Home இரகசியகேள்வி-பதில் ஆண்குறி பெண்குறி தொடர்பான செக்ஸ் கேள்விகள்

ஆண்குறி பெண்குறி தொடர்பான செக்ஸ் கேள்விகள்

822

penkal paaluravu kelvi,Body Scent For Sexual Attraction,aanmai kuraivukku ,pennin suyainpa kelvi,udal uravu inpam,Sex Therapy,kanavan kelvikal,sixteen sex,athika sex,sex pidikkala,pidisa sex uravu,பெரும்பாலான பாலியல் சந்தேகங்கள் ‘நான் எப்படி எனது ஆண்குறி அளவை அதிகரிப்பது?”நான் நீண்ட நேரம் படுக்கையில் செயல்படுவது எப்படி‘ மற்றும் நாங்கள் அவள் கர்ப்பமடைவாளா? போன்றே இருக்கின்றன. எனவே, கொண்டிருந்த ஒரு 19 வயது இளைஞனிடம்இருந்து சில வினோதமான (மற்றும் தனிப்பட்ட!) செக்ஸ் பற்றி கேள்விகளை.ஒரு மின்னஞ்சலில்பார்க்க மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது நீங்கள்அவற்றை படித்துபார்ப்பது வேடிக்கையாக இருக்கும்.

இங்கே எங்கள் பதில்களுடன் கூடிய கேள்வி தொகுப்பு உள்ளது, மற்றும் நாங்கள் ந்மது இளைய நண்பர் தகவல்களை பெறுவர்ர் என்று நம்புகிறோம்.
வணக்கம்.நான்ஜெயேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 19 வயதானவான் மற்றும் எனக்கு பெண்கள் மற்றும் பெண் உடல் பற்றி நிறைய கேள்விகள் இருந்தது. நீங்கள், கேட்கப் பட்ட வரிசையில் எனது கேள்விகளுக்கு பதிலளித்து உதவ முடியுமா?

கே.ஆண்கள் விந்துவை வெளியே தள்ளுவது போல, பெண்களும் விந்துவை தள்ளுகிறார்களா?
பெண்களும் வெளியே தள்ளுகிறார்கள், ஆனால் விந்துவை அல்ல. சில பெண்கள் உச்சியை அடையும் போது தெளிவான திரவத்தை வெளியே தள்ளுகின்றனர் ஆனால் அது விதிமுறையல்ல
கே: இருவரும் ஒரே சமயத்தில் உச்சம் அடைந்தால், ஆணின் விந்து பெண்ணின் வெளித்தள்ளுதலுடன் வெளியே வந்து ஒன்றையொன்று ரத்து செய்யுமா? பின் கர்ப்பமடைய வாய்ப்பிருக்காது என்பது சரியா?
இருவரும் ஒரே சமயத்தில் உச்சம் அடைந்தோ அல்லது வெளித்தள்ளினாலும் கூட எப்போதும் கர்ப்பமடைவதற்கான அபாயம் உள்ளது. எந்த வகையான பாதுகாப்பற்ற செக்சும் கர்ப்பமடைய வழிவகுக்கலாம் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள், எனவே எப்போதும் ஆணுறையை உபயோகியுங்கள். தேவையில்லாத கர்ப்பத்தைத் தடுக்க 8 கருத்தடை முறைகள் பற்றி படியுங்கள்.
கே: மாதவிடாய் விந்து வெளித்தள்ளுதலும் மற்றும் உச்சம் அடையும் போது விந்து வெளித்தள்ளலும் ஒன்று தானா?
மாத விந்து தள்ளுதல் என்று எதுவுமில்லை.நாம் நீங்கள் கருப்பை மற்றும் யோனியிலிருந்து வரும் ரத்தம் மற்றும் மியூகோசல் திசுக்களின் கொண்ட மாதவிடாய் சுழற்சி பற்றி பேசுகிறீர்கள் என்று கருதுகிறோம். உச்சத்தில் விந்து யோனியின் மசகிடலை கொண்டுள்ளது
கே.: முன்பாகவே வெளியேற்றுதல் கர்ப்பத்தை உண்டாக்குமா?
விந்து முனே வெளியேறுதல் கர்ப்பத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அது வெளியேற்றப்படும் போது, அது கடந்த முறை நீங்கள் செக்ஸ் இருந்தது அல்லது சுயைன்பத்தில் இருந்த போது வடிகுழாயில் விட்டுச் சென்ற விந்துவை கொண்டிருக்கலாம். எனவே உடலுறவின் போது ஆணுறையை பயன்படுத்துவது ஒரு நல்ல யோசனையாகும்.
கே: ஆணுறையை பயன்படுத்தினால, பின் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. சரியா?
நீங்கள் சரியாக ஆணுறையை பயன்படுத்தி மற்றும் அது கிழியாமல் இருந்தால், வாய்வழி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

கே ஒரு அவசர மாத்திரை மற்றும் காலைக்கு-பிறகு மாத்திரை இடையே என்ன வேறுபாடு உள்ளது? ஒரு பெண் மாத்திரையை பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பிறகு சாப்பிட வேண்டும், ஒருவழக்கமான அடிப்படையில் அல்ல. சரியா?

மாத்திரையின் பலாபலனைப் பொறுத்து, ஒரு அவசர மாத்திரையை பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் 24-72 மணி நேரத்திற்குள் எடுக்கலாம். கர்ப்பத்தைத் தடுக்க,ஒரு காலத்தில் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளும் இருக்கின்றன.இருப்பினும், மாத்திரைகள் கர்ப்பங்களை தடுக்கலாமே தவிர எச்.ஐ.வி / எய்ட்ஸ் அல்லது மற்ற பால்வினை நோய்களைத் தடுக்க முடியாது.
கே: அவள் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது என்று ஏன் சொல்லப் படுகிறது? அந்த சமயத்தில் நாம் பாதுகாப்பான உறவு கொள்ள முடியுமா?
நம் கலாச்சாரம், பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அழுக்காக இருப்பதாக கருதுகிறது, அதனால் தான் அவர்கள் “கடவுள்” அருகே செல்லவோ அல்லது சிறிது புனிதமான பொருளாக கருதுபவற்றைக் கூட தொட அனுமதிப்பதில்லை.எனினும்,தர்க்கரீதியாகபேசும் போது, அந்த காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான காரணம் எதுவுமில்லை – உணமையில், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அப்போது முழுவதுமாக இல்லை. இருப்பினும், சில பெணகளுக்கு அது மிகுந்த வலியான காலமாக இருக்கும் மற்றும் அவர்கள் தசைபிடிபுகளால் அவதிப்படுவார்கள் எனவே, உடலுறவு அவர்கள் மனதில் கடைசியாகத் தான் இருக்கும்.. ஆணுறையை உபயோகிப்பது நல்ல யோசனையாக இருந்தாலும், பால்வினை நோய் பரவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கே: ஒரு சுன்னத் செய்த மற்றும் ஒரு சாதாரண ஆண்குறி இடையே உடலுறவு போது எந்த வித்தியாசமாவது இருக்கிறதா?
ஒரு சுன்னத் செய்த மற்றும் ஒரு சாதாரண ஆண்குறி இடையே உடலுறவு போது குறிப்பிடத்தகா வித்தியாசம் ஏதுமில்லை, ஆனால் சில ஆய்வுகள்,மொட்டு முனைத்தோலில் நரம்பு நுனிகள் நிறைய உள்ளன என்பதால் முனைத்தோலினால் ஆண்கள் அதிக விழிப்புணர்ச்சி அனுபவிக்கிறார்கள் என்று சொல்கிறது. உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுன்னத் செய்த ஆண்குறி பாதிக்கிறதா என்பதைப் பற்றி படியுங்கள்..
கே: நீங்கள் வாய்வழி மற்றும் ஆசனவாய் செக்ஸ் வழியாக ஹெச்ஐவி பெற முடியுமா?
வாய்வழியைக் காட்டிலும் பாதுகாககப் படாத யோனி வழியான செக்ஸில் ஹெசஐவி பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது,எனவே நீங்கள் வழக்கமான யோனி உடலுறவு கொள்ளவில்லை என்றால் ஒரு ஆணுறை பயன்படுத்துவது முக்கியமானது.
கே. நீங்கள் செக்ஸ் பற்றி பொருத்தமாக வேறு எந்த தகவல் இருந்தால தயவு செய்து சேர்க்கவும்….
நாம் செக்ஸ் பற்றி கொடுக்க முடிகின்ற மிக முக்கியமான தகவல் மிகவும் சக்தி வாய்ந்தது மூளை தான், பாலியல் உறுப்பான ஆண்குறி இல்லை. உங்கள் கற்பனையை உபயோகியுங்கள். உங்கக் கற்பனை மற்றும் சாகச உணர்வை நிட ஆண்குறியின் அளவு மிகவும் முக்கியமானதல்ல என்று தெரிந்து கொள்ளவும்.

பிறப்புறுப்பில் துர்நாற்றம் (Vaginal Odour)

பிறப்புறுப்பிலிருந்து எதேனும் விரும்பத்தகாத வாடை வீசுவதை பிறப்புறுப்பில் துர்நாற்றம் என்கிறோம்.உடலின் நிலை சாதாரணமாக உள்ள ஒருவருக்கு, பிறப்புறுப்பானது அங்கு சுரக்கும் சில சுரப்புத் திரவங்களின் (வெளியேறும் திரவங்கள்) மூலம் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். ஆண் குறியில் சிறிதளவு துர்நாற்றம் இருப்பதைப் போலவே, பிறப்புறுப்பிலும் அதன் இதழ் பகுதியிலும் (வல்வா) சிறிதளவு துர்நாற்றம் இருப்பது சாதாரணம் தான். மற்றவர்கள் உணரும் அளவிற்கு அது இருக்காது.அந்த நாற்றம் அருவருப்பூட்டும் வகையில் மாறி அதிகமானால் அது சங்கடமாக இருக்கும்.

ஒரு பெண் வழக்கமாக தவறாமல் குளித்தால், பிறப்புறுப்பில் துர்நாற்றம் அவ்வளவாக இருக்காது. ஒரே நாளில் வெவ்வேறு நேரத்தில் இந்த துர்நாற்றத்தின் அளவு மாறிக்கொண்டே இருக்கலாம், சாதரணமாக வியர்ப்பதாலும் இது ஏற்படலாம்.மாதவிடாய் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இதன் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.

வழக்கத்திற்கு மாறான விதத்தில் பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படக் காரணங்கள் என்ன? (What causes abnormal vaginal odour?) 

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படலாம், சுத்தமாக இருப்பதாலேயே இதனைத் தவிர்க்க முடியும்.

அடிக்கடி உங்கள் பிறப்புறுப்பின் வாசனை மாறுவதாகத் தெரிந்தால், ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். கடுமையான துர்நாற்றம் அல்லது வித்தியாசமான (உதாரணமாக “மீன்” வாடை) துர்நாற்றம் இருந்தால், அது பிரச்சனையாக இருக்கலாம் (பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் இருக்கலாம்). இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

ஏதேனும் பிரச்சனையால் இப்படி துர்நாற்றம் ஏற்படுவதாக இருந்தால், கூடவே அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட வேறு சில அறிகுறிகளும் தென்படும், உதாரணமாக பிறப்புறுப்பில் ஏதேனும் வெளியேறலாம், அரிப்பு ஏற்படலாம், எரிச்சல் இருக்கலாம். பிறப்புறுப்பில் துர்நாற்றம் உள்ளது, ஆனால் வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், வேறு பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே ஆகும்.

பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நோய்த்தொற்று சம்பந்தமான காரணங்களும் இருக்கலாம் நோய்த்தொற்றல்லாத காரணங்களும் இருக்கலாம்.

பெரும்பாலும் பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படக் காரணமாக இருப்பவை:

பிறப்புறுப்பில் பாக்டீரியா: பிறப்புறுப்பில் அளவுக்கு அதிகமான பாக்டீரியாக்கள் வளர்ந்து தங்கியிருக்கும் நிலை.பெரும்பாலும் பிறப்புறுப்பில் ‘மீன்’ வாடை வீசக் காரணமாக இருக்கும் நோய்த்தொற்று இதுவேயாகும்.
ட்ரைக்கோமோனியாசிஸ்: பாலியல்ரீதியாகப் பரவும் ஒரு நோய்த்தொற்று.இந்த நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு, பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் திரவம் மெல்லிதாகவும் நுரை கொண்டதாகவும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் இருக்கும்.
கேண்டிடா தொற்று: கேண்டிடா எனும் யீஸ்ட்டாலும் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று ஏற்படலாம், இது ஏற்பட்டிருந்தால் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளை-சாம்பல் நிறத்தில் பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறும்.
கீழ் இடுப்புப்பகுதி அழற்சி (பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்) (PID): பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்று, இதனாலும் துர்நாற்றம் ஏற்படலாம்.பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறலாம்.
பிறப்புறுப்பின் இதழ் பகுதியில் புண்: பிறப்புறுப்பின் இதழ் பகுதியில் புண், குறிப்பாக டானோவேனோசிஸ் அல்லது கேங்க்ராய்டு காரணமாக ஏற்படும் புண்
பிறப்புறுப்பில் ஏதேனும் பொருள்களை மறந்து விட்டுவிடுதல்: டேம்பன், பிறப்புறுப்பில் பயன்படுத்தும் டயஃப்ரம் அல்லது ஸ்பாஞ்சு போன்றவற்றை எடுக்காமல் விட்டுவிடுதல்.
விபத்து, அறுவை சிகிச்சை அல்லது பிறப்பின் போது ஏற்படும் காயத்தினால், பிறப்புறுப்பில் இருந்து மலக்குடலுக்கு அல்லது சிறுநீர்ப்பைக்கு துளைப் புண் (ஃபிஸ்டுலா) உருவாதல்

பிறப்புறுப்பு துர்நாற்றத்திற்கான நோய்த்தொற்றல்லாத காரணங்கள்:

அதிகமாக வியர்த்தல் (குறிப்பாக அதிக உடல் எடை கொண்ட பெண்கள்)
வயிறு உப்புசம் அல்லது மலச்சிக்கல் காரணமாக துர்நாற்றம் கொண்ட வாயு வெளியேறுதல்
சிறுநீர் தானாக வெளியேறுதல் – அம்மோனியா நாற்றம்
சுத்தமாக இல்லாமை
பிறப்புறுப்பு இதழ் பகுதியில் புற்றுநோய்
உளவியல் பிரச்சினைகள்
எப்போது மருத்துவ உதவி பெற வேண்டும்? (When to seek medical care?)

பிறப்புறுப்பில் தொடர்ந்து துர்நாற்றம் இருந்தால், பரிசோதனை செய்துகொள்வதற்காக உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

பிறப்புறுப்பின் pH-ஐ சோதித்தல், பிறப்புறுப்பு அல்லது பிறப்புறுப்பு இதழ் பகுதிகளைத் துடைத்தெடுத்து சோதனை செய்தல் மற்றும் தேவைப்பட்டால் தோல் திசுச் சோதனை போன்ற முறைகள் மூலம் சோதனை செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் துர்நாற்றம் உள்ளதா எனக் கண்டறியப்படுகிறது.

எளிதில் பின்பற்றக்கூடிய பொதுவான தீர்வுகள்:

தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளை மிருதுவான தன்மை கொண்ட சோப்பு கொண்டு அதிக நீரூற்றிக் கழுவுதல்
மிகவும் இறுக்கமான உள்ளாடை அணிவதைத் தவிர்த்தல்
அடிக்கடி உள்ளாடைகளை மாற்ற வேண்டும்
எடையைக் குறைத்தல்
அதிக ஆற்றலுள்ள அல்லது வாசனை சோப்புகளைப் பயன்படுத்த வேண்டாம். பிறப்புறுப்பில் நீரைப் பீய்ச்சியடித்துக் கழுவுவது நல்லதல்ல, அப்படிச் செய்வது பிறப்புறுப்பில் இருக்கும் சாதாரண நுண்ணுயிர்களின் சமநிலையைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. பிறப்புறுப்புக்கான டியோடரண்ட்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அவை எரிச்சலை ஏற்படுத்தி ஒவ்வாமை (அலர்ஜிக்) விளைவுகளை ஏற்படுத்தலாம்.