Home இரகசியகேள்வி-பதில் ஆண்களுக்கு உடலுறவின்போது விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு திரவமேதும் வெளியேறுமா?

ஆண்களுக்கு உடலுறவின்போது விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு திரவமேதும் வெளியேறுமா?

273

மாதவிலக்கின் போது உடலுறவு கொள்ளலாமா?

மாதவிலக்கு என்றால் என்ன என்று வினா எண் 14-ல், முன்பே விளக்கப்பட்டுள்ளது. அதாவது பருவமடைந்த பென் இன விருத்திக்காக அடிவயிற்றில் (அண்ட கோசத்தில்) உருவாகும் சினைமுட்டை கர்ப்பப்பைக்கு வந்து அது குறித்த காலத்திற்குள் கருவுறுதல் நடைபெறாதபொழுது இரத்தமாக பெண்ணின் பிறப்பு உறுப்பு வழியாக வெளியேறும் நிகழ்வே மாத விலக்காகும். இது குறிப்பிட்ட சில நாட்காளே (3 முதல் 5 வரை) இருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட சில நாட்களில் அல்லது இதற்கு முன்னும் பின்னும் சில நாட்களுக்கு பெரும்பாலான பெண்களின் மனநிலை சீராக இருப்பதில்லை. அதிக கோபம், எரிச்சல், வலியினால் உடல் நலிவு போன்ற நிலையில் இருப்பார்கள். அந்த சமயம் அவர்களுடன் உடலுறவுக்கு முயல்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.

மேற்கண்ட பிரச்சனைகள் இல்லாதபோது ஆரோக்கிய மான உடலமைப்புள்ள பெண்களுடன் மாதவிலக்குக் காலங் களில் அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு கொள்வது மருத்துவ ரீதியில் தவறு இல்லை. மருத்துவர்களின் கூற்று அப்படி யிருந்தாலும் சம்மந்தப்பட்ட பெண்ணின் மனநிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .(இது அவரவர்களின் மன நிலையைப் பொறுத்த விசயமாகும்.)

. ஒரு பெண் பூப்படைந்த நாள் முதல் உடலுறவு கொள்ள ஏற்றவளாக இருப்பாளா?

ஒரு பெண் பூப்படைந்து விட்டாலே அவள் அன்று முதல் கருத்தரிக்க (குழந்தை பெற) தயாராகிவிட்டாள் என்றெ பொருள். எனவே பூப்படைந்தவுடன் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் பெண்களின் வயது (ஏனெனில் தற்போது 12 அல்லது 13 வயதுகளிலேயே சில பெண்கள் இந்த நிலையை அடைந்துவிடுகிறார்கள்) உடல்நலன், சமூக நலன் போன்றவற்றைக் கருத்திற் கொண்டும், பெண்கள் குழந்தை பெறுவதை எவ்வளவு காலம் தள்ளிப்போட திட்டமிடுகிறார்களோ அது பெண்களுக்கு நல்லது. பெண்கள் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவுடன் வாழ்ந்தால் பாராட்டுக்குரியது.

. ஆண்களுக்கு உடலுறவின்போது விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு திரவமேதும் வெளியேறுமா?

உடலுறவின்போது இருபாலருக்கும் உயவுத் திரவம் சுரக்கும். (இந்த உயவுத்திரவம் பெண்களுக்கு உச்சக் கட்ட நேரங்களில் அதிக அளவு சுரக்கும்) உடலுறவின்போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதுபோல பெண்களுக்கு எந்தத் திரவமும் வெளிவருவது இல்லை.

55. கருவுண்டான பிறகு எத்தனை மாதங்கள் வரை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்?

கருவுண்டாகி குழந்தை பெறுவதற்கு முதல் நாள் வரை உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று மருத்தவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் கருவுண்டான பெண்ணின் உடல் நிலை, மன நிலையைக் கருத்தில் கொண்டு இருவரும் கால அளவை தீர்மானித்துக் கொள்வது நல்லது.

. பிரசவத்திற்குப்பின் எவ்வளவுகாலம் கழித்த பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?

சுகப் பிரசவமாக இருந்தால் 1 மாதத்திற்குப் பிறகு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிகின்றனர். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால் அந்த வலியிலிருந்து அவர்கள் முழுமையாக குணமடையும் வரை பொறுத்திருந்து மருத்துவரின் ஆலோசனைப்படி உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். இரத்தக்கசிவு இருக்குமானால் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக பெண்ணின் உடல், மனவலிமை மற்றும் அவர்களின் விருப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு உறவு கொள்ள வேண்டும்.

.கருப்பையில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்வது என்றால் என்ன?

செவி உணரா ஒலி அலைகலை, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, வளரும் குழந்தையின் நிலையைத் திரையில் காண முடியும். இதனால் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதயையும் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சி அதன் செயல்பாடு இதன் மூலம் அறிய முடிகிறது. செலுத்தப்படும் ஒலி அலைகள் குறிப்பிட்ட நெறிமுறைக்கு மீறி இருப்பின் குழந்தையின் உடல் நலத்தைப் பாதிக்கும். குழந்தையின் உடல் நலத்தைப் பாதிக்கும். குழந்தையின் உடல் ஊனம் ஏற்பட்டு இருந்தால் ஸ்கேன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஊனமுற்ற குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்து விட முடியும். தாய் கருவுற்று இருக்கும்போது நோய்வாய்ப் பட்டால் சில சமயங்களில் அந்நோய் கருவில் உள்ள குழந்தை யையும் பாதிக்கும். இம்முறை மூலம் அதனை அறிந்து கொள்ள முடியும். அதே சமயம் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதையும் பார்த்து பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்யவும் இம்முறை தவறாகப் பயன் படுத்தபட்டு வருகிறது.

. ஆணின் விந்து என்பது உடலின் முக்கியமான திரவம் என்றும், இது 40 துளி இரத்தத்தின் மூலம் 1 துளி விந்தாக மாறுகிறது என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா?

இது தவறான தகவல் ஆகும். வாயில் சுரக்கின்ற உமிழ்நீர் மற்றும் வயிற்றில் சுரக்கின்ற சில திரவங்கள் உணவை செரிப்பதற்கு உதவுகின்றது. கண்களில் உள்ள கண்ணீர், கண்ணின் நெகிழ்வுத் தன்மைக்கு உறுதுணையாக உள்ளது. இதுபோல் விந்துவும், உடலில் சுரக்கின்ற ஒரு திரவமே. இதில் உயிர் அணுக்கள் அடங்கியுள்ளன என்பதுதான் அதில் வேறுபாடு ஆகும். மற்றபடி விந்துவுக்கு வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

விந்தைச் சேமித்து தலை உச்சிக்கு எடுத்துச் சென்று யோகியாகலாம் என்றும், விந்தைச் சேமிப்பதால் உடல், வலிவு, மனவலிவு பெறலாம் என்பது போன்ற தவறான, மூடநம்பிக்கை யான கருத்துக்களை மத அடிப்படையில் சொல்லி வருகின்றனர், இது தவறு.

. விரை (கொட்டையில்) அடிபட்டால் உயிர் போய்விடுமா?

ஆடு, மாடு போன்றவற்றின் கொட்டைகளைக் கசக்கி விடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்ய முடியாமல் செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவ்வாறு செய்வதால் அதற்கு உயிர் போய் விடுவது இல்லை. மாறாக தாளாத வலி மட்டும் அந்த நேரத்தில் உடலில் ஏற்படுகிறது. மனிதனுக்கு மிகவும் மென்மையான பகுதியான இப்பகுதியில் அடிபட்டால் பொறுக்க முடிவதில்லை. அந்த திடீர் வலி காரணமாக இறப்பு ஏற்படலாம். தகுந்த முதலுதவியை விரைந்து செய்வதன் மூலம் மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

. ஓரினச்சேர்க்கை என்றால் என்ன?

ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் உடலுறவு கொள்வதை ஓரினச்சேர்க்கை என்கிறோம். ஆண், ஆணோடு உடலுறவு கொள்வதை லெஸ்பியன் (டநளbயைn) என்கிறோம்.

. மலவாயில் உடல் உறவு கொள்வது ஆரோக்கியமானதா?

இல்லை. மலவாயில் உடலுறவு கொள்வதற்கும், பெண் உறுப்பில் உடலுறவு கொள்வதற்கும் அடிபடையில் வித்தியாசம் அதிகம் உண்டு. பெண் உறுப்பில் உடலுறவு கொள்ளும்போது உயவுத் திரவங்கள் சுரக்கின்றன. எனவே உயவுத்தன்மை கிடைக்கும். மலவாயில் உடலுறவு கொண்டால் உயவுத் திரவங்கள் சுரக்காது. எனவே நெகிழ்வுத் தன்மை கிடைக்காது. மேலும் அதன் விட்டம் சிறியது, இறுக்கமானது. அதன் காரணமாக ஆணுறுப்பில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட ஒருவரிடம் உள்ள நோய் மற்றவரிடம் பரவ வாய்ப்புள்ளது. இதன் மூலம் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.