Home சமையல் குறிப்புகள் ருசியான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?

ருசியான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?

43

இடியாப்பம் என்றவுடனேயே நம்முடைய நினைவுக்கு வருவது தேங்காய்ப்பாலும் ஆட்டுக்கால் பாயாவும் தான். இடியாப்பம் மட்டுமல்லாது இட்லி, தோசை, ஆப்பம் என டிபன் வகைகளுக்கு மிகச் சிறந்த காமினேஷனாக பாயா இருக்கும்.

அப்படிப்பட்ட சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?

தேவையானப் பொருட்கள் :

ஆட்டுக்கால் – 4
வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சை மிளக்காய் – நான்கு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தே. அளவு
தேங்காய் – அரை மூடி

எண்ணெய்
பட்டை, ஏலம், கிராம்பு – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புதினா – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காயை மைபோல அரைத்து கொள்ளவும்.

ஆட்டுக்காலை நல்ல தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடி எல்லாம் எடுத்த பின் நன்றாக கழுவி, குக்கரில் ஆட்டுக்கால் , நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போட்டு கிளறி நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு 6 விசில் வந்ததும் 40 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து வேகவிடவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்குங்கள். பின் கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டுக்கால் பாயாவில் கொட்டி இறக்கவும்.

கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் குறைவாகச் சேர்த்தாலே போதுமானது.

இதை இட்லி, ஊத்தப்பம், இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.