Home உறவு-காதல் ஆண்களிடமிருந்து பெண்கள் அதிகம் எதிர்பார்க்கும் அந்த மந்திர வார்த்தைகள் என்ன தெரியுமா?

ஆண்களிடமிருந்து பெண்கள் அதிகம் எதிர்பார்க்கும் அந்த மந்திர வார்த்தைகள் என்ன தெரியுமா?

31

நீங்கள் கட்டியணைத்து காதலை வெளிப்படுத்துவதை விட, சில வார்த்தைகள் மூலம் பல மடங்கு அதிகமாக உங்கள் மனைவியிடம் அன்பை வெளிப்படுத்தலாம். அதைத்தான் பெரும்பாலான பெண்களும் எதிர்பார்க்கிறார்களாம். அப்படி அந்த மந்திர வார்த்தைகள் என்ன? அதனால் ஏன் பெண்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்பதை பார்க்கலாம்..

நீ அழகாக காட்சியளிக்கிறாய்..!

நல்ல உணவு, நல்ல உடை, தங்கள் அழகை பாராட்டும் வார்த்தைகள். இவை மூன்றும் இல்லை என்றால் பெண்களால் உயிர் வாழ முடியாது. எனவே மூன்றாவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் மனைவியின் அழகை அடிக்கடி புகழ்ந்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் எப்போதும் காதல் மழைதான்.

என் வாழ்க்கையில் வந்த முதல் பெண் நீ தான்..

இந்த வார்த்தையை உங்கள் மனைவியிடம் கூறுவதனால் அவருக்கு ’என் கணவர் எனக்கு மட்டும்தான்’ என்ற நம்பிக்கை பிறக்கும். இதன் மூலம் இல்லற வாழ்க்கையில் நம்பிக்கையும் அன்பும் பெருகும்.

நீ படுக்கையறையில் ஒரு பெண் புலி..!

இல்லற உறவின் போது சரியாக நடந்து கொண்டோமோ? என்ற சந்தேகம் எப்போதும் பெண்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அந்த தருணத்தில் நீங்கள் இந்த வார்த்தையை கூறினால் இன்னும் மகிழ்ச்சியுடன் இல்லறத்தில் இணைவார்.

நீ கண்டிப்பாக நல்ல தாயாக இருப்பாய்..!

எல்லா பெண்களுக்கும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த குழந்தைகளுக்கு தன்னால் நல்ல தாயாக நடந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகமும் இருக்கும். இந்த தருணத்தில் நீங்கள் இந்த வார்த்தையை கூறுவது அவர்களுக்கு மன தைரியத்தை அளிக்கும்.

என்னோடு காலம் முழுக்க இருப்பாயா?

பார்க்க முட்டாள்தனமான கேள்வியாக இருந்தாலும் கொஞ்சம் ரொமாண்டிக்காவும் கொஞ்சம் செண்டிமெண்டாகவும் இருக்கும் இந்த வார்த்தைக்கு ஆற்றல் அதிகம். ஒரு தடவை உங்கள் மனைவியிடம் கேட்டுதான் பாருங்களேன்.. அப்புறம் ஒரே முத்த மழைதான்..!

இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

இந்திய சமுதாயத்தில் அனைத்து முடிவுகளும் ஆண் தான் எடுக்க வேண்டும் என்பது போல கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் தன்னுடைய கணவர் தனக்கு சம உரிமை வழங்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே நீங்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து உங்கள் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டு பாருங்கள். நெகிழ்ச்சியுடன் நீங்கள் முடிவெடுத்ததுதான் சரி என உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

எனக்கு ரொம்ப பிடிச்ச பெண் நீதான்..!

தன்னைத் தவிர வேறு யார் மீதும் தனது கணவர் அன்பு வைத்துவிடக் கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருப்பார்கள். இதுவும் ஒரு வகை காதல்தான். எனக்கு உன்னை மட்டும்தான் இந்த உலகத்தில் பிடிக்கும் என்பது போன்ற வார்த்தைகளை உங்கள் மனைவியிடம் அடிக்கடி சொல்லுங்கள். வாழ்வு அன்பினால் செழிக்கும்.

உன்னை அடைந்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்..!

இதுவும் ஒரு வகையில் உங்கள் மனைவியை புகழ்வது போலத்தான். ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் கூறும் போது உங்கள் மீதான அன்பு உங்கள் மனைவிக்கு பல மடங்கு அதிகரிக்கும்.

நான் என்ன நினைக்கிறேனு உனக்கு தெரியுமே..!

இல்லறம் என்பது கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதுதான். தனது கணவனுக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? என்பதை அறிந்து கொள்ள பெண்கள் எப்போதும் மெனக்கெடுவார்கள். அந்த மெனக்கெடலுக்கு பாராட்டளிப்பது போல இந்த வார்த்தையை நீங்கள் சொன்னாலே போதுமானது. அவர்கள் மனம் நிறைந்து போகும்.

ஐ லவ் யூ..!

இந்த வார்த்தையைத்தான் தங்களது கணவர்கள் அடிக்கடி சொல்ல வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும் எதிர்பாராத தருணங்களில் எதிர்பாராத சூழலில் இந்த வார்த்தையை நீங்கள் சொன்னால் உங்கள் மனைவி அப்படியே அசந்து போவார்.