Home ஜல்சா மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… ஏன் நடிக்க கூடாது…! அவ்வளவு தான் அவள் வாழக்கை...

மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… ஏன் நடிக்க கூடாது…! அவ்வளவு தான் அவள் வாழக்கை முழுக்க பயங்கரம்..!!

27

capture( பெயர்கள் ஊர்கள் மாற்றப்பட்டுள்ளது ) அவள் பெயர் மல்லிகா நல்ல குடும்ப பெண்..நல்ல கணவர். இரண்டு பிள்ளைகள். சொந்தம் பந்தம்..வசதியான வாழ்க்கை என நன்றாகப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை.

மல்லிகாவிற்கு வாக்கிங் போகும் பழக்கம் உண்டு. நல்ல ட்ராக் சூட் போட்டு போனிடெயில் கொண்டையுடன் சென்ட் வாசனை கலந்து தனது ஸ்கூட்டியில் போய் இறங்கினாலே மொத்த பூங்காவும் மயங்கும்..!

அவளைப் பார்ப்பதற்காகவே நிறைய ஆண்கள்,பையன்கள் பார்க் பக்கம் வாக்கிங் வருவார்கள்..! தெரிந்தவர்களைப் பார்த்தால் புன்னகைப்பாள். அவ்வளவு தான், சொக்கிப் போவார்கள்.

அன்று விவேக் என்பவன் அங்கு தற்செயலாக வந்தான். அவன் திரைப்படத்திற்கு நடிகர், நடிகையரை அனுப்பும் ஒரு ஏஜன்ட்.மல்லிகாவைப் பார்த்ததும் அசந்து போனான். தானே முன்வந்து பேசினான்.

மேடம் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நடிக்கலாமே என்று கூற மல்லிகாவிற்கு வெட்கமாகப் போய்விட்டது. நானா..ஓ.நோ..! என்று கூறிவிட்டு போய்விட்டாள்.

ஒருவாரம் தொடர்ந்து முயற்சி செய்தான். புகழ்ந்தான், ஆசை வார்த்தைகள் கூறினான், விழுந்துவிட்டாள்.

கம்பெனி கம்பெனியாக கூட்டிப் போனான். அவளைப் பார்த்ததும் சிலர் போலி இயக்குனர்கள் ஜொள் விட்டனர்.வழிந்தனர். வித வித விதமாக ஆபாச உடைகள் கொடுத்து போட்டோ எடுத்தனர்.

சிலர் அரசல் புரசலாக தொட்டனர்..! சிலர் கேட்டே விட்டனர்..! அந்த ஏஜென்ட் பெரிய ஸ்டார் ஆகணும்னா கொஞ்சம் அட்ஜஸ் பண்ணித் தான் ஆகணும் என்று கூறி ஒரு குண்டைப் போட்டான்.

இதற்குள் நெட்டில் மல்லிகாவின் ஆபாச போட்டோக்கள் வெளியாக பெரிய பூகம்பமே வெடித்தது. உறவுகள் வந்தார்கள். பெரிய சண்டையே நடந்தது. நான் நடிப்பேன் யாரும் தடுக்க முடியாது என்று கூறி விட்டாள்.

அடுத்த நாள் புதுச்சேரியில் போட்டோ ஷூட். கிளம்பிப் போனாள்..! கடற்கரையில் போட்டோ ஷூட் நடந்தது..

ஒரு புது ஹீரோ கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான். கூச்சமாக இருந்தது..கட்டிப் பிடித்தான்..கசக்கினான்..!

பொறுத்துக் கொண்டாள். அன்று இரவு இயக்குனர் தனது அறைக்கு வரச்சொல்லி நடிப்பு சொல்லிக் கொடுத்தார்.

காதல் காட்சிகளில் நடிப்பது எப்படி என்று கட்டிப் பிடித்தார், கொஞ்சினார்..அரைகுறை ஆடைகள் கொடுத்தார்.

கூச்சமாக இருந்தாலும் அணிந்தாள் மல்லிகா..! முதலிரவுக் காட்சியில் நடிப்பது பற்றி அடுத்த கிளாஸ் எடுத்தார்.

கட்டி அணைத்தார்..கீழே சாய்த்தார்………..! முடிந்தது மல்லிகா வாழக்கை. மூன்று நாட்கள் தயாரிப்பாளர் என்று சொன்னவர், பணம் கொடுக்கும் ஹீரோ, அந்த ஏஜென்ட் அனைவரும் சூறையாடினார்கள்..!

மூன்றாவது நாள் வீட்டிற்கு சோர்ந்து போய் போனாள்…! வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் கணவர்..!

ஏஜெண்டுக்கு போன் செய்தாள். ஒரு கேவலமான லாட்ஜில் ரூம் போட்டுக் கொடுத்தான்..! அன்று இரவு இரண்டு பேர் பைனான்சியர் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். வேட்டையாடினார்கள்..! சிக்கிக் கொண்டோமோ என்ற பயம் முதன் முறையாக வந்தது…..! ஆம் சிக்கிக் கொண்டாள் மல்லிகா..!

மீளவே முடியாமல்..! இப்போது வாடி வதங்கி துணை நடிகையாக..காலத்தை ஒட்டிக் கொண்டிருகிறாள்..!!

கணவன்..பிள்ளைகள்..எங்கோ நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!