Home கருத்தடை 100% பலன் தரும் ஆண்களுக்கான சிறந்த கருத்தடை சாதனங்கள்.

100% பலன் தரும் ஆண்களுக்கான சிறந்த கருத்தடை சாதனங்கள்.

69

பிறப்பினை கட்டுப்படுத்துதல் என்பது இளம் தம்பதியினர் தங்களுடைய உறவில் மிகவும் எதிர்பார்க்கும் அறிவுரைகளில் ஒன்றாக உள்ளது. மணமாணவரோ அல்லது வேறு வகையிலோ, எந்த நிலையிலும் திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்க்கவும், பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்கவும் நினைக்கும் எவருக்கும் உடனே நினைவில் வருபவை கருத்தடை சாதனங்கள் தான்.

ஆண்கள் மற்றும் பெண்களின் கர்ப்பத்தை தவிர்க்கக் கூடிய பல்வேறு கருத்தடை சாதனங்கள் கிடைத்து வருகின்றன. மக்கள் தொகை வெடித்து வரும் நம் நாட்டில், தம்பதிகள் அனைவரும் கருத்தடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அதிமுக்கியத்துவமான விஷயமாக உள்ளது.

பொதுவாகவே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவார்கள். ஆண்கள் உறவைத் தவிர்த்து விரதம் இருத்தல், ஆணுறைகள், வெளிப்புற உறவு, வாசக்டமி (மலடாகி விடுதல்) மற்றும் திருப்பி எடுத்தல் போன்ற நுட்பங்களை கருத்தடை சாதனங்களாக பயன்படுத்தி கருத்தரிப்பதை தவிர்க்க முயல்கிறார்கள்.

ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒவ்வொரு வகையான பயனும், திறனும் உள்ளது. பிறப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் எதிர்பார்க்காத கர்ப்பத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய விஷயங்களில் எல்லா வகையான கருத்தடை சாதனங்களுமே 100% பலன் தருவனவாக உள்ளன. இந்த வழிமுறைகளை பயன்படுத்தும் போது அதற்கு தயாராக இருக்க வேண்டியதும், தேவையான முன்னெச்சரிக்கைகளை செய்து வைக்க வேண்டியதும் உங்கள் கடமையாகும்.

ஆண்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கருத்தடை சாதனத்திற்கும் தனியான வழிகாட்டுதல்கள் உள்ளன. கருத்தடை சாதனங்களுடனேயே கிடைக்கும் இந்த வழிகாட்டுதல்களை, தகுதி வாய்ந்த நிபுணர்களின் அறிவுரைகளுடன் கடைடிபிக்கும் போது சிறந்த பலன் கிடைக்கும்.

உற்பத்தி குறைபாடுகள் அல்லது கிழிந்து விடுதல் போன்ற காரணங்களால் ஆணுறைகளில் கூட 3% மட்டுமே அளவிற்கு செயலிழப்புகள் (Failures) நிகழ்ந்துள்ளன. இது போன்ற முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் அவற்றின் பாக்கெட் மீது எழுத்தப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த வகையான எதிர்கால விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். வெளிப்புற உறவு மற்றும் திரும்ப செய்தல் போன்றவை மிகவும் அபாயகரமான வழிமுறைகளாகவும் மற்றும் குறைந்த அளவே திறன் மிக்கவையாகவும் உள்ளன.

இங்கே ஆண்களுக்கான சில கருத்தடை சாதனங்கள் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளோம்
ஆண்களுக்கான சிறந்த கருத்தடை சாதனங்கள்!!!

100% பலனுள்ள கருத்தடை சாதனமாக இருப்பது உறவைத் தவிர்த்து நிற்கும் விரதம் தான். வார்த்தையில் எளிதில் சொல்லி விட்டாலும், இதனை செய்வதற்கு மிகுந்த மனவுறுதியுடனும், உறவில் உள்ள தம்பதியினர் இருவருமே மனமொத்து எடுக்கும் முடிவாகவும் இருந்தால் தான் இந்த முறை மூலம் கர்ப்பம் தவிர்க்கப்படும். ஆரோக்கியமான உறவுக்கு, நெருக்கமான உடலுறவும் ஒருங்கிணை;த பகுதியாக இருப்பதால், விரதம் இருப்பதற்கு கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நேரடியான உறவைத் தவிர்க்கும் பொருட்டாக அதற்கான கருவிகளை பயன்படுத்துல் அல்லது சுயஇன்பம் செய்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் இந்த உணர்வைத் தவிர்த்திட முடியும்.

மிகவும் பிரபலமான கருத்தடை சாதனங்களான ஆணுறைகள் எளிதில் கிடைப்பவையாகவும், பயன்படுத்தவும் ஏற்றவையாக உள்ளன. முறையான முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்தும் போது, மிகவும் திறன் மிக்கவையாகவும், மிகக்குறைந்த அளவே செயலிழப்பு அடைபவையாகவும் ஆணுறைகள் உள்ளன. ஆணுறையின் மூலம் நெருக்கமான உறவின் பெரும்பாலான இன்பங்களை அனுபவித்திட முடிவதால், இது ஒரு பிரபலமான கருத்தடை சாதனமாக உள்ளது. மேலும், எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளதாலும் அனைவருக்கும் வசதியான தேர்வாக ஆணுறைகள் உள்ளன.

தங்களுடைய துணைவியார் கருத்தரிக்கக் கூடாது என்ற காரணத்திற்காக ஆண்கள் பயன்படுத்தும் கலவி முறையில் ஒன்றாக வெளிப்புற உறவு உள்ளது. உண்மையான உறவு இல்லாமலேயே, இன்பத்தின் பெரும்பான்மையான விஷயங்களை அனுபவிப்பதையே இந்த முறை கையாளுகிறது. இந்த முறையில் திடீரென ஊடுருவல்களை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் விந்தணுக்களை வெளியில் விடுதல் போன்றவற்றை செய்வதன் மூலம் கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் 100% தவிர்க்கப்படுகின்றன.

‘வெளியே எடுத்தல்’ என்றும் சொல்லப்படும் திருப்பி எடுத்தல் முறைக்கு 4% மட்டுமே செயலிழப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது. விந்தணு வெளிப்படும் நிலையில், பெண்ணுறுப்பிற்கு வெளியில் அவற்றை வெளியே விடுவதையே இந்த முறை பயன்படுத்துகிறது. இதன் மூலம் விந்தணுக்கள் கருமுட்டையை அடைவது தடுக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டின் போது எண்ணற்ற அபாயங்களும், தவறுகளும் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

வாசக்டமி என்பது அறுவை சிகிச்சை வழியாக உங்களுடைய ‘விந்தணு பாதையில்’-ஐ வெட்டியோ, மூடியோ அல்லது தடுப்பையோ ஏற்படுத்துவதே. சில நேரங்களில் இது மீண்டும் திறந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், எப்பொழுதுமே ஏற்ற முறை என்று சொல்ல முடிவதில்லை. பிற கருத்தடை முறைகளைப் போலவே வாசக்டமியும், பிறப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக செய்ய உதவும் வழிமுறையாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் குழந்தைகள் தேவையில்லை என்று ஆண்கள் நினைக்கும் போது, இந்த முறை பெரிதும் விரும்பப்படுகிறது.

மாதவிடாய் நாட்களை கவனித்து, பாதுகாப்பான நாட்கள் மற்றும் கருத்தரிக்க ஏற்றதாக இருக்கும் உடலுறவைத் தவிர்க்க வேண்டிய நாட்கள் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு உறவு கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்புகள் பெரிதும் குறைந்து விடும். இது போன்ற பாதுகாப்பான நாட்களில் ஆண்கள் தங்கள் துணைவியருடன் ஆணுறை அல்லது திருப்பி எடுத்தல் போன்ற வழிமுறைகளில் உறவு கொள்ளலாம்.