Home இரகசியகேள்வி-பதில் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டால் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டா?

வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டால் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டா?

135

வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டால் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டா? எனக்கு அதில் ஆர்வம் இருந்தும் இந்தக் காரணத்தை சொல்லித்தான் மறுக்கிறாள் என் மனைவி.

உண்டு. வாயிலிருந்து வயிறுவரை ஓடும் உட்தோலில் எங்காவது கொஞ்சம் வெடிப்பு விட்டிருந்தாலும் போதும். எச்.ஐ.வி. கிருமி மாதிரியான சாத்தான்கள் உள்ளே புகுந்து ஆரோக்கியத்துக்கு பெரிய உலை வைத்துவிடும்.

இது தவிரவும் இந்த வாய்வழிப் புணர்ச்சியை பெண்கள் மறுக்க வேறுபல காரணங்கள் உண்டு.

இந்த வகைப் புணர்ச்சியில் அவளுக்கு அசௌகரியம் அதிகம், ப்ளஸ் சுகமே கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் ஓர் ஆண் இதற்கு வற்புறுத்தினால் ஒன்று அவன் தன் பங்குக் கடமையை ஆற்ற முடியாத சோம்பேறி அல்லது ஆற்ற மறுக்கும் சுயநலவாதி என்கிற வெறுப்புணர்ச்சி மேலோங்குவதால், பெண்கள் பெரும்பாலும் இவ்வகைப் புணர்ச்சியை விரும்புவதில்லை.

ஆண்கள் மட்டும் அரவாணிகளாக மாறுவார்களா?… இல்லை பெண்களுமா?

அரவாணிகளில் ஆணாக இருந்து மாறுபவர்கள் மட்டும்தானா அல்லது பெண்களிலும் உண்டா?

அரவாணி என்று அழைக்கப்படுபவர்கள், தங்கள் மனம் பெண்ணாக இருப்பதால், தப்பித்தவறி ஆணாகப் பிறந்த தங்கள் உடலைத் திருத்தி தங்கள் விருப்பம்போல் பெண்ணாகவே மாற்றிக்கொள்ள விரும்புவார்கள்.

இப்படித் தங்கள் பாலின அடையாளம் குறித்து சில மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தான் பாலுணர்வு அடையாளக் குறைபாடு என்கிறோம்.

இந்தப் பிரச்னைகள் பெண்களுக்கும் வருவதுண்டு. அரிதாகச் சில பெண்களும் தங்களை மனத்தளவில் ஆணாகப் பார்ப்பதால், தங்கள் உடலையும் ஆண்மைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த வகைக் குறைபாடு இரு பாலினருக்கும் பொது. ஹார்மோன்களின் விசித்திரக் குறைபாடுகளாலும், மரபணுக்களில் நேரும் மாற்றங்களாலும், வளர்ப்பு முறை காரணமாகவும் இப்படிப்பட்ட பிரச்னைகள் நேருகின்றன.

பெண்ணுறுப்பு நிறம் மாறினால் நோய்த்தொற்று என அர்த்தமா?

எனது பிறப்புறுப்பு திடீரென நிறம் மாறித் தெரிகிறது. வெள்ளைப்போக்கும் அதிகமாக இருக்கிறது. நோய்த் தொற்றாக இருக்குமோ என பயமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன?

கருத்தரித்திருந்தால், அந்தக் காலத்தில் பிறப்புறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தில் மாறுபாடுகள் இருப்பதால் அவ்வப்போது அதில் நிறமாற்றம் ஏற்படும்.

சில சமயம் பிறப்புறுப்பு வெளுத்தும், நீலமும் சிவப்பும் கலந்தும், பிரசவ சமயத்தில் பழுப்பு நிறமாகவும் மாறும்.

கருப்பைக் கழுத்துப் பகுதியில் கருவின் அழுத்தத்தால் உராய்வுகள் ஏற்பட்டு புண்ணாவது உண்டு.

இதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படும். மற்றபடி, பிரசவத்துக்குப் பிறகு வெள்ளைப்போக்கு சரியாகிவிடும்.