Home பெண்கள் அழகு குறிப்பு முகப்பருவை கையால் கிள்ளக்கூடாது என்று சொல்வது ஏன்?… இதுதான் காரணம்…

முகப்பருவை கையால் கிள்ளக்கூடாது என்று சொல்வது ஏன்?… இதுதான் காரணம்…

37

முகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பருவில் வெள்ளையாக உள்ள உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த பரு மிகவும் தீவிரமாக பெரிதாகிவிடும்.

பிம்பிளைக் கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த பிம்பிளைச் சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.

அசுத்தமான கையால் பருக்களைத் தொடும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

பருவைக் கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த பிம்பிள் மறையும் போது நீங்காத தழும்புகள் உண்டாகும்.

பருக்களை கையால் தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாகவே மறையத் தொடங்கிவிடும்.