரைக்க :

காய்ந்த மிளகாய் – 18
மல்லி (தனியா ) – 3 டீஸ்பூன்
சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க :

பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஆற வைத்து ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

* நாட்டுக்கோழிக்கறியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

* சிறிதளவு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

* வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்த பின் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்குங்கள்.

* பிறகு அதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்குங்கள்.

* அடுத்து அதில் வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த கறியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள்.

* பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

* மசாலா கெட்டியானவுடன் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

* சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா ரெடி.