Home பாலியல் மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிகளும்

மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிகளும்

44

மலட்டுத்தன்மை என்பது ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும்.
இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போதும், அல்லது வளர்ந்து வரும் சிசுவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையையும் குறிக்கும்.
இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றை பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைத்து, குழந்தைப் பேற்றைப் பெறுவதற்கான நவீன சிகிச்சை முறைகள் கீழே விளக்கப்பெற்றுள்ளன. இச் சிகிச்சைகளில் தமக்கு உதவக்கூடிய சிகிச்சையை தகுதியான மருத்துவ நிபுணர் மூலம் பெற்று; மலடி, மலடன் என்று வைகத்தார் ஏசாது, ஒதுக்கி வையாது மழலைச் செல்வங்களைப் பெற்று தாய், தந்தை என்ற பெருமையினைப் பெற்று மகிழ்வோடு வாழலாம்.
மலட்டு தன்மையினை இருவகையாக வகுத்துள்ளனர்.
1. கருவே தரிக்காமல் இருப்பது அல்லது கரு முட்டை விருத்தி அடையாதிருப்பதை முதல் நிலை மலட்டுத் தன்மை எனவும்; (சில பெண்களில் முட்டைகள் அடங்கிய சூலகமே இல்லாது பிறக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பூப்பெய்தமாட்டார்கள். அவர்கள் பிறப்பிலேயே மலட்டுத் தன்மை உள்ளவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.)
2. கருத்தரித்த பின்னர் கருச்சிதைவு ஏற்படுவது இரண்டாம் நிலை மலட்டுத் தன்மை (அடிக்கடி கருச்சிதைவு) எனவும் அழைக்கப்பெறும். இதற்கு கர்ப்பப்பை சிசுவை வளர்க்கும் தன்மை குன்றி இருப்பதனாலும் கரு பெலவீனமுற்று இருப்பதனாலும் உருவாகின்றது. இப் பிரச்சனைகளை தகுந்த வைத்திய சிகிச்சைமூலம் தவித்துக் கொள்ளலாம்.
மகப்பேற்றினை பெற்றிட முக்கியமாக இருக்க வேண்டியவை:
பெண்களில் கருக்கட்டும் தன்மை என்பது கர்ப்பமாகி குழந்தை பெறக்கூடிய தன்மை என்பதாகும். பூப்படைந்த ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் காலம் வரை மட்டுமே மகப்பேற்றை பெற்றுக்கொள்ள முடியும். பெண்ணின் இனப்பெருக்கக்காலம் பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை அமைந்திருக்கும். ஆனால் செயற்கை முறையில் 50 – 60 வயதுகளைத் தாண்டியும் மகப்பேற்றைப் பெற்றோர் இருக்கின்றார்கள்.
ஒரு பெண்ணின் கர்பப்பைகளுடன் இணைந்து பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சூலகங்கள் அல்லது சினைப்பைகள் காணப்படுகின்றன. குழந்தையாக பிறக்கும்போதே ஒரு பெண் 400,000 முட்டைகளை உருவாக்கக்கூடிய சூல்களுடன் பிறக்கின்றாள். அவள் பூப்பெய்தியதுடன், மாதவிடாய் சக்கரங்கள் ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு சக்கரத்தின் போதும், ஒரு சூலகம் ஒரு முட்டையை வெளிவிடும். இம்முட்டை பலோப்பியா குளாய் வழியாக கருப்பப்பையை நோக்கி வரும்போது, பலோப்பியா குளாயில் ஆணின் விந்துடன் இணைந்து கருக்கட்டியபின் கர்ப்பப்பையை அடைந்து கருப்பையின் சுவர்களில் பதிந்து சிசுவாக வளர ஆரம்பிக்கின்றது. முட்டைகள் கருக்கட்டக்கூடியதாக விருத்தியடைந்து வெளியேறுவதும், அவை பலோப்பியா குளாயை சென்றடைவதும் ஹோமோன் சுரப்புகளின் தன்மையில் தங்கியுள்ளது.
ஆண்களில் கருக்கட்டும் தன்மை என்பது, ஒரு பெண்ணில் முதிர்ச்சியடைந்து வெளிவரும் கருவை சினைப்படுத்தக் கூடிய விந்தணுவைப் பெற்றிருத்தலாகும். இது ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் விதைகளளில் உற்பத்தியாகும் விந்திலும் அதன் சேமிப்பிலும் தங்கியுள்ளது. அத்துடன் விந்து வெளியேற்றமும், வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையும் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றன. பெண்களை போலன்றி, ஆண்களில் தொடர்ச்சியாக புதிய, புதிய விந்தணுக்கள் உருவாகலாம். (பெண்களில் பிறப்பின்போது உருவாகிய முட்டைகள் மாத்திரமே விருத்தியாகும்)
மகப்பேறின்மைக்கான பொதுவான காரணிகள்:
1. பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சி (என்டோமீற்றியோசிஸ்).
3. பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.
4. பெண்களில் சூல் தோன்றாதிருத்தல் அல்லது ஒழுங்கின்றி தோன்றுதல்.
6. பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை ஆனின் விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.
7. பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டு செல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.
8. பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்தல்.
2. ஆண்களில் மாற்றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை (சக்தி) இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).
5. தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல். அல்லது முழுவளர்ச்சியடைந்த முட்டை வெளிவரும் காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளும் சந்தற்பம் இல்லாதிருத்தல் என்பவாம். பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.
ஆண்களின் மலட்டுத்தன்மையின் காரணங்கள்:
1. ஆணின் விந்தில் உயிர் அணுக்கள் இல்லா நிலை
2. உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை
3. ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து போகாத நிலை
4. விந்தனுவை பீச்சும் திறன் இல்லாமை
5. உயிரணுக்களை கொல்லக் கூடிய எதிர்மறைப் புரதங்கள் விந்திலே கலந்திருத்தல்.
6. உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் இருத்தல்
7. பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலுறாத தன்மை.
8. விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்
9. விரைப் பைக்குள் விரையானது திருகிக் கொண்டு இருத்தல் .
10. விரயில் காயம் ஏற்படுதல், வீக்கம், அடி படுதல் போன்றவற்றால் விரையில் ஏற்படும் பாதிப்பு .
11. விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு
12. முற்றிய காசநோய்
13. விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் பாதிப்படைவது, இதற்கு நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .
14. தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது, புகை மற்றவை )
விந்து பற்றிய சில தகவல்கள்
• ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
• வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
• வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
• ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
• புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
• ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
• ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
• விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
• பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)
பெண்ணின் முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்
1. முட்டை, மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் 14 – 15 நாட்களில் (சூலகம்) கருப்பையிலிருந்து முதிர்ந்த கருவாக வெளியேற வேண்டும். சில பெண்களிற்கு இது நிகழ்வதில்லை .
2. வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டிருக்கலாம். அல்லது உறுஞ்சி எடுக்கும் தன்மைய இழந்திருக்கலாம்.
3. இணைக்குழாயில் அடைப்புகள் இருக்கலாம்
4. கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம் பெறாத தன்மையை உடையதாயிருத்தல்
5. சினைப்பட்ட கருவானது தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல்.
6. கர்பப்பை வாயில் தொற்று நோய், பிறநோய்களின் பாதிப்புகள் காணப்படுதல் என்பனவாம்.
பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்னாப்பது ஆண்களில் காணப்பெறும் “X”, “Y” என்னும் குரோமோசோம்கள்:
உடலின் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி வடிவில் 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோசோம் ஜோடியிலும் உங்கள் தந்தையிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும், உங்கள் தாயிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும் உள்ளன. இதனாலே, நீங்கள் உங்கள் பெற்றோர்கள் இருவரையும் போல இருக்கலாம்.
கருத்தரித்தல் நிகழும் போது, தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம்களும் தாயிடம் இருந்து 23 குரோமோசோம்களும் ஒன்று சேரும். 23 ஆம் ஜோடியை தவிர மற்ற அணைத்து குரோமோசோம் ஜோடிகளும் பார்பதற்கு அசலாக இருக்கும். செக்ஸ் குரோமோசோம்கள் என்று இந்த கடைசி ஜோடியை அழைப்பார்கள் ஏனென்றால், அவை ஒருவரின் பாலினத்தை நிரூபிப்பனர்.
ஆண்களிடமும் பெண்களிடமும் X குரோமோசோம் மற்றும் Y குரோமோசோம் என்று இரண்டு செக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. பெண்களிடம் இரண்டு X குரோமோசோம்களின் பிரதிகள் இருக்கும். ஆண்களிடம் ஒரு X குரோமோசோமின் பிரதியும்,ஒரு Y குரோமோசோமின் பிரதியும் இருக்கும்.

ஒரு தாயிடமிருந்து அவளது X குரோமோசோம்களில் ஒன்று தனது குழந்தைக்கு செல்லும். தந்தையிடமிருந்து, X அல்லது Y குரோமோசோம் செல்லும்.தந்தையிடமிருந்து Y குரோமோசோம் குழந்தைக்குச் சென்றால், அது ஆண் குழந்தையாய் பிறக்கும். X குரோமோசோம் சென்றால், அது பெண் குழந்தையாய் பிறக்கும். இந்த சீரற்ற செயல்பாட்டில், குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது தந்தையின் X அல்லது Y குரோமோசோம்களே.
சினைமுட்டைப்பை(ovary – சூலகம்) மாற்று சிகிச்சை
சில வேளைகளில் குறைபாடுடைய குழந்தைகள் பிறந்து பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு இருப்பதனால் ஏற்படுவதாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. சில பெண்களின் சூலகங்களில் இருந்து வெளிவரும் முட்டைகளில் ஒரே ஒரு “X” குரோமோசோம் மட்டுமே இருப்பதனால் பிள்ளைகள் குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள, அறிவு குறைந்த, அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிள்ளைகள் பிறக்கும் என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான ஒரு “X” குரோமோசோம் மட்டுமே வெளிவிடும் சினைமுட்டை பை என அழைக்கப்பெறும் சூலகத்தை நீக்கி மாற்று உறுப்பு சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம். அதற்கு 35 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் பெற்ற தாய் ஒருவரின் சூலகங்களில் ஒரு சூலகம் பெற்றப்பெற்று சத்திர சிகிச்சை மூலம் மாற்றீடு செய்யப் பெறுகின்றது. இச் சிகிச்சை முறை இந்தியாவில் 2002 முதல் வெற்றிகரமாக செய்யப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு. ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன .
ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு ஆணிலே இருந்து வெளிவரும் விந்து (sperm) எனப்படும் உயிரணு பெண்ணின் முட்டையை (ova) அடைந்து கருக்கட்டப் பட வேண்டும். பெண்களிலே முட்டையானது மாதவிடாய்க் காலத்தின் நடுப்பகுதியிலே சூலகம்(ovary) எனப்படும் உறுப்பில் இருந்து வெளிவரும் , இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அவளின் பெண் உறுப்பின் உள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டால் அது அந்த முட்டையை கருக்கட்ட சந்தர்ப்பம் உள்ளது.
பெண்களிலே சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே (ova) வெளிவரும். ஆனால் ஆண்களில் அப்படியல்ல ஒரு நேரத்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே முட்டையை சென்றடைந்து கருக்கட்டி குழந்தையாகும்.
இந்த விந்தணுவானது ஆணின் உறுப்பிலே இருந்து வெளிவரும் சுக்கிலப் பாயம் (seminal fluid) எனப்படும் திரவத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும். அதாவது ஆண் உடலுறவின் போது வெளியிடும் திரவமானது சுக்கிலப் பாயம்(seminal fluid) எனப்படுகிறது .
இந்த சுக்கிலப் பாயத்திலே விந்துகளோடு அவை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான பதார்த்தங்களும் நிரம்பி இருக்கும். ஆணின் குழந்தை உருவாக்குவதற்குரிய தன்மையை அறிய இந்த சுக்கிலப் பாயம் பயன் படுத்தப்படுகிறது.
சுக்கிலப் பாயத்தில் இருக்கும் விந்துகளின் எண்ணிக்கை(sperm count) , அந்த விந்துகளின் அசையும் தன்மை(motility), அந்த விந்துகளின் உருவ அமைப்பு(morphology) என்பவையே முக்கியமாக சோதிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருக்கும் போதே அந்த ஆணால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.
(விந்துகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும். பெண் இனப்பெருக்கத்தொகுதியில் 24-72 மணி நேரம் உயிர் வாழும். யோனி கால்வாயினுள் இடப்பட்ட விந்து கருப்பையினுள் நுளைந்து கருவைத் தேடிச் செல்ல்லக்கூடியதாக இருத்தல் வேண்டும்).
அதாவது விந்துகளின் எண்ணிக்கை மட்டும் தேவையான அளவு இருந்தால் போதாது அவை உருவ ரீதியாக உகந்ததாகவும், அசையும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.