Home ஜல்சா மனைவிக்கு முன் மாமியாருடன்… உகண்டா பழங்குடியின் உவ்வேக் கலாச்சாரம்!

மனைவிக்கு முன் மாமியாருடன்… உகண்டா பழங்குடியின் உவ்வேக் கலாச்சாரம்!

48

இன்றளவும் அதிகமாக பழங்குடி மக்கள் வாழும் நாடுகள் பலவன ஆப்ரிக்காவில் உள்ளன. இவர்களது நாகரீகம், கலாச்சாரம் போன்றவை இன்றளவும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். அதில் சிலவன சுவாரஸ்யமாகவும், சிலவன கூச்சப்படும் வகையிலும் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தில் விசித்திரமாக காணப்படுவது அவர்களது தாம்பத்தியம் சார்ந்த பழக்கங்கள் தான். கம்போடியாவின் கிரௌன் எனும் பழங்குடி மக்களின் விசித்திர பழக்கத்தை நாம் இதற்கு முன்னர் கண்டுள்ளோம். ஆனால், அதை காட்டிலும் மிக விசித்திரமாக, மோசமாக காணப்படுகிறது உகண்டாவின் அங்கோல் மக்களின் முதலிரவு கலாச்சாரம்…

ஏன் இப்படி? மணமகளுக்கு அவர்கள் அளிக்கும் திருமண பரிசே இதுதான் என அவர்கள் கூறுகின்றனர். மணமகளுக்கு அவர்கள் தான் தாம்பத்தியம் குறித்து கற்பிக்க வேண்டுமாம்.

கடமை! மணமகள் ஒரு நல்ல மனைவியாக எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் கணவனிடம் எப்படி கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும் என கற்பிக்க வேண்டியது இவர்களது கடமையாக பார்க்கின்றனர்.

அதுவும் தானாம்! அதே போலமணமகன் கட்டில் வித்தையில் சிறந்தவரா? இல்லையா? என்பதையும் கணிக்க வேண்டியது இந்த பழங்குடி அத்தைமார்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

நேரடியாக பார்த்தல்… இவர்கள் மணமகன், மணமகளுடன் பேசி அல்லது அவர்கள் கூடுவதை நேரடியாக கண்டு அவர்களுக்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக் கூறுவார்களாம். திருமணநாள் இரவில் இவர்கள் மணமக்களுடன் சேர்ந்து தங்குவதையும் பழக்கமாக வைத்துள்ளனர்.

இதுமட்டுமல்ல… இதுமட்டுமல்ல… உகாண்டாவில் இதுபோல பல இனத்தவரின் கலாச்சாரங்கள் வாய்ப்பிளக்கும் படி தான் இருக்கிறது. பெண்ணுறுப்பு சிதைப்பு, உயிருடன் இருக்கும் போதே அவரது விருப்பபப்டி சமாதி எழுப்புதல் என இப்படி பலவன இருக்கின்றன.